என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "driver"
- குறைவான பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் பிரச்சினைகளால் சரியாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை.
- தினமும் ரூ.1,500 வரை சம்பாதிக்க முடிவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஒடிசாவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் பட்ரா. 35 வயதான இவர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் அருகே நாயாகார்க் பகுதியில் கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தனது 3 சக்கர எலெக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றி உள்ளார். ஆரம்பத்தில் டீசலில் இயங்கும் ஆட்டோவை ஓட்டிய இவருக்கு தினமும் ரூ.400 வரை எரிபொருள் செலவாகியதால் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் ஆட்டோ வாங்கி உள்ளார்.
ஆனால் குறைவான பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் பிரச்சினைகளால் சரியாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை. அப்போது அவரது 11 வயது மகனின் அறிவுரைப்படி எலெக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றி உள்ளார். இதன்மூலம் சிங்கிள் சார்ஜில் 140 கிலோ மீட்டர் தூரம் வரை ஆட்டோ இயங்குவதாகவும், இதனால் தினமும் ரூ.1,500 வரை சம்பாதிக்க முடிவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.
- சிவகங்கை மாவட்டத்தில் டிரைவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
- சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் விருதுநகரை சேர்ந்த சிவா என்பவர் ஜே.சி.பி. டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்ைல. இதுகுறித்து அவரது மனைவி மாதா கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ள முலாக்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமரன். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது31). இவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் இருந்து ராஜேஸ்வரி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயணிகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் பணியை தவிர இதர வேலைகளை மேற்கொள்ள டிரைவர்கள் இல்லாததால் டெப்போக்களில் பற்றாக்குறை ஏற்பட்டது.
- புதிதாக டிரைவர்கள் நியமிக்கபட்டதால் தொ.மு.ச. உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களும் அதிருப்தியில் உள்ளன.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3233 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 32 லட்சம் பேர் பயணம் செய்கிறார்க்ள. கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போது தான் பஸ் பயணிகளின் எண்ணிக்கை கடந்த கால அளவை எட்டியுள்ளது.
மகளிர் இலவச பயணத்திற்கு 1559 பேருந்துகள் விடப்பட்டுள்ளன. இவற்றில் பயணம் செய்யும் பெண்கள் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை தினமும் 10 லட்சம் பெண்கள் இலவசமாக பயணித்த நிலையில் தற்போது 11.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
பயணிகள் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்தாலும் கூட பஸ் டிரைவர், கண்டக்டர் பற்றாக் குறையால் முழுமையான அளவு பேருந்துகளை இயக்க முடியாத நிலைஏற்பட்டது.
பயணிகள் பஸ்களை தவிர டெப்போவில் டீசல் பிடித்தல், பஸ்களை முறைப்படுத்தி விடுதல், உதிரி பாகங்கள் வாங்க செல்லுதல், தண்ணீர் லாரி இயக்குதல், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு எப்.சி.க்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் டிரைவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். இதனால் டிரைவர்கள் பஸ்களை இயக்க முடியாத நிலை உருவானது.
பயணிகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் பணியை தவிர இதர வேலைகளை மேற்கொள்ள டிரைவர்கள் இல்லாததால் டெப்போக்களில் பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்த பணிகளை மேற்கொள்வதற்கு 500 டிரைவர்கள் ஒப்பந்த அடிப்படியில் நியமிக்க போக்குவரத்துகழகம் அரசின் அனுமதி பெற்று டெண்டர் கோரியது. அதன்பேரில் ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டு 500 டிரைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த டிரைவர்கள் மூலம் டிரைவர்கள் பற்றாக்குறை பிரச்சினை தற்காலிகமாக தீர்வு செய்யப்பட்டுள்ளது. இதர பணிகளில் ஈடுபட்டு வந்த டிரைவர்கள் இனி முழுமையாக பயணிகள் பஸ்களை மட்டும் இயக்குவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் முதல்முறையாக டிரைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்பளத்துடன் தொழிலாளர் வைப்பு நிதி, இன்சூரன்ஸ் மற்றும் இதர சலுகைகள் உள்பட ரூ. 22 ஆயிரம் சம்பளம் அந்த நிறுவனம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில் ஒப்பந்த டிரைவர்கள் நியமிக்க கூடாது என போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. புதிதாக டிரைவர்கள் நியமிக்கபட்டதால் தொ.மு.ச. உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களும் அதிருப்தியில் உள்ளன.
- போக்குவரத்து விதி மீறிய தனியார் பஸ் டிரைவர்- கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தேவகோட்டை போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை-திருப்பத் தூர் சாலையில் ஒத்தக்கடையில் இருந்து ராம்நகர் வரை மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவல கங்கள், நீதிமன்றங்கள் உள்ளன. இதனால் இந்தபகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பஸ் நிறுத் தங்களை போலீசார் சில மாற்றங்களை செய்தனர். மேலும் நகர் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன் ஆகியோர் சாலையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அவ்வப் போது அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த சாலையில் தனியார் பஸ்கள் அதிவேகமாக வரு வதாகவும், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவ தில்லை எனவும் புகார்கள் வந்ததன் அடிப்படையில் ராம்நகரில் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன், ஏட்டு யோகராஜா ஆகியோர் சோதனை நடத்தினர்.
அப்போது போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் இயக்கப்பட்ட தனியார் பஸ்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் டிரைவர்கள், கண்டக்டர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- 3 பேர் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
- விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் தாக்கப்பட்டது தெரியவந்தது.
கோவை,
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் 22 வயது வாலிபர். இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
வாலிபர் தினசரி கீரணத்தம் மற்றும் பீளமேட்டில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை அழைத்து செல்வது வழக்கம். அப்போது வாலிபருக்கு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் குனியமுத்துரைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். அப்போது வாலிபர் இளம்பெண்ணுக்கு ரூ. 3 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். அதை திருப்பி கேட்ட போது அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் இளம்பெண் வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். சம்பவத்தன்று வாலிபர் கீரணத்தம் தொழில்நுட்ப பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வாலிபர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் தாக்கப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிப்-டாப் வாலிபர் காரில் ஏறியதும் கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள மதுபாருக்கு சென்று மது குடித்தார்.
- கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் டிரைவர் சுதிரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த மர்மநபர் ஒருவர் தான் கீழ்ப்பாக்கம்அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் என்றும் ஆன்மிக சுற்றுலா செல்ல வேண்டும் என்றும் கூறி ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை பதிவு செய்தார். இதையடுத்து டிரைவர் சுதிர் என்பவர் காருடன் கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வந்தார். அங்கு தயாராக நின்ற டிப்-டாப் வாலிபர் காரில் ஏறியதும் கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள மதுபாருக்கு சென்று மது குடித்தார். மேலும் உடன் வந்த டிரைவர் சுதிருக்கு ஏராளமான அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட வைத்தார்.
சிறிது நேரத்தில் அவர், தன்னுடன் பணிபுரிந்து வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு அவசர தேவைக்காக உடனே "கூகுள் பே" மூலம் ரூ.9ஆயிரம் அனுப்ப வேண்டும். ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து தந்து விடுகிறேன் என்று கூறினார். இதையடுத்து சுதிர் தனது உரிமையாளரிடம் போன் செய்து வாலிபர் கொடுத்த எண்ணிற்கு "கூகுள் பே" மூலம் ரூ.9 ஆயிரம் அனுப்பினார்.
பின்னர் வெளியே சென்ற அந்த நபர் பணத்துடன் திரும்பி 500 ரூபாய் நோட்டுக்களாக ரூ.9 ஆயிரம் பணத்தை டிரைவர் சுதிரிடம் கொடுத்தார். சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து நைசாக சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து பாரில் மதுகுடித்த பில் தொகை ரூ.2 ஆயிரம் கட்ட வேண்டும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். உடனே சுதிர் தன்னிடம் இறந்த ரூ.500 நோட்டுகளை கொடுத்தபோது அவை கள்ளநோட்டுகள் என்பது தெரிந்தது. டாக்டர் போல் நடித்து நூதனமுறையில் கள்ளநோட்டுகளை கொடுத்துவிட்டு டிப்-டாப் வாலிபர் தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் டிரைவர் சுதிரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் இருந்த கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் குமாா் என்பவருக்கும் இடப்பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது
- இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
காங்கயம்:
காங்கயம், காமராஜா் நகரைச் சோ்ந்தவா் லோகநாதன் (55). இவா் சிற்றுந்து (மினி பேருந்து) ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவருக்கும், பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் குமாா் என்பவருக்கும் இடப்பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் குமாரின் மகன் மணிகண்டன் (24) லோகநாதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, லோகநாதன் அளித்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா்.
- பாரதி ஓட்டிச் சென்ற லோடு வேன் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.
- பாரதியை மூட்டை தூக்கும் கொக்கியால் வீரமணி தாக்கினார்.
நெல்லை:
ஆலங்குளம் பட்டேல் தெருவை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் பாரதி(வயது 26). இவர் லோடு வாகன டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டுக்கு லோடு ஏற்றி வந்தார்.
மார்க்கெட்டின் உள் பகுதிக்குள் சென்று கொண்டிருந்தபோது எதிரே லோடு மேனாக வேலை பார்த்து வந்த சந்திப்பு குறுக்குத்துறையை சேர்ந்த வீரமணி என்பவர் வந்துள்ளார். அவர் மீது பாரதி ஓட்டிச் சென்ற லோடு வேன் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த வீரமணி கையில் வைத்திருந்த மூட்டை தூக்கும் கொக்கியால் பாரதியை தாக்கினார். இதில் காயம் அடைந்த பாரதி தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பஸ் நிலையமே போராட்ட களம் போல் காட்சியளித்தது.
- தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரை மடக்கி பிடித்து அவர்களை தாராபுரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 36). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று இரவு பழனியில் இருந்து பஸ்சை ஓட்டிக் கொண்டு தாராபுரம் பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரை சுற்றி வளைத்த 7 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கினர்.
அதனை தங்களது செல்போனில் படம் பிடித்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேரையும் அந்த கும்பல் தாக்கியது. தட்டிக்கேட்ட தனியார் பஸ்சில் பயணித்த 2 பெண்கள் தள்ளு முள்ளுவில் சிக்கி காயம் அடைந்தனர். பஸ் நிலையமே போராட்ட களம் போல் காட்சியளித்தது. இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரை மடக்கி பிடித்து அவர்களை தாராபுரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர் தாராபுரம் வீராட்சிபுரத்தை சேர்ந்த குப்புசாமி மகன் செல்வராஜ் ( 44) என்பதும் , தாராபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. தனியார் பஸ் டிரைவர் பூபதிக்கும் அரசு பஸ் டிரைவர் செல்வராஜ்க்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு பஸ் நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்சை எடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பூபதியும், செல்வராஜூம் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அவர்கள் மீது தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகாரும் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அரசு பஸ் டிரைவர் செல்வராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 7 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் தனியார் பஸ் டிரைவர் பூபதி, ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்தனர்.
அவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தாராபுரம் டி.எஸ்.பி., கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் இரவு தாராபுரம் பஸ் நிலையம் போர்க்களம் போல் காட்சியளித்ததால் பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- பஸ் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வோம் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
தஞ்சாவூர்:
பெரம்பலூர் மாவட்டம் பாடலூரை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 39 ) அரசு பஸ் டிரைவர். திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (44) அரசு பஸ் கண்டக்டர். இவர்கள் தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை வழித்தட பஸ்சில் பணிபுரிகின்றனர்.
நேற்று தஞ்சை- பட்டுக்கோட்டை வழித்தட பஸ்சை இயக்கினர். இரவில் கடைசி நடையாக பட்டுக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பயணிகளை இறக்கிவிட்டு பஸ்சை தஞ்சை ஜெபமாலைபுரம் பணிமனைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் பயணிகளிடம் வசூலித்த டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை பணிமனை அலுவலர்களிடம் சமர்பித்தனர். இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் இருவரும் வீட்டுக்கு செல்வதற்காக அருகே உள்ள பஸ் நிறுத்தம் சென்று அந்த வழியாக வரும் அரசு பஸ்சில் ஏறி புதிய பஸ் நிலையம் செல்ல முடிவு செய்தனர். அதன்படி இருவரும் பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
சீனிவாசபுரம் செக்கடி பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்து நிறுத்தி பணம் கொடுக்குமாறு மிரட்டினர். இதற்கு அழகுத்துரை, ஆறுமுகம் மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் சரமாரியாக இருவரையும் தாக்கி ரூ.3500 ரொக்கம், வெள்ளி செயின், வாட்ஜ் ஆகியவற்றை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அழகுத்துரை, ஆறுமுகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து இன்று அதிகாலை 4 மணியளவில் ஜெபமாலைபுரம் பணிமனையில் இருந்து 50-க்கும் மேற்ப்பட்ட பஸ்களை இயக்காமல் ஏராளமான டிரைவர், கண்டக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பஸ் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சுமார் 1 மணி நேரத்திற்கும் நேரமாக இந்த போராட்டம் நீடித்தது.
தகவல் அறிந்து போக்குவரத்து அதிகாரிகள், மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வோம் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்று தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து பஸ்களை இயக்கினர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- லாரியின் முன் பகுதியில் தாா்ப்பாய் தொங்கி கொண்டிருந்துள்ளது.
- இரவு 7 மணிக்கு சங்ககிரிக்கு திரும்புவதற்காக லாரியை ஸ்டாா்ட் செய்துள்ளாா்.
காங்கயம் :
மதுரை மாவட்டம், இரவாடநல்லூரைச் சோ்ந்தவா் கண்ணன் (வயது 38). இவா், சங்ககிரியில் உள்ள தனியாா் டிரான்ஸ்போா்ட் கம்பெனியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் காங்கயத்தில் உள்ள அரிசி ஆலைக்கு நெல் லோடு இறக்குவதற்காக புதன்கிழமை வந்துள்ளாா். நெல் லோடு இறக்கிய பின் இரவு 7 மணிக்கு சங்ககிரிக்கு திரும்புவதற்காக லாரியை ஸ்டாா்ட் செய்துள்ளாா்.
அப்போது லாரியின் முன் பகுதியில் தாா்ப்பாய் தொங்கி கொண்டிருந்துள்ளது. பின்னா், லாரியில் இருந்து இறங்கி தாா்ப்பாயை சரி செய்துள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக முன்னோக்கி நகா்ந்த லாரி எதிரே இருந்த சுவரின் மீது மோதியது. இதில், ஓட்டுநா் கண்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக காங்கயம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
- திருமணம் ஆகாத இளம் பெண்ணை காதலித்து, திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
- பெண்ணின் பெற்றோா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
காங்கயம் :
வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (வயது 38). திருமணமான இவா், தனியாா் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.
இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காங்கயம் பகுதியைச் சோ்ந்த 23 வயது திருமணம் ஆகாத இளம் பெண்ணை காதலித்து, திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, இளம் பெண்ணை ஏமாற்றிய நபரை புதன்கிழமை கைது செய்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்