என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிரைவர் உள்பட 2 பேர் மாயம்
- சிவகங்கை மாவட்டத்தில் டிரைவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
- சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் விருதுநகரை சேர்ந்த சிவா என்பவர் ஜே.சி.பி. டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்ைல. இதுகுறித்து அவரது மனைவி மாதா கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ள முலாக்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமரன். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது31). இவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் இருந்து ராஜேஸ்வரி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






