என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "DMK Meeting"
- தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
- தலைமை கழக பேச்சாளர் சிங்கை சவுந்தர் அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி பேசினார்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சிங்கை சவுந்தர் அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி பேசினார். கூட்டத்தில் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா க.மனோகரன், சாமளாபுரம் பேரூர் தி.மு.க. அவைத்தலைவர் ராமசாமி , தி.மு.க. சாமளாபுரம் பேரூர் துணைச்செயலாளர் தியாகராஜன்.
சூலூர் தொகுதி தகவல்தொழில்நுட்ப அணி வினோஜ் குமார், இளைஞர் அணி கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், ரங்கசாமி, சன்முகம்,இருதயசாமி,கார்த்தி, ஆறுமுகம், மற்றும் வார்டு செயலாளர்கள், கழக நிர்வாகிகள்,உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- வேட்பாளர் தேர்வு, வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
- கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு இச்சிப்பட்டியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தநிலையில் பல்லடம் கிழக்கு ஒன்றியதி.மு.க.அலுவலகத்தில் ஒன்றிய பொறுப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளர் தேர்வு, வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் கொ.ம.தே.க. மாவட்டசெயலாளர் கரைப்புதூர் ராஜேந்திரன், காங்கிரஸ் வட்டார தலைவர் புண்ணியமூர்த்தி,
இந்தியக் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பரமசிவம், மதிமுக. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருணாநிதி பிறந்தநாள் விழா வருகிற 3-ந்தேதி பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் கருணாநிதி பிறந்தநாள் விழா, புதிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடக்கிறது.
இதற்கான மேடை அமைப்பு உள்ளிட்ட பணிகளை தென்சென்னை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள்.
இந்த விழாவுக்காக 120 அடியில் பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. அதை 3 மேடைகளாக வடிவமைக்கிறார்கள். நடுமேடையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அமர்வார்கள்.
இன்னொரு மேடையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 38 எம்.பி.க்கள் அமர்வார்கள். மற்றொரு மேடையில் புதிதாக வெற்றிபெற்ற தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்.
மேடையின் முன்பு 100 அடி உயரத்தில் தி.மு.க. கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. அதேபோல் 100 அடி உயரத்தில் தி.மு.க. தலைவரின் வண்ண மின்விளக்கு கட்-அவுட் அமைக்கப்படுகிறது.
மேலும் 70 அடி உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட தி.மு.க. கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் பகுதியில் உதயசூரியன் வடிவ ஒளி விளக்குகள் அமைக்கப்படுகிறது.
இதேபோல் மேடை அருகில் 70 அடி உயரத்தில் 12 கூட்டணி கட்சிகளின் கொடிக்கம்பங்களும் இடம் பெறுகிறது. இந்த கம்பங்களில் ஏற்றுவதற்கான அனைத்து கட்சிகளின் கொடிகளும் பூனாவில் தயாராகி வருகிறது.
சைதாப்பேட்டையில் கலைஞர் பொன்விழா வளைவு உள்ளது. 45 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த வளைவையும் கருணாநிதி பிறந்தநாளையொட்டி புதுப்பிக்கின்றனர். அந்த பணிகளை மாவட்ட செயலாளரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். அவருடன் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருணாநிதி சிலை திறப்பு விழா, பொதுக்கூட்ட கட்- அவுட்டுக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கான ஆதாரமாக வாட்ஸ்-அப் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
இதற்கு தி.மு.க. மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வாட்ஸ்அப்பில் வந்ததை எல்லாம் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசினால் அமைச்சர் மீதும் எவ்வளவோ குற்றம் சாட்டலாம். ஆனால் தி.மு.க.வினர் என்றைக்கும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.
அமைச்சரின் பேச்சில் என்ன தெரியவருகிறது என்றால் கருணாநிதி சிலை திறப்பு விழாவை பார்த்து ஆளுங்கட்சி ஆட்டம் கண்டு அஞ்சி நடுங்கி போய் இருப்பது தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DMK #TNMinister #Jayakumar
வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பேர் வீதம் 40 தொகுதிக்கு 80 நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் சில மாவட்டச் செயலாளர்கள் சீனியர்களாக இருப்பதால் தேர்தல் பொறுப்பாளர்களாக உள்ளவர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்து விடக்கூடாது என்பதில் கட்சி மேலிடம் கவனமாக உள்ளது.
இதன் காரணமாக தொகுதி பொறுப்பாளர்கள்- மாவட்டச் செயலாளர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.
மாவட்டக் கழக செயலாளர்கள் பொன்முடி, எ.வ. வேலு, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், சுந்தர், ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர் உள்ளிட்ட 65 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
இவர்களுடன் தொகுதி பொறுப்பாளர்களான பல்லாவரம் இ.கருணாநிதி , தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, ப.ரங்கநாதன், சி.வி. எம்.பி.எழிலரசன், டி.ஆர். பி.ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொன்.முத்துராமலிங்கம், கடலூர் இள.புகழேந்தி, மு.சண்முகம், காசிமுத்து மாணிக்கம், ஜின்னா, கே.பி.பி.சாமி, தாயகம் கவி, மஸ்தான், பிச்சாண்டி, சுகவனம், பொங்கலூர் பழனிசாமி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பூங்கோதை, ஆலடி அருணா, கருப்பசாமி பாண்டியன், ஜோயல், மைதீன்கான் உள்பட 80 பொறுப்பாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி தொகுதி பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், மாவட்டச் செயலாளர்களின் அணுகுமுறை குறித்து மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் விரிவாக பேசினார்.
மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். #DMK #MKStalin
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர், கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு திருச்செங்கோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், அவைத்தலைவர் நடன சபாபதி தலைமையில் நடைபெறுகிறது.
இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. சார்பில், மாநில சுயாட்சியை வலியுறுத்தும் மாநாடு தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன. பா.ஜனதா தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார். காங்கிரஸ் கட்சி அந்தந்த மாநிலங்களில் நிலவும் தற்போதைய சூழலை தங்களுக்கு சாதகமாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது.
இதற்கிடையே, பா.ஜனதா, காங்கிரசுக்கு மாற்றாக 3-வது அணி உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர். இதனைத்தொடர்ந்து சந்திரசேகரராவ், சமீபத்தில் சென்னை வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது மாநில கட்சிகளின் அதிகாரத்தை நிலைநிறுத்துவது பற்றி அவர்கள் பேசிக்கொண்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் மாநில சுயாட்சியை வலியுறுத்துவது தொடர்பான மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த தி.மு.க. திட்டமிட்டு உள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி அந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். நேரிலும் கடிதம் வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்குமாறு ராகுல்காந்தியை திருமாவளவன் நேரில் அழைத்த நிலையில், மு.க.ஸ்டாலினும் ராகுல்காந்திக்கு தனியாக அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியலில் பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்