search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆ.ராசா"

    • வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
    • நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது

    கோவை அவிநாசியில், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன். மலைகளின் அரசியாகவும், நீர் வீழ்ச்சியின் எழுச்சியாகவும். மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாகவும் உள்ள இடத்திற்கு வந்துள்ளேன்.

    நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது. ஒரே ஒரு கூட்டம் டோட்டல் பாஜகவும் குளோஸ். ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்துவிட்டது.

    தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டுமே ஆள முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். ராகுல் எந்த அளவுக்கு தமிழ்நாட்டை மதிக்கிறார். என்பது அவரின் பேச்சின் மூலம் தெரிந்திருக்கும்.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால், முதலில் இட ஒதுக்கீட்டைதான் ரத்து செய்வார். ஏனென்றால் சமூகநீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்க காரணம், இந்திய அரசியலமைப்பு சட்டம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அந்த அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்.

    திருப்பூரில் ஜி.எஸ்.டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை, பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதுதான் பாஜக மக்களை மதிக்கும் லட்சணம். இதுதான் பாஜக பெண்களுக்கு கொடுக்கிற மதிப்பு. மக்களை மதிக்காமல் அராஜகம் செய்கிற பாஜகவினர் திருப்பூரை மணிப்பூராக்கிவிடுவார்கள். மோடியும், பாஜகவும் வீட்டுக்கும் கேடு; நாட்டுக்கும் கேடு.

    கலவரம் செய்வது பாஜகவின் DNAவில் ஊறிப் போன ஒன்று. அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும்.. நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது" என்று தெரிவித்தார்.

    மோடி ஆட்சியில் பத்திரிக்கையாளர்களும், ஊடக நிறுவனங்களும் நிம்மதியாக செயல்பட முடியவில்லை. பத்திரிக்கையாளர்கள் படுகொலையை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. மோடி ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டதன் விளைவுதான், ஊடக சுதந்திரத்தில் 161 இடத்தில் இந்தியா இருக்கிறது. நமது பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி ஏற்படுத்திய அவமானம் இது

    பன்னீர் செல்வத்தை தர்ம யுத்தம் நடத்த வைத்தது, பழனிசாமியை முதலமைச்சராக கொண்டுவந்தது, இரு துருவங்களாக இருந்த பன்னீரையும், பழனிசாமியையும் சேர்த்தது, தினகரனை கைது செய்து தங்களின் அடிமையாக மாற்றியது, அரசியலுக்குள் சசிகலாவை வரவிடாமல் தடுத்தது, தற்போது பன்னீரையும், தினகரனையும் மிரட்டி தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பாஜகதான். இப்படி டிவி சீரியல்களில் வருவதுபோல், திடீர் திடீர் என காட்சிகளை மாற்றி சதி நாடகம் நடத்துகிறது பாஜக" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

    • 10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை.
    • தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜன நாயக கூட்டணி சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை ஊட்டியில் உள்ள பாஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றி என்பது உறுதியாகி விட்டது. அதுவும் பிரதமர் பிரசாரத்திற்கு வந்து சென்ற பின்னர் இங்கு பா.ஜ.க மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் தொகுதியாக இது இருக்கும்.

    10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை. நீலகிரியில் உள்ள மக்கள் மீது அவருக்கு எந்தவித அக்கறையும் இல்லை. அவர்களை பற்றியும் அவர் கவலைப்படுவதோ அல்லது இங்குள்ளவர்களை சிந்திப்பதோ கிடையாது.

    ஆ.ராசா நீலகிரி தொகுதியில் எந்த பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்றாலும் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட குன்னூர் பகுதியில் பிரசாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள் இங்கு நீங்கள் பிரசாரத்திற்கு வர வேண்டாம் என கூறி அங்கிருந்து போக சொல்லி விட்டனர். அந்தளவுக்கு ஆ.ராசா மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இவர் பெண்கள், கடவுள்கள் பற்றி அவதூறு பேசி வருகிறார்.

    2009-ம் ஆண்டு முதல் இங்கு போட்டியிட்டுள்ள ஆ.ராசா இதுவரை தனது வாக்காளர் அடையாள அட்டையை கூட நீலகிரி தொகுதிக்கு மாற்றவில்லை. சமூகநீதி பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கோ எந்த தகுதியும் இல்லை.

    அருந்ததியர் மக்களுக்கு என்று உள்ள தனி தொகுதி நீலகிரி. அந்த தொகுதியில் கூட, அருந்ததியர் வேட்பாளருக்கு தி.மு.க.வினர் இடம் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் சமூக நீதி பற்றி பேச இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.

    நீலகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவர் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார். இதுபற்றி பா.ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்படும். 24 மணி நேரமும் பறக்கும் படையினர், தேர்தல் அதிகாரிகள் என்னையே கண்காணிப்பு கேமராவுடன் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஆனால் ஆ.ராசாவை அவர்கள் கண்டு கொள்வதே கிடையாது. அவரின் வாகனத்தை கூட பறக்கும் படையினர் முறையாக சோதிப்பது கிடையாது.

    தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. தங்கள் மீது குறை சொல்லா அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது அப்படி தெரியவில்லை.

    இங்குள்ள தேர்தல் அதிகாரிகள் பலர் தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் போல செயல்படுகிறார்கள். இன்னும் சிலர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் வேலை பார்க்கும் ஆளாகவே செயல்படுகின்றனர். ஆ.ராசா என்ன சொன்னாலும் கேட்பவர்களாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இருக்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி தேர்தல் நியாமாக நடக்கும் என்று சொல்ல முடியும். பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டபோது கூட சான்றிதழ்கள் கேட்டு அலைக்கழித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.
    • பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது வைத்த குற்றச்சாட்டிற்கு விளக்க அளிக்க முடியவில்லை.

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூடடம் கோவை ராஜவீதி தேர்முட்டி திடலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் கலந்து ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் கொடுத்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் என அறிவித்து, அதனை செய்தும் காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    பிரதமர் மோடி பல்லடத்திற்கு வந்துள்ளார். ஆனால் இதுவரை கலவரம் நடந்த மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவில்லை. ஏனென்றால், அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பா.ஜ.க காரர்.

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு மணிப்பூர் மாநிலத்தின் முதல்-மந்திரி அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. எங்கள் மாநிலத்தில் நடப்பது தான் என்கிறார். இந்த சம்பவத்திற்கு பிறகும், பா.ஜ.க முதல்-மந்திரி ராஜினாமா செய்தாரா?

    பாராளுமன்றத்தில் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் ஒதுக்கப்படும். இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். இதுவரை பிரதமர் மோடி கேள்வி நேரத்திற்கு வந்ததில்லை. மாறாக அவர் மற்ற நாடுகளுக்கு டூர் சென்று கொண்டிருக்கிறார். இப்படி ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற பிரதமரை நான் இதுவரை பார்த்தில்லை.

    இதுவரை பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது வைத்த குற்றச்சாட்டிற்கு விளக்க அளிக்க முடியவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் நேர்மையாக பதில் அளித்து அந்த வழக்கில் இருந்து வெளிவந்த என்னை போல, நீதிமன்றம் மற்றும் பாராளுமன்றத்தை பிரதமர் மோடி எதிர்கொள்வாரா?

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று தற்போது உள்ள மத்திய அரசை மாற்றினால் கண்டிப்பாக மோடி சிறைக்கு செல்வார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரூ.76 கோடி மதிப்பில் கூடலூர் அம்ரூத் குடிநீர் திட்டவடிவம் குறித்து ஆய்வு
    • திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் நகராட்சியிலுள்ள மிகவும் வயதானவர்களுக்கு நிதியுதவி அளித்தார்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரிய நாயக்க ன்பாளையம் அடுத்துள்ள கோவை கூடலூர் நகராட்சியில் பொதுநிதி மற்றும் இதர திட்டத்தின் கீழ் ரூ.403.75 லட்சம் மதிப்பில் வட்டப்பாறைப்புதூர், குறள்நகர், செல்வபுரம், ஸ்ரீபாரதி நகர், கூடலூர் கவுண்டம்பாளையம், விஜயலட்சுமி நகர், ரோஸ்பார்க் அவென்யூ, முல்லை நகர், கணேசபுரம், லட்சுமி நகர், சாமிசெட்டிபாளையம், ஜி.டி.ரெசிடேன்சி, காமராஜ் நகர், அம்பேத்கார் நகர், மற்றும் ராஜூ நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கப்படவுள்ள மழைநீர் வடிகால், சிறுபாலம், சிமெண்ட் கான்கீரீட் தளம், பேவர்பிளாக், கம்பி வேலி அமைத்தல் , ஆழ்குழாய் கிணறு அமைத்தல், மேலும் தமிழகத்தில் முதன்முறையாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் தானியங்கி குடிநீர் மேலாண்மை கட்டுப்பாட்டுக்கருவிகள் பொறுத்துதல், 10 பேட்டரி வாகனங்கள், 2 இலகுரக வாகனங்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பணிகளை நீலகிரி எம்.பி. ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

    மேலும் காரமடை சாலையை இணைக்கும் கட்டாஞ்சி மலையில் இருந்து பாரதி நகர் வரை புதியதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.தொடர்ந்து தமிழக அரசுக்கு அனுப்பப்படும் சுமார் ரூ. 76 கோடி மதிப்பில் கூடலூர் நகராட்சிக்கு முழுவதும் குடிநீர் கொண்டு செல்லவுள்ள அம்ரூத் குடிநீர் திட்டவடிவத்தை ஆய்வு செய்தார். முன்னதாக ஒரு பெண் குழந்தைக்கு பொற்செல்வி என்று பெயர் வைத்தார்.

    மேலும் திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் நகராட்சியிலுள்ள மிகவும் வயதானவர்களுக்கு நிதியுதவி அளித்தார். இந்த நிகழ்ச்சிக்கு கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமை தாங்கினார்.ஆணையாளர் மனோகரன், துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சிறப்பாளர்களாக திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் மற்றும் கூடலூர் நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், நகரமன்ற உறுப்பினர்கள் ரேவதி, சாந்தாமணி, சங்கீதா, மணிமேகலை, சித்ரா, ரம்யா, துரை செந்தில், பாலசுப்பிரமணியன், பேங்க் முருகேசன், வக்கீல் ஸ்ரீதர், மீனா கணேசன், வனிதாமணி, ஜானகி, ஈஸ்வரி, பொன்மாடசாமி, தவமணி, திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அந்தேணிராஜ், சோமையம்பாளையம் ஆனந்தகுமார், நகராட்சி பணி மேற்பார்வையாளர் தர்மராஜ், பொறுத்துநர் வேலாயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பழங்குடியினர் உண்டுஉறை விட பள்ளிவளாக தடுப்புச்சுவர் மற்றும் முடிவுற்ற புனரமைப்பு பணிகளையும் தொடங்கினார்
    • 21 குடியிருப்புகளை திறந்து வைத்து பயனாளிகளுடன் கலந்துரையாடினார்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த தேனாடு பகுதியில் ராஷ்டிரிய கிராம சுராஜ் அபியான் அபியான் திட்டத்தின் கீழ், ரூ.29.50 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம், கோவை நெட்கான் நிறுவனத்தின் சமூகபொறுப்பு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் அரசு பழங்குடியினர் உண்டுஉறை விட பள்ளிவளாகத்தில் தடுப்புச்சுவர் மற்றும் முடிவுற்ற புனரமைப்பு பணிகளை நீலகிரி எம்.பி ஆ.ராசா திறந்து வைத்தார்.

    பின்னர் கடந்த ஆண்டு 10-ம்வகுப்பு பொதுத் தேர்வில் 3 இடங்கள் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து ஆ.ராசா எம்.பி நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் பழங்குடியினர் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    ஒரு சமூகம் முன்னேற்ற கல்வி அவசியம். இது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளி கல்வித்துறை சார் பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஒவ்வொரு துறையின் வாயிலாகவும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அனை வரும் தெரிந்து கொண்டு பயன்பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கீழகட்டப்பெட்டு பகுதியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் தலா ரூ.2.66 லட்சம் மதிப்பிலான 21 குடியிருப்புகளை திறந்து வைத்து பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

    மேலும் அதே பகுதியில் நடைெற்று வரும் 3 குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டவர், அங்கு பணிகளை விரைவில் முடித்து சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து கெனவுக்கரை ஊராட்சி, குறிஞ்சி நகரில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை ஆ.ராசா எம்.பி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முதன்மை திட்டஇயக்குனர் உமா மகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், அனிதா, உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் செல்வக்கு மார், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் செல்வகுமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ரவிக்குமார், முஸ்தபா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆல்வின் (தேனாடு), ஜெயப்பிரியா (கெணவக்கரை), நெட்கான் நிறுவன மேலாண்இயக்குனர் மகாலிங்கம், இயக்குனர் வடிவு, கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டி யன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் 15 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • சொத்துக்குவிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

    கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் 15 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனம் ஆ.ராசாவின் பினாமி நிறுவனம் என அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    15 அசையா சொத்துக்களும் கோவை ஷெல்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை.

    சொத்துக்குவிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    • 2004-2007 காலகட்டத்தில் ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டதாக தகவல்.
    • 45 ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக முடக்கியது மத்திய அமலாக்கத்துறை.

    முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 575% சதவிகிதம் சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது.

    கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. இந்த நிலையில் 2004-2007 காலகட்டத்தில் மத்திய மந்திரியாக ஆ.ராசா இருந்த போது பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவையில் வாங்கப்பட்ட ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    • திருப்பூர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அவிநாசி பேருந்து நிலையம் முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
    • கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க . செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடைபெற்று முடிந்த 15-வது திராவிட முன்னேற்ற கழக அமைப்பு தேர்தலில் இரண்டாவது முறையாக கழக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று திருப்பூர் வடக்கு மாவட்டம், அவிநாசிக்கு வருகை தரும் முன்னாள் மத்திய அமைச்சர், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எம்.பி.க்கு திருப்பூர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அவிநாசி பேருந்து நிலையம் முன்பு நாளை காலை 8 மணியளவில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    ஆகையால் மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், தொ.மு.ச., பேரவை நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இந்நாள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • மத, இன ரீதியாக மக்களை பிரித்து அதை ஓட்டுக்களாக மாற்றும் விதமாக நீலகிரி எம்.பி., ஆ.ராசா தொடர்ந்து பேசி வருகிறார்.
    • இந்து மதம் தவிர, தனி மனிதர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. மாநில பார்வையாளர் செல்வகுமார் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத, இன ரீதியாக மக்களை பிரித்து அதை ஓட்டுக்களாக மாற்றும் விதமாக நீலகிரி எம்.பி., ஆ.ராசா தொடர்ந்து பேசி வருகிறார். தற்போதைய அவரது பேச்சு, இந்து மதம் தவிர, தனி மனிதர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. மிகவும் அநாகரீகமான பேச்சு.இதை அவர் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில், நீலகிரி தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட்டால், அவரை டெபாசிட் கூட வாங்க விட மாட்டோம். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை கண்டித்து போராட்டம் நடத்துவதோடு சட்டரீதியாக வழக்கு தொடரப்படும். எம்.பி.,யாக இருக்க கூட அவருக்கு தகுதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனுவில் கூறியிருந்தனர்.
    • பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில், பாஜக நகர தலைவர் ஆர்.அருண்குமார் மற்றும் நிர்வாகிகள், இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாவட்ட இணை செயலாளர் டி.சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆ. ராசா எம்.பி., இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனுவில் கூறியிருந்தனர்.

    பல்லடம் வடக்கு ஒன்றிய பாஜக. தலைவர் பூபாலன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரமேஷ் குமார், மற்றும் பாஜ.க நிர்வாகிகள் நித்யா,பூபதி,மகேஷ், குருமூர்த்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் ஆ.ராசா எம்.பி., மீது பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    • இந்து மதத்தினரைப்பற்றி ஆ.ராசா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • ஆ.ராசா படத்திற்கு அவமதிப்பு செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    தி.மு.க கொள்கை பரப்பு செயலாளாராக இருப்பவர் ஆ.ராசா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து மதத்தினரைப்பற்றி பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து பல்வேறு இந்து அமைப்பினர் ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் நிலையங்களில புகார் அளித்தும் வருகின்றனர்.

    இந்நிலையில் கொடைக்கானல் எம்.எம்.தெரு பகுதியில் ஆ.ராசா உருவபடத்தை வைத்து அதற்கு செருப்பு மாலை அணிவித்து அதனை வீடியோவாக எடுத்தனர். மேலும் ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் சிலர் எழுப்பி அதனை சமூகஊடகங்களில் வெளியிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் டி.எஸ்.பி சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அவர்கள் அந்த படத்தை அங்கிருந்து அகற்றிவிட்டு தப்பிஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்கள் மூலம் ஆ.ராசா படத்திற்கு அவமதிப்பு செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிவசேனா வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
    • இந்துக்கள் மீதும் இந்து சம்பிரதாயங்கள் மீதும் வன்மத்தை விதைத்து வரும் ராசாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்துக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவுக்கு சிவசேனா வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பொது நிகழ்ச்சிகளிலும் அரசியல் மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் தொடர்ந்து இந்துக்கள் மீதும் இந்து சம்பிரதாயங்கள் மீதும் வன்மத்தை விதைத்து வரும் ராசாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை குறைந்தது 3மாதம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாராளுமன்ற சபாநாயகரை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ×