என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை வழக்கு தொடரப்படும்- மு.க. ஸ்டாலின்
- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
- வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஆ.ராசா பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
இதனிடையே வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நீலகிரியில் மக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்" என்று தெரிவித்தார்.
Next Story






