search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A Raza"

    • வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
    • நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது

    கோவை அவிநாசியில், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன். மலைகளின் அரசியாகவும், நீர் வீழ்ச்சியின் எழுச்சியாகவும். மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாகவும் உள்ள இடத்திற்கு வந்துள்ளேன்.

    நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது. ஒரே ஒரு கூட்டம் டோட்டல் பாஜகவும் குளோஸ். ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்துவிட்டது.

    தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டுமே ஆள முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். ராகுல் எந்த அளவுக்கு தமிழ்நாட்டை மதிக்கிறார். என்பது அவரின் பேச்சின் மூலம் தெரிந்திருக்கும்.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால், முதலில் இட ஒதுக்கீட்டைதான் ரத்து செய்வார். ஏனென்றால் சமூகநீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்க காரணம், இந்திய அரசியலமைப்பு சட்டம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அந்த அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்.

    திருப்பூரில் ஜி.எஸ்.டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை, பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதுதான் பாஜக மக்களை மதிக்கும் லட்சணம். இதுதான் பாஜக பெண்களுக்கு கொடுக்கிற மதிப்பு. மக்களை மதிக்காமல் அராஜகம் செய்கிற பாஜகவினர் திருப்பூரை மணிப்பூராக்கிவிடுவார்கள். மோடியும், பாஜகவும் வீட்டுக்கும் கேடு; நாட்டுக்கும் கேடு.

    கலவரம் செய்வது பாஜகவின் DNAவில் ஊறிப் போன ஒன்று. அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும்.. நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது" என்று தெரிவித்தார்.

    மோடி ஆட்சியில் பத்திரிக்கையாளர்களும், ஊடக நிறுவனங்களும் நிம்மதியாக செயல்பட முடியவில்லை. பத்திரிக்கையாளர்கள் படுகொலையை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. மோடி ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டதன் விளைவுதான், ஊடக சுதந்திரத்தில் 161 இடத்தில் இந்தியா இருக்கிறது. நமது பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி ஏற்படுத்திய அவமானம் இது

    பன்னீர் செல்வத்தை தர்ம யுத்தம் நடத்த வைத்தது, பழனிசாமியை முதலமைச்சராக கொண்டுவந்தது, இரு துருவங்களாக இருந்த பன்னீரையும், பழனிசாமியையும் சேர்த்தது, தினகரனை கைது செய்து தங்களின் அடிமையாக மாற்றியது, அரசியலுக்குள் சசிகலாவை வரவிடாமல் தடுத்தது, தற்போது பன்னீரையும், தினகரனையும் மிரட்டி தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பாஜகதான். இப்படி டிவி சீரியல்களில் வருவதுபோல், திடீர் திடீர் என காட்சிகளை மாற்றி சதி நாடகம் நடத்துகிறது பாஜக" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

    • ரூ.76 கோடி மதிப்பில் கூடலூர் அம்ரூத் குடிநீர் திட்டவடிவம் குறித்து ஆய்வு
    • திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் நகராட்சியிலுள்ள மிகவும் வயதானவர்களுக்கு நிதியுதவி அளித்தார்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரிய நாயக்க ன்பாளையம் அடுத்துள்ள கோவை கூடலூர் நகராட்சியில் பொதுநிதி மற்றும் இதர திட்டத்தின் கீழ் ரூ.403.75 லட்சம் மதிப்பில் வட்டப்பாறைப்புதூர், குறள்நகர், செல்வபுரம், ஸ்ரீபாரதி நகர், கூடலூர் கவுண்டம்பாளையம், விஜயலட்சுமி நகர், ரோஸ்பார்க் அவென்யூ, முல்லை நகர், கணேசபுரம், லட்சுமி நகர், சாமிசெட்டிபாளையம், ஜி.டி.ரெசிடேன்சி, காமராஜ் நகர், அம்பேத்கார் நகர், மற்றும் ராஜூ நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கப்படவுள்ள மழைநீர் வடிகால், சிறுபாலம், சிமெண்ட் கான்கீரீட் தளம், பேவர்பிளாக், கம்பி வேலி அமைத்தல் , ஆழ்குழாய் கிணறு அமைத்தல், மேலும் தமிழகத்தில் முதன்முறையாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் தானியங்கி குடிநீர் மேலாண்மை கட்டுப்பாட்டுக்கருவிகள் பொறுத்துதல், 10 பேட்டரி வாகனங்கள், 2 இலகுரக வாகனங்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பணிகளை நீலகிரி எம்.பி. ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

    மேலும் காரமடை சாலையை இணைக்கும் கட்டாஞ்சி மலையில் இருந்து பாரதி நகர் வரை புதியதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.தொடர்ந்து தமிழக அரசுக்கு அனுப்பப்படும் சுமார் ரூ. 76 கோடி மதிப்பில் கூடலூர் நகராட்சிக்கு முழுவதும் குடிநீர் கொண்டு செல்லவுள்ள அம்ரூத் குடிநீர் திட்டவடிவத்தை ஆய்வு செய்தார். முன்னதாக ஒரு பெண் குழந்தைக்கு பொற்செல்வி என்று பெயர் வைத்தார்.

    மேலும் திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் நகராட்சியிலுள்ள மிகவும் வயதானவர்களுக்கு நிதியுதவி அளித்தார். இந்த நிகழ்ச்சிக்கு கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமை தாங்கினார்.ஆணையாளர் மனோகரன், துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சிறப்பாளர்களாக திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் மற்றும் கூடலூர் நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், நகரமன்ற உறுப்பினர்கள் ரேவதி, சாந்தாமணி, சங்கீதா, மணிமேகலை, சித்ரா, ரம்யா, துரை செந்தில், பாலசுப்பிரமணியன், பேங்க் முருகேசன், வக்கீல் ஸ்ரீதர், மீனா கணேசன், வனிதாமணி, ஜானகி, ஈஸ்வரி, பொன்மாடசாமி, தவமணி, திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அந்தேணிராஜ், சோமையம்பாளையம் ஆனந்தகுமார், நகராட்சி பணி மேற்பார்வையாளர் தர்மராஜ், பொறுத்துநர் வேலாயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பழங்குடியினர் உண்டுஉறை விட பள்ளிவளாக தடுப்புச்சுவர் மற்றும் முடிவுற்ற புனரமைப்பு பணிகளையும் தொடங்கினார்
    • 21 குடியிருப்புகளை திறந்து வைத்து பயனாளிகளுடன் கலந்துரையாடினார்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த தேனாடு பகுதியில் ராஷ்டிரிய கிராம சுராஜ் அபியான் அபியான் திட்டத்தின் கீழ், ரூ.29.50 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம், கோவை நெட்கான் நிறுவனத்தின் சமூகபொறுப்பு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் அரசு பழங்குடியினர் உண்டுஉறை விட பள்ளிவளாகத்தில் தடுப்புச்சுவர் மற்றும் முடிவுற்ற புனரமைப்பு பணிகளை நீலகிரி எம்.பி ஆ.ராசா திறந்து வைத்தார்.

    பின்னர் கடந்த ஆண்டு 10-ம்வகுப்பு பொதுத் தேர்வில் 3 இடங்கள் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து ஆ.ராசா எம்.பி நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் பழங்குடியினர் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    ஒரு சமூகம் முன்னேற்ற கல்வி அவசியம். இது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளி கல்வித்துறை சார் பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஒவ்வொரு துறையின் வாயிலாகவும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அனை வரும் தெரிந்து கொண்டு பயன்பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கீழகட்டப்பெட்டு பகுதியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் தலா ரூ.2.66 லட்சம் மதிப்பிலான 21 குடியிருப்புகளை திறந்து வைத்து பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

    மேலும் அதே பகுதியில் நடைெற்று வரும் 3 குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டவர், அங்கு பணிகளை விரைவில் முடித்து சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து கெனவுக்கரை ஊராட்சி, குறிஞ்சி நகரில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை ஆ.ராசா எம்.பி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முதன்மை திட்டஇயக்குனர் உமா மகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், அனிதா, உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் செல்வக்கு மார், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் செல்வகுமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ரவிக்குமார், முஸ்தபா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆல்வின் (தேனாடு), ஜெயப்பிரியா (கெணவக்கரை), நெட்கான் நிறுவன மேலாண்இயக்குனர் மகாலிங்கம், இயக்குனர் வடிவு, கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டி யன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2004-2007 காலகட்டத்தில் ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டதாக தகவல்.
    • 45 ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக முடக்கியது மத்திய அமலாக்கத்துறை.

    முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 575% சதவிகிதம் சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது.

    கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. இந்த நிலையில் 2004-2007 காலகட்டத்தில் மத்திய மந்திரியாக ஆ.ராசா இருந்த போது பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவையில் வாங்கப்பட்ட ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    ×