search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர்-கீரனூரில் தி.மு.க. பொதுக்கூட்டம்
    X

    கூடலூர்-கீரனூரில் தி.மு.க. பொதுக்கூட்டம்

    தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கூடலூர் மற்றும் கீரனூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    பாடாலூர்:

    பெரம்லூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கூடலூரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செய லாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முத்துக்கண்ணு, கோகிலா சேகர், கோபால், ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் ஊராட்சி செயலாளர் சாமி துரை வரவேற்றார். மாநில மாணவரணி இணைச் செயலாளர் கோவி.செழியன், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

    மாநில ஆதிதிராவிட நலக்குழு துணைச் செய லாளர் துரைசாமி, மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் வல்லபன், மாவட்ட துணைச் செய லாளர்கள் ராஜ்குமார், பாஸ்கர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி, மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். முடிவில் ஒன்றிய  இளை ஞரணி அமைப்பாளர் சுப்பிர மணியன் நன்றி கூறினார்.

    தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கிள்ளுக் கோட்டை மற்றும் கிள்ளனுர் தி.மு.க  சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு  குன்றாண்டார் கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர்  சேட்டு தலைமை தாங்கினார். புதுக் கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தி.மு.க. கொடி ஏற்றி வைத்து பேசினார். 

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன், ஆரணிமாலா, மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம், செல்வம், கீரனூர் நகர பொறுப்பாளர் வக்கீல் அண்ணாதுரை, குளத்தூர் மணிராஜன், பேராசிரியர் குறிஞ்சி வாணன் ஆகியோர் பேசினர். முடிவில் தி.மு.க தகவல் தொழில்நுட்பதுறை ஜெயராஜ் நன்றி கூறினார்.
    Next Story
    ×