search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் நாளை தி.மு.க. ஆலோசனை கூட்டம்-சுரேஷ்ராஜன் அறிக்கை
    X

    குமரி மாவட்டத்தில் நாளை தி.மு.க. ஆலோசனை கூட்டம்-சுரேஷ்ராஜன் அறிக்கை

    குமரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் பாராளுமன்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது என்று சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுரைபடி குமரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் பாராளுமன்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நாளை (18-ந் தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    குளச்சல் நகரம், தக்கலை ஒன்றியம், குருந்தன்கோடு கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், தோவாளை ஒன்றியம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியங்களில் இந்த கூட்டம் நடக்கிறது. தலைமை கழகத்தால்  நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதி, கிரி ஆகி யோர இந்த கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளனர். ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்ட ஏற்பாடுகளை செய்து இதில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×