என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "daughter"
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெ.குரு. வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவருடைய மகள் விருத்தாம்பிகை(வயது 20). இவரும், காடுவெட்டி குருவின் தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜ்கிரண்(27) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்தனர்.
இவர்களது திருமணம் நேற்று கும்பகோணத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து விருத்தாம்பிகையும், மனோஜ்கிரணும் மணக்கோலத்தில் உறவினர்கள் சிலருடன் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.
பின்னர் மனோஜ்கிரண் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான்(மனோஜ்கிரண்), காடுவெட்டி குருவின் தங்கை மகன். நானும் விருத்தாம்பிகையும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்துக்கு காடுவெட்டி பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் மனு அளிக்க வந்துள்ளோம். போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #KaduvettiGuru #Daughter #Marriage
சாமியார் பிரேமானந்தா போல, சென்னையில் தொழில் அதிபரின் மனைவி- மகளையும் வீட்டில் சிறை வைத்து, பின்னர் ஆந்திராவுக்கு கடத்தி சென்று கற்பழித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சாமியார் சதுர்வேதி.
இவர் சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தார். முதுகலை பட்டதாரியான இவர் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தனது அறக்கட்டளை அலுவலகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துவார். தன்னை கிருஷ்ணனின் அவதாரம் என்று கூறி வந்தார்.
அரிசியை வெண்பொங்கலாக மாற்றி காட்டி, பல்வேறு சித்து விளையாட்டுகளை இவர் செய்து வந்தார். இவருக்கு ஏராளமான பெண் பக்தர்கள் உண்டு.
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தொழில் ரீதியாக தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க சாமியார் சதுர்வேதியை நாடினார். தொழில்அதிபரின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி அவரது வீட்டிற்கு சென்ற சாமியார் சதுர்வேதி பல்வேறு பூஜைகளை செய்தார்.
அப்போது தொழில் அதிபரின் மனைவியும், 16 வயது மகளும் சாமியாருக்கு பக்தர்கள் ஆனார்கள். பிரச்சினையை தீர்ப்பதாக கூறி தொழில் அதிபரின் வீட்டிற்குள் புகுந்த சாமியார் சதுர்வேதி, தொழில் அதிபரின் வீட்டின் கீழ்தளத்தை நாளடைவில் அபகரித்துக்கொண்டார்.
வீட்டை அபகரித்ததோடு நிற்காமல், தொழில் அதிபரின் மனைவியையும், மகளையும் தனக்கு வசியப்படுத்திக் கொண்டார். மேலும் அவர், தொழில் அதிபரின் மனைவியையும், மகளையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
தனது அறைக்குள்ளேயே அவர்கள் இருவரையும் அடைத்து வைத்து, விசேஷ பூஜை என்ற பெயரில் அவர்களை நிர்வாணப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தெரிந்துகொண்ட தொழில் அதிபர், சாமியார் சதுர்வேதியை தனது வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தினார். வீட்டை காலி செய்ய மறுத்த சாமியார் சதுர்வேதி தொழில்அதிபரின் மனைவியையும், மகளையும் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தொழில்அதிபர் தனது மனைவியையும், மகளையும் மீட்டுத்தரும்படி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.
கற்பழிப்பு, கடத்தல், சிறை வைத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை பிரிவு உள்ளிட்ட 18 சட்டப்பிரிவுகளின் கீழ் சாமியார் சதுர்வேதி மீது 2004-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சாமியார் சதுர்வேதி கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் 3 பேர் கைது ஆனார்கள். தொழில்அதிபரின் மனைவியையும், மகளையும் அபகரித்தது மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தையும் சதுர்வேதி பறித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. சாமியார் சதுர்வேதியிடம் இருந்து தொழில்அதிபரின் மனைவியும், மகளும் மீட்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சாமியார் சதுர்வேதி மீதும், அவருடன் கைதானவர்கள் மீதும் சென்னை மகளிர் கோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை நடந்து வந்தது.
ஆனால் ஜாமீனில் வெளிவந்த சாமியார் சதுர்வேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. ஆனால் போலீசாரால் சாமியார் சதுர்வேதி எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் மகளிர் கோர்ட்டு சாமியார் சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரை கடந்த அக்டோபர் 9-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டது. அந்த காலக்கெடுவும் முடிந்துவிட்டது.
சாமியார் சதுர்வேதி வழக்கு விசாரணையை சந்திக்காமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை தேடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளி மாநிலங்களுக்கும் சென்று வந்தனர். தற்போது அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடாமல் இருக்க விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. அவரை பற்றி தகவல் அறிந்தவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Chaturvedi
திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 40 வயது தாயும், 18 வயது மகளும் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு வேறு யாரும் துணை கிடையாது என்பதால் அந்த வீட்டில் தனியாக காலம் தள்ளி வந்தனர். மேலும் தாயும், மகளும் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அதிகமாக வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாலிபர் ஒருவர் அவர்களின் வீட்டிற்கு இரவு நேரத்தில் அடிக்கடி சென்று வந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து அந்த வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அப்போது அந்த வாலிபர் தாயையும், மகளையும் பாலியல் கொடுமை செய்தது தெரிய வந்தது.
உடனே பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து அந்த வாலிபரை பிடித்து தாக்கினார்கள். ஆனால் அவர், பொதுமக்கள்பிடியில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதுபற்றி ஆற்றிங்கல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று பாதிக்கப்பட்ட தாய்-மகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ பரிசோதனையில் அவர்கள் பலமுறை கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுபற்றி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தனியாக தாயும், மகளும் இருப்பதை நோட்டமிட்டு அந்த வாலிபரை போல மேலும் சிலர் அவர்களை கற்பழித்தது தெரிய வந்தது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #molestation
புளியந்தோப்பு போகிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி துர்காதேவி. இந்த தம்பதிக்கு அஜய் (வயது 3) என்ற மகனும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். அஜய் அருகில் உள்ள மாநகராட்சி உருது பள்ளியில் படித்து வருகிறான். அஜயை வழக்கமாக பிரகாஷ் பள்ளியில் விட்டு விட்டு பின்னர் அழைத்து வருவார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுவதற்கு சற்று முன்கூட்டியே ஆசிரியை மேனகாவிடம் 2 பெண்கள் சென்று தங்களை அஜய் உறவினர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். மேலும் தங்களுடன் சிறுவனை அனுப்பி வைக்குமாறு கேட்டனர். உடனே ஆசிரியை மேனகா, துர்காதேவிக்கு போன் செய்து விசாரித்தார். தனது கணவர் சார்பில் யாரேனும் வந்திருப்பார்கள் என நம்பி அஜயை அவர்களுடன் அனுப்பி வைக்குமாறு துர்காதேவி கூறினார்.
பள்ளியை விட்டு அஜய் வீட்டுக்கு வராததால் அங்கு சென்று அவனுடைய பெற்றோர் விசாரித்தனர். அப்போது தான் அஜய் கடத்தப்பட்டது தெரியவந்தது. இது குறித்து மாலை 6 மணிக்கு புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து அஜய் பெற்றோரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள், அந்த பெண்களில் ஒருவர் தங்களுக்கு தெரிந்தவர் என்றும், 2013-ம் ஆண்டு வீடு கட்டும் போது கட்டுமான பணியில் அந்த பெண் ஈடுபட்டார் என்றும் தெரிவித்தனர்.
அதை வைத்து அந்த பெண்ணின் முகவரியை போலீசார் கண்டறிந்தனர். மேலும் பூட்டப்பட்டு இருந்த அந்த வீட்டை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். நள்ளிரவில் வீட்டுக்கு வந்த அந்த பெண்ணை போலீசார் பிடித்தனர். விசாரணையில் வீட்டின் அருகே நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஆட்டோவில் சிறுவன் அஜய் இருப்பது தெரியவந்தது. உடனே சிறுவனை போலீசார் மீட்டனர்.
இது குறித்து போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
சிறுவனை கடத்திய பெண் வியாசர்பாடி கணேசபுரம் பகுதியை சேர்ந்த குட்டியம்மா (38) ஆவார். அவருடன் வந்தவர் ஓட்டேரியில் வசிக்கும் அவரது மகள் ஐஸ்வர்யா (20). ஓட்டேரியில் வசிக்கும் ஒரு பெண் தனது மகளுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்து எடுக்க விரும்புவதாகவும், அதற்கு பணம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் குட்டியம்மாவிடம் கூறியுள்ளார். இதனால் குழந்தையை கடத்தி அந்த பெண்ணிடம் கொடுத்தால் தனக்கு பணம் கிடைக்கும் என்றும், அதை வைத்து தனது மகளுக்கு சீர்வரிசை செய்யலாம் என்றும் குட்டியம்மா முடிவு செய்து அஜயை கடத்தி உள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இதையடுத்து குழந்தை கடத்தலில் ஈடுபட்ட குட்டியம்மா, ஐஸ்வர்யாவை போலீசார் கைது செய்தனர். 6 மணிக்கு சிறுவனின் பெற்றோர் புகார் கொடுத்தனர். நள்ளிரவு 1 மணிக்கு சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்தப்பட்ட சிறுவனை புகார் தெரிவித்த 7 மணி நேரத்தில் மீட்ட இன்ஸ்பெக்டர் ரவி காலில் விழுந்து துர்காதேவி நன்றி தெரிவித்தார். #BoyRescue
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நாகிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சைதன்யா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆவுலையா என்பவரின் மகள் இந்திரஜாவை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இந்திரஜாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில், கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் இந்துஜாவின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், தந்தை ஆவுலையா தான் தனது மகளை கொலை செய்து எரித்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்துஜாவின் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தாழ்ந்த ஜாதி வாலிபரை காதலித்ததாக தனது மகளையே கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #HonourKilling #AP
நெல்லையை அடுத்த சுத்தமல்லி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராஜ கோபால் (வயது36). இவர் கார்பெண்டர் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா(30). இவர்களுக்கு இந்துஜா(7), பிரனிஷ்கா(3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ராஜகோபால் தொழில் விசயமாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரம் உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
ராஜகோபாலின் மாமனார் வீடு சுத்தமல்லியில் உள்ளது. ராஜகோபாலின் மைத்துனருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று காலை நெல்லை சந்திப்பு சாலைகுமாரசுவாமி கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.
இதில் கலந்துகொள்வதற்காக ராஜகோபால் தனது மனைவி கவிதா, மகள்கள் இந்துஜா, பிரனிஷ்கா ஆகி யோருடன் காரில் வந்தார். அவர்களுடன் ராஜகோபாலின் தங்கை முத்துச் செல்வி(34), அவரது கணவர் அய்யப்பன்(37), மகள் பூஜா(3) ஆகியோரும் வந்தனர். காரை ராஜகோபால் ஓட்டினார்.
கார் செய்துங்கநல்லூர் அருகேயுள்ள புளியங்குளம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சமையல் கோஷ்டியினர் ஒரு வேனில் சென்றனர். எதிர்பாராத விதமாக காரும், வேனும் பயங்கரமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இதில் காரின் முன் பகுதி அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாய ஜோஸ் மற்றும் செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.
காயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி இந்துஜா பரிதாபமாக இறந்தாள். மற்ற 5 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் கார் மீது மோதிய வேனின் முன்பகுதியும் சேதமானது. விபத்து நடந்ததும் வேன் டிரைவர் லேசான காயத்துடன் அங்கிருந்து தப்பி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விபத்து சம்பவம் செய்துங்க நல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. #Accident
வங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியிடம் அருண் ஜெட்லியின் மகள் ஊதியம் பெற்றதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். எனவே, அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், அவருடைய தந்தையான நிதி மந்திரி அருண் ஜெட்லி, மெகுல் சோக்சியின் கோப்புகள் மீது முடிவு எடுக்காமல் தாமதம் செய்தார். அதன்மூலம் மெகுல் சோக்சியை தப்பி ஓட அனுமதித்தார்.
எனவே, அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை ஊடகங்கள் மூடி மறைத்து விட்டன. ஆனால், நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். #ArunJaitley #ArunJaitleyDaughter #MehulChoksi #RahulGandhi
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவரது மனைவி நூர்ஜகான் (வயது 48). இவருக்கு கடந்த 13-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் சரியாகவில்லை.
தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு அவருக்கு அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் நூர்ஜகானுக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவுகள் வந்தது. அதில் நூர்ஜகானுக்கு பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி நகராட்சி அதிகாரிகள், நூர்ஜகான் வீட்டிற்கு சென்று, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும்படி அறிவுரைகள் கூறினர். இதையடுத்து அவர், புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே நூர்ஜகானின் மகள் பாத்திமாவிற்கும் காய்ச்சல் ஏற்பட்டது. சோதனையில் அவருக்கும் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாத்திமா திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
நூர்ஜகானுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், நூர்ஜகானை சோதனை செய்த மதுரை தனியார் மருத்துவமனையில் அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்து உள்ளனர். ஆனால் நாங்கள் நூர்ஜகானுக்கு அனைத்து சோதனைகளையும் எடுத்த பிறகுதான், அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என்பதை கூறமுடியும்.
இதேபோல நூர்ஜகானின் மகள் பாத்திமாவிற்கும் அனைத்து சோதனைகளையும் எடுத்த பிறகுதான் என்ன காய்ச்சல் உள்ளது எனக்கூற முடியும். சோதனையில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால் இருவரையும் தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் தாய்-மகள் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். #swineflu
வாலாஜா:
வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை பஜனை தெருவை சேர்ந்தவர் கல்பனா (வயது 36). கணவர் ரமேஷ்குமாரை பிரிந்த இவர், 2 மகள்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், சென்னை ஆவடியில் போலீஸ் காரராக பணியாற்றிவரும் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கும் கல்பனாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து போலீஸ்காரர் அடிக்கடி கல்பனா வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது, கல்பனாவின் 18 வயது நிரம்பிய மூத்த மகளை அடைய அவர் விரும்பினார்.
மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்டு கள்ளக்காதலியை வற்புறுத்தினார். கல்பனா ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
மகள் மீதான மோகத்தில் இருந்த கள்ளக்காதலனை இனிமேல் தன்னை சந்திக்க வீட்டிற்கு வர வேண்டாம் என்று கல்பனா எச்சரித்தார்.
ஆனால், அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு வீட்டில் கல்பனா தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மகள்கள் கதறி அழுதனர். வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக, கல்பனாவின் மூத்த மகள் போலீசில் புகார் அளித்தார். புகார் மனுவில், தன்னுடைய தாய்க்கும், போலீஸ்காரர் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது. இந்த பழக்கத்தால் தன்னை திருமணம் செய்து வைக்க குமரேசன் சண்டை போட்டார்.
தாய் மறுத்தார். இந்த ஆத்திரத்தில் என்னுடைய தாயை போலீஸ்காரர் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது36). இவர் திருபுவனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உமையாம்பிகை (34), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு சுவேதா (9) என்ற மகள் உள்ளார். சுவேதா அங்குள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இதற்கிடையே சந்தோஷ்குமாருக்கும், அவரது மனைவி உமையாம்பிகைக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதுபோல் அவர்களுக்குகிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சந்தோஷ்குமார் பணிக்கு சென்றிருந்த நிலையில் உமையாம்பிகை பள்ளிக்கு சென்று மகளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
கடலூரில் உள்ள அவரது தாய் வீட்டில் விசாரித்த போது அங்கும் உமையாம்பிகை வரவில்லை என்று தெரியவந்தது. மேலும் பல இடங்களில் தேடிபார்த்தும் அங்கும் இல்லை. இதையடுத்து தனது மனைவி மகளுடன் மாயமானது குறித்து சந்தோஷ்குமார் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(வயது 30). ரிக் வண்டி டிரைவர். இவரது மனைவி பூமதி(26). இவர்களுக்கு பூவரசன்(4) என்ற மகனும், நிலா(3) என்று மகளும் இருந்தனர்.
இந்நிலையில் கார்த்தி ரிக் வண்டி டிரைவர் வேலைக்கு செல்வதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது வாங்கி குடித்துவிடுவார். பின்னர் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வார் என்று கூறப்படுறது. மேலும் குடும்ப செலவுக்கு கூட பணம் கொடுக்கவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.
சம்பவத்தன்று கணவரிடம் இப்படி குடித்துவிட்டு வந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்று பூமதி தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி பூமதி மற்றும் மகன் பூவரசன், மகள் நிலா ஆகிய 3 பேரும் உடலில் தீப்பிடித்த நிலையில் கதறி துடித்தனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது
இதற்கிடையில் இன்று காலை பூமதி மற்றும் மகள் நிலா ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
முதலில் பூமதி குழந்தைகளுடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்பட்டது. ஆனால் போலீசாரிடம் பூமதி கொடுத்த வாக்குமூலத்தில் கணவன் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததாகவும் இதை தட்டிக்கேட்ட என் மீதும் குழந்தைகள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறி இருந்தார்.
இதையடுத்து போலீசார் மனைவி மற்றும் குழந்தையை எரித்துக் கொன்றதாக கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீக்காயம் அடைந்த பூவரசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #HusbandArrested
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்