search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளின் தோழியை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை- கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு
    X

    மகளின் தோழியை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை- கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு

    தேன்கனிக்கோட்டை அருகே மகளின் தோழியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சொப்புக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகேசன்(35). இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு முருகேசனின் மகளுடன் படித்த, அவரது தோழியான 16 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது தனது வீட்டிற்கு வந்த மகளின் தோழியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

    இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ந் தேதி அந்த சிறுமியை அழைத்து கொண்டு முருகேசன் வெளியூர் சென்றுவிட்டார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமி கடந்த 2016ம் ஆண்டு ஜுன் மாதம் 30ம் தேதி தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று, தன்னை ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தார்.

    அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறைத் தண்டனை, போக்சோ சட்டத்தின் கீழ் 12 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை, அபராதமாக ரூ. 25 ஆயிரம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.
    Next Story
    ×