search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி மோசடி குற்றவாளி மெகுல் சோக்சியிடம் ஊதியம் பெற்ற அருண் ஜெட்லி மகள் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
    X

    வங்கி மோசடி குற்றவாளி மெகுல் சோக்சியிடம் ஊதியம் பெற்ற அருண் ஜெட்லி மகள் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    வங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியிடம் அருண் ஜெட்லியின் மகள் ஊதியம் பெற்றதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். #ArunJaitley #ArunJaitleyDaughter #MehulChoksi #RahulGandhi
    புதுடெல்லி:

    வங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியிடம் அருண் ஜெட்லியின் மகள் ஊதியம் பெற்றதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். எனவே, அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    பிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர். இந்நிலையில், மெகுல் சோக்சியிடம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் மகள் ஊதியம் பெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.



    தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:- திருடர் மெகுல் சோக்சியிடம் சம்பளம் பெறுவோர் பட்டியலில் அருண் ஜெட்லியின் மகள் இருந்துள்ளார். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கணக்கில் இருந்து அவரது பெயருக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. (வங்கிக்கணக்கு எண்ணையும் வெளியிட்டுள்ளார்).

    ஆனால், அவருடைய தந்தையான நிதி மந்திரி அருண் ஜெட்லி, மெகுல் சோக்சியின் கோப்புகள் மீது முடிவு எடுக்காமல் தாமதம் செய்தார். அதன்மூலம் மெகுல் சோக்சியை தப்பி ஓட அனுமதித்தார்.

    எனவே, அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை ஊடகங்கள் மூடி மறைத்து விட்டன. ஆனால், நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். #ArunJaitley #ArunJaitleyDaughter #MehulChoksi #RahulGandhi 
    Next Story
    ×