search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother missing"

    • கணவர் புகார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் பி. கஸ்பா பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா (வயது 25). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். பிரியா ஆம்பூர் பஜார் பகுதியில் துணி கடையில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரியா கடந்த 16-ந் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த யுவராஜ் பல்வேறு இடங்களில் மனைவியை தேடி உள்ளார்.

    அவர் கிடைக்காததால் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் யுவராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த ரூபாதேவி, தனது மகள் ஏஞ்சலுடன் வெளியே சென்றார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு குப்பம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரூபா தேவி (வயது26). இவர்களது ஒன்றரை வயது மகள் ஏஞ்சல்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த ரூபாதேவி, தனது மகள் ஏஞ்சலுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கார்த்திக் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி அருகே 5 வயது மகனுடன் தாய் மாயமானார். கண்டுபிடித்து தரக்கோரி கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

    கோபி:

    கோபியை அடுத்த பெளவகாளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. எலக்ட்ரீசியன். இவரது மனைவி சத்யா (வயது25). இவர்களுக்கு கவின் ஆகாஷ் (5) என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சத்யா அங்குள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார். வீட்டுக்கு வந்ததும் சத்யா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்யாவை வெங்கடாசலபதி கண்டித்தார்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வெங்கடாசலபதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது மனைவி சத்யா, மகன் கவின் ஆகாஷ் ஆகியோர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவியையும் மகனையும் பல்வேறு இடங்களில் தேடினார். எனினும் அவர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்க வில்லை.

    இதையடுத்து வெங்கடாசலபதி கோபி போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மனைவி மற்றும் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார்.

    அதன்பேரில் கோபி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சத்யா, கவின் ஆகாஷ் இருவரையும் தேடி வருகின்றனர். 

    வள்ளியூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 மகன்களுடன் தாய் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    ஏர்வாடியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 33). இவர்களுக்கு வரதன் (8), வாசன் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனம் உடைந்த முருகேஸ்வரி 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு ஏர்வாடியில் உள்ள தந்தை வீட்டருகே தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அவரது மகன்களும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகூடத்தில் 3-ம் வகுப்பு மற்றும் 1-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முருகேஸ்வரியையும் அவரது 2 மகன்களையும் காணவில்லை. கணவர் செல்வம் வீட்டுக்கோ, உறவினர் வீட்டுக்கோ செல்லவில்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. அவரைப்பற்றிய விபரங்கள் தெரியாததால், சித்தப்பா கண்ணன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஸ்வரியையும், 2 மகன்களையும் தேடி வருகிறார்கள்.

    கும்பகோணத்தில் மகளிர்குழு பணத்தை வங்கிக்கு கட்ட சென்ற பெண் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் சிவகாமி நகரை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மனைவி சூர்யா (வயது 23). இவர் மகளிர்குழு தலைவியாக உள்ளார்.

    கடந்த 17-ந்தேதி குழு மூலம் வசூலான ரூ.4 லட்சத்தை வங்கியில் செலுத்த சூர்யா முடிவு செய்து அதனை தனது தாய் தேவி (42) என்பவரிடம் கொடுத்து வங்கியில் கட்டி வரும்படி கூறியுள்ளார். அதனை பெற்று சென்ற தேவி மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. 

    இந்த தகவல் வெளியே தெரிந்தால் குழு உறுப்பினர்களுக்கு என்ன பதில் சொல்வது? என்று சூர்யா கலக்கமடைந்தார். ஆனாலும் தனது தாயை பற்றி தகவல் எதுவும் கிடைக்கததால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி நேற்று கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தேவியை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் சூர்யா தாமதமாக புகார் செய்ததால் தேவி பணத்துடன் மாயமானது திட்டமிட்ட  நாடகமா? இதில் மோசடி எதுவும் உள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
    கிருஷ்ணகிரி அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள தின்னகாலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன்(28). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா(26). இவர்களுக்கு திருமணமாகி சுஜிதா(6) என்கிற மகள், பீன்ஆனந்த்(2) என்கிற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சின்னையனுக்கும், புஷ்பாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. 

    இந்நிலையில் மீண்டும் கடந்த மாதம் 30-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து கோவித்து கொண்டு புஷ்பா தனது 2 குழந்தைகளுடன் வெளியில் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பாவின் தந்தை வெங்கடாசலம், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். 

    புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாயுடன் படுத்திருந்த ஆண் குழந்தை மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பு.புளியம்பட்டி:

    வேலூர் மாவட்டம் பேரணம்பட்டு அருகே உள்ள சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவரது மனைவி பிரியா (20).

    இவர்களுக்கு வெற்றி என்ற 4 வயது மகனும் பிரபாஸ் என்கிற 1½ வயது ஆண் குழந்தையும் உள்ளனர். முருகன் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் மகன்களுடன் ஊர் ஊராக சென்று பழைய துணி வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வியாபாரம் செய்து வந்தனர். அப்போது அந்தந்த பகுதியில் உள்ள கடைகள் அருகே குழந்தைகளுடன் படுத்து தூங்குவார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வியாபாரத்திற்காக புஞ்சை புளியம்பட்டி வந்தனர். அவர்கள் இரவு புளியம்பட்டி வார சந்தை பகுதியில் தங்கி வியாபாரம் செய்தனர். பிறகு அங்கே படுத்து தூங்கினர்.

    காலையில் எழுந்து பார்த்தனர். அப்போது அவர்கள் பக்கத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்த பிரபாஸை காணவில்லை.அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை அக்கம் பக்கம் தேடினர்.

    ஆனால் குழந்தை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து குழந்தையின் தாய் பிரியா புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்தார்.

    குழந்தை பிரபாஸ் இரவில் படுத்திருந்தபோது தவழ்ந்து எங்கேயாவது சென்று விட்டானா? அல்லது மர்ம ஆசாமிகள் யாராவது குழந்தையை கடத்தி சென்று விட்டனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்தியால்பேட்டையில் மகளுடன் தாய் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது36). இவர் திருபுவனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உமையாம்பிகை (34), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு சுவேதா (9) என்ற மகள் உள்ளார். சுவேதா அங்குள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இதற்கிடையே சந்தோஷ்குமாருக்கும், அவரது மனைவி உமையாம்பிகைக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதுபோல் அவர்களுக்குகிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சந்தோஷ்குமார் பணிக்கு சென்றிருந்த நிலையில் உமையாம்பிகை பள்ளிக்கு சென்று மகளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

    கடலூரில் உள்ள அவரது தாய் வீட்டில் விசாரித்த போது அங்கும் உமையாம்பிகை வரவில்லை என்று தெரியவந்தது. மேலும் பல இடங்களில் தேடிபார்த்தும் அங்கும் இல்லை. இதையடுத்து தனது மனைவி மகளுடன் மாயமானது குறித்து சந்தோஷ்குமார் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காட்டுமன்னார் கோவில் அருகே 2 மகள்களின் தாய் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார் கோவிலை அடுத்த ருத்திரசோலை கிராமத்தை சேர்ந்தவர் அருலரசு (வயது 39). இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் 2 மகள்களுடன் விஜயலட்சுமி ருத்திரசோலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் இருந்து விஜயலட்சுமி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த அவரது மகள்கள், உறவினர்கள் பல இடங்களில் விஜயலட்சுமியை தேடினர். எங்கும் அவர் இல்லை.

    இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குபதிவு செய்து மாயமான விஜயலட்சுமியை தேடி வருகிறார். 2 மகள்களின் தாய் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews

    ×