search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money missing"

    கும்பகோணத்தில் மகளிர்குழு பணத்தை வங்கிக்கு கட்ட சென்ற பெண் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் சிவகாமி நகரை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மனைவி சூர்யா (வயது 23). இவர் மகளிர்குழு தலைவியாக உள்ளார்.

    கடந்த 17-ந்தேதி குழு மூலம் வசூலான ரூ.4 லட்சத்தை வங்கியில் செலுத்த சூர்யா முடிவு செய்து அதனை தனது தாய் தேவி (42) என்பவரிடம் கொடுத்து வங்கியில் கட்டி வரும்படி கூறியுள்ளார். அதனை பெற்று சென்ற தேவி மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. 

    இந்த தகவல் வெளியே தெரிந்தால் குழு உறுப்பினர்களுக்கு என்ன பதில் சொல்வது? என்று சூர்யா கலக்கமடைந்தார். ஆனாலும் தனது தாயை பற்றி தகவல் எதுவும் கிடைக்கததால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி நேற்று கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தேவியை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் சூர்யா தாமதமாக புகார் செய்ததால் தேவி பணத்துடன் மாயமானது திட்டமிட்ட  நாடகமா? இதில் மோசடி எதுவும் உள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
    தொட்டியம் அருகே பணத்தை தவற விட்டதால் மனமுடைந்த லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கவரப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன்(24). இவருக்கு 2 லாரிகள் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளி மாநிலத்துக்கு சென்ற லாரி விபத்தில் சிக்கி செலவு செய்ததால் கடன் சுமை ஏற்பட்டு சோகத்தில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சரவணன் லாரியில் வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தை தவற விட்டார். இதனால் மேலும் மனமுடைந்த அவர் நேற்று மாலை தொட்டியம் தாலுக்கா அலுவலகம் அருகில் தனது லாரியை நிறுத்தி விட்டு வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். 

    உடனே அக்கம் பக்கதினர் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார். 

    இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் மாயமானது குறித்து விவசாயி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (64). விவசாயியான இவர் நேற்று அலங்காநல்லூரில் உள்ள தனியார் வங்கியில் ரூ. 3 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வீடு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்த பணம் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×