search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டுமன்னார்கோவில் அருகே 2 மகள்களின் தாய் மாயம்
    X

    காட்டுமன்னார்கோவில் அருகே 2 மகள்களின் தாய் மாயம்

    காட்டுமன்னார் கோவில் அருகே 2 மகள்களின் தாய் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார் கோவிலை அடுத்த ருத்திரசோலை கிராமத்தை சேர்ந்தவர் அருலரசு (வயது 39). இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் 2 மகள்களுடன் விஜயலட்சுமி ருத்திரசோலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் இருந்து விஜயலட்சுமி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த அவரது மகள்கள், உறவினர்கள் பல இடங்களில் விஜயலட்சுமியை தேடினர். எங்கும் அவர் இல்லை.

    இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குபதிவு செய்து மாயமான விஜயலட்சுமியை தேடி வருகிறார். 2 மகள்களின் தாய் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews

    Next Story
    ×