search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corpse"

    • மேலூர் அருகே தொழிலாளியை கொன்று கிணற்றில் பிணம் வீசப்பட்டது.
    • பிணமாக கிடந்தவர் நீல நிற சட்டை அணிந்திருந்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பனங்காடி கிராமத்தில் உள்ள வட்டக்கிணற்றில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே மேலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கிணற்றில் மிதந்த வாலிபரை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர் நீல நிற சட்டை அணிந்திருந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பிணமாக கிடந்தவர் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது51) என தெரியவந்தது. தொழிலாளியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.

    கடந்த 3 நாட்களாக மாயமாகி இருந்த மணிகண்டன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள் ளார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முந்திரி தோப்புஒன்றில் பெண்பிணம் ஒன்றுஅழுகியநிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சொரத்தூரில் முந்திரி தோப்புஒன்றில் பெண்பிணம் ஒன்றுஅழுகியநிலையில் கிடப்பதாக முத்தாண்டி குப்பம் போலீசாருக்குதகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தாண்டி குப்பம்போலீசார்அழுகிய நிலையில் கிடந்த பெண்பிணத்தை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து தீவிர விசாரணை செய்தனர்.

    விசாரணையில்அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததுநெய்வேலிமாற்றுகுடியிருப்பு"ஏ"பிளாக்கை சேர்ந்த குப்புசாமி மனைவிசின்னபொண்ணு(80), என்பது தெரிய வந்தது .இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போனது தெரியவந்தது. இவரது மகன்சூடாமணி நேரில் வந்து பார்த்து தாயின் உடலைஅடையாளம் காட்டியுள்ளார். சின்ன பொண்ணு தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது வயது முதிர்வு காரணமாக மயங்கி விழு ந்து இறந்தாரா என்பது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
    • அடுத்தடுத்து வாகனங்கள் ஏறியதில் உடல் சின்னாபின்னமானது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது நரசிங்கம்பட்டி. இங்குள்ள நான்கு வழிச்சாலையில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் சின்னாபின்னமாகி சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மேலூர் போலீஸ் நிலையத் திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப் பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்பு சாலையில் கிடந்த வாலிபரின் உடலை மீட்ட னர். அந்த வாலிபர் நேற்று நள்ளிரவு அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு வாகனம் மோதி இறந்திருக்கிறார். அந்த இடம் இருட்டாக இருந்ததால் அவ்வழியாக சென்ற மற்ற வாகனங்களும் வாலிபரின் உடல் மீது ஏறி சென்றுள்ளது.

    இதில் அந்த வாலிபரின் உடல் அடையாளம் தெரி யாத அளவுக்கு சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கி றது. அந்த வாலிபர் யார்? அவர் மீது மோதிய வாகனம் எது? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் விபத்தில் தான் அந்த வாலிபர் இறந்தாரா? அல்லது யாரேனும் மர்ம நபர்கள் கொன்று சாலையில் வீசி சென்றார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காணாமல் போன முதியவர் கிணற்றில் பிணமாக மீட்க்கபட்டார்
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திருவளக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 84). இவர் கடந்த 15-ந்தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர்களால் கலியமூர்த்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் அதே பகுதியில் வேலாயுதம் என்பவர் விவசாய கிணற்றில் கலியமூர்த்தி பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    இதனை கண்டவர்கள் இதுகுறித்து கலியமூர்த்தியின் குடும்பத்தினருக்கும், பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு கலியமூர்த்தியின் குடும்பத்தினரும், போலீசாரும் வந்தனர். பின்னர் போலீசார் கிணற்றில் இருந்து கலியமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத முதியவர் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகரில் உள்ள சோழவந்தான் சாலையில் நேற்று 72 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிக்கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் லீ பஜார் மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் தண்ணீர் தேங்கியுள்ளது.
    • தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று பிணமாக மிதந்தார்.

    சேலம்:

    சேலம் லீ பஜார் மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று பிணமாக மிதந்தார்.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்தவர் சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரன் மகன் சீனிவாசன் (வயது 38) என்பது தெரியவந்தது.

    மேலும் அங்குள்ள திண்டில் அமர்ந்து மது குடித்த போது அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றும், இது போல் ஏற்கனவே 4 பேர் அந்த பகுதியில் தவறி விழுந்து இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • ஆத்தூர் அருகே சிறுவாச்சூர் கிராமம் சேட்டூரில் உள்ள திருவேங்கடம் என்பவரது விவசாய நிலத்தின் அருகில் சாலையோரம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.
    • வீரகனூர் போலீஸ் நிலையங்களில் கடந்த 10 நாட்களில் மாயமான நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சிறுவாச்சூர் கிராமம் சேட்டூரில் உள்ள திருவேங்கடம் என்பவரது விவசாய நிலத்தின் அருகில் சாலையோரம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.

    உடல் அழுகி துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்ததால் அந்த பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் தலைவாசல் போலீசுக்கு கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.

    மலை பகுதியில் விவசாய தோட்டத்தின் அருகில் சாலை ஓரத்தில் அந்த வாலிபர் இறந்து கிடந்ததால் யாரேனும் அவரை அடித்துக் கொன்று வீசி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதனால் வாலிபரின் பிணத்தை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆத்தூர், தலைவாசல், வீரகனூர் போலீஸ் நிலையங்களில் கடந்த 10 நாட்களில் மாயமான நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள். மேலும் பிணமாக கிடந்த வாலிபரைஅடையாளம் காணும் பணியில் தீவிரமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.

    • தொட்டியில் ஆணின் பிணம் கிடந்துள்ளது.
    • வீரப்பன்சத்திரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு வெட்டுக்காட்டு வலசு சைவ மாரியம்மன் கோவில் எதிர்புறம் ஒரு தொட்டியில் சம்பவத்தன்று 50 வயது மதிக்கத்தக்க ஆணின் பிணம் கிடந்துள்ளது.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த நபரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் வெள்ளை நிற அரக்கை சட்டை அணிந்து இருந்தார். இறந்த நபர் அந்த வழியாக சென்றபோது தொட்டியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமு (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்தார்
    • ரைஸ் மில் வளாகத்தில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.

    கடலூர்:

    கடலூர் புது வண்டிப் பாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ராமு ரைஸ் மில் வளாகத்தில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து இறந்த ராமுவின் உறவினர் வாசுதேவன், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், இறந்த ராமுவின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். அதன் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சாவில் மர்மம் உள்ளதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.
    • எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதைக் கண்ட அந்த பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இறந்தவர் ரெயி லில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும், அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் பட்டியல் எடுத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே தோட்டத்து கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் நதியா(வயது23).

    நர்சிங் முடித்துள்ள இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கற்பகம் வேலைக்கு செல்லு ம்போது மகளையும் உடன் அழைத்துச்சென்று வந்தார்.

    சம்பவத்தன்று கற்பகம் வேலைக்கு செல்லும்போது மகளை வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு நதியா வரவில்லை என கூறி மறுத்து விட்டார். இதையடுத்து கற்பகம் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களிடம் மகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறி வேலைக்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் வீட்டில் இருந்த நதியா திடீரென மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்த கற்பகம் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே அதே ஊரை சேர்ந்த அனந்த பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் நதியா பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். நதியா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் ரோட்டியில் தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தின் வேலி அருகில் இருந்து துர்நாற்றம் வீசியது.
    • அங்கு சென்று பார்த்தபோது. அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார்

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் ரோட்டியில் தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தின் வேலி அருகில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அவ்வழியே சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது. அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார். இது குறித்து முள்ளிகிராம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு நெல்லிக்குப்பம் போலீசார் சென்றனர். அங்கு இறந்து கிடந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எவ்வாறு இறந்தார்? போன்றவைகள் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×