search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் வண்டிப்பாளையத்தில் ரைஸ் மில்லில் தூக்கு போட்டு இறந்த நிலையில் முதியவர் பிணம்
    X

    கடலூர் வண்டிப்பாளையத்தில் ரைஸ் மில்லில் தூக்கு போட்டு இறந்த நிலையில் முதியவர் பிணம்

    • ராமு (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்தார்
    • ரைஸ் மில் வளாகத்தில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.

    கடலூர்:

    கடலூர் புது வண்டிப் பாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ராமு ரைஸ் மில் வளாகத்தில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து இறந்த ராமுவின் உறவினர் வாசுதேவன், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், இறந்த ராமுவின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். அதன் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சாவில் மர்மம் உள்ளதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×