search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அழுகிய நிலையில் ஆண் பிணம்
    X

    அழுகிய நிலையில் ஆண் பிணம்

    • தொட்டியில் ஆணின் பிணம் கிடந்துள்ளது.
    • வீரப்பன்சத்திரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு வெட்டுக்காட்டு வலசு சைவ மாரியம்மன் கோவில் எதிர்புறம் ஒரு தொட்டியில் சம்பவத்தன்று 50 வயது மதிக்கத்தக்க ஆணின் பிணம் கிடந்துள்ளது.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த நபரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் வெள்ளை நிற அரக்கை சட்டை அணிந்து இருந்தார். இறந்த நபர் அந்த வழியாக சென்றபோது தொட்டியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×