search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே மாயமான மூதாட்டி பிணமாக மீட்பு
    X

    பண்ருட்டி அருகே மாயமான மூதாட்டி பிணமாக மீட்பு

    முந்திரி தோப்புஒன்றில் பெண்பிணம் ஒன்றுஅழுகியநிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சொரத்தூரில் முந்திரி தோப்புஒன்றில் பெண்பிணம் ஒன்றுஅழுகியநிலையில் கிடப்பதாக முத்தாண்டி குப்பம் போலீசாருக்குதகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தாண்டி குப்பம்போலீசார்அழுகிய நிலையில் கிடந்த பெண்பிணத்தை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து தீவிர விசாரணை செய்தனர்.

    விசாரணையில்அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததுநெய்வேலிமாற்றுகுடியிருப்பு"ஏ"பிளாக்கை சேர்ந்த குப்புசாமி மனைவிசின்னபொண்ணு(80), என்பது தெரிய வந்தது .இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போனது தெரியவந்தது. இவரது மகன்சூடாமணி நேரில் வந்து பார்த்து தாயின் உடலைஅடையாளம் காட்டியுள்ளார். சின்ன பொண்ணு தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது வயது முதிர்வு காரணமாக மயங்கி விழு ந்து இறந்தாரா என்பது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×