என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நான்கு வழிச்சாலையில் பிணமாக கிடந்த வாலிபர்
- மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
- அடுத்தடுத்து வாகனங்கள் ஏறியதில் உடல் சின்னாபின்னமானது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது நரசிங்கம்பட்டி. இங்குள்ள நான்கு வழிச்சாலையில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் சின்னாபின்னமாகி சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மேலூர் போலீஸ் நிலையத் திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப் பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்பு சாலையில் கிடந்த வாலிபரின் உடலை மீட்ட னர். அந்த வாலிபர் நேற்று நள்ளிரவு அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு வாகனம் மோதி இறந்திருக்கிறார். அந்த இடம் இருட்டாக இருந்ததால் அவ்வழியாக சென்ற மற்ற வாகனங்களும் வாலிபரின் உடல் மீது ஏறி சென்றுள்ளது.
இதில் அந்த வாலிபரின் உடல் அடையாளம் தெரி யாத அளவுக்கு சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கி றது. அந்த வாலிபர் யார்? அவர் மீது மோதிய வாகனம் எது? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் விபத்தில் தான் அந்த வாலிபர் இறந்தாரா? அல்லது யாரேனும் மர்ம நபர்கள் கொன்று சாலையில் வீசி சென்றார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்