search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயமான மூதாட்டி"

    முந்திரி தோப்புஒன்றில் பெண்பிணம் ஒன்றுஅழுகியநிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சொரத்தூரில் முந்திரி தோப்புஒன்றில் பெண்பிணம் ஒன்றுஅழுகியநிலையில் கிடப்பதாக முத்தாண்டி குப்பம் போலீசாருக்குதகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தாண்டி குப்பம்போலீசார்அழுகிய நிலையில் கிடந்த பெண்பிணத்தை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து தீவிர விசாரணை செய்தனர்.

    விசாரணையில்அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததுநெய்வேலிமாற்றுகுடியிருப்பு"ஏ"பிளாக்கை சேர்ந்த குப்புசாமி மனைவிசின்னபொண்ணு(80), என்பது தெரிய வந்தது .இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போனது தெரியவந்தது. இவரது மகன்சூடாமணி நேரில் வந்து பார்த்து தாயின் உடலைஅடையாளம் காட்டியுள்ளார். சின்ன பொண்ணு தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது வயது முதிர்வு காரணமாக மயங்கி விழு ந்து இறந்தாரா என்பது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய் சுசீலா (70). கடந்த 8 வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டு
    • கடந்த 25-ந் தேதி சுசீலா, மகள் கவிதா வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அர்த்தனாரி–பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (52). கூலித் தொழிலாளி. இவரது தந்தை மணி. கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

    இவரது தாய் சுசீலா (70). கடந்த 8 வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ–மனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

    சுசீலா, கடந்த ஒரு மாத காலமாக சென்னிமலை, 1010 காலனியில் உள்ள தனது மகள் கவிதா வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில், கடந்த 25-ந் தேதி சுசீலா, மகள் கவிதா வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து, கடந்த 27-ந் தேதி சென்னிமலை போலீசில் கவிதா புகார் செய்தார். மேலும் கவிதா–வின் சகோதரர் சுரேஷ் மற்றும் உறவினர்களும் சுசீலாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில், அறச்சலூர் அருகே, சிவகிரி செல்லும் சாலையில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஒரு பெண் உடல் கிடப்பதாக சுரேஷுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற சுரேஷ் இறந்து கிடக்கும் பெண் தனது தாய் சுசீலா தான் என்பதை உறுதி செய்தார்.

    மேலும் நோயால் பாதிக்கப்பட்ட சுசீலா நோய்க் கொடுமையா–லும், வயது மூப்பு காரணமாகவும் வாய்க்கா–லில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து, அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுப்பம்மாள் பவானியில் உள்ள கூடுதுறை கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
    • சுப்பம்மாளை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர்.ஆனால் அவர் குறித்து எந்த விதமான தகவலும் தெரியவில்லை.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குள்ளப்ப நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (32) இவர் தனது தாய் மட்டும் பாட்டி சுப்பம்மாள் (75) ஆகியோருடன் வசித்து வந்தார்.

    கடந்த 1-ந் தேதி சுப்பம்மாள் பவானியில் உள்ள கூடுதுறை கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. சுப்பம்மாளை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர்.ஆனால் அவர் குறித்து எந்த விதமான தகவலும் தெரியவில்லை.

    இந்நிலையில் ஈரோடு வெண்டிபாளையம் பேரேஜ் நீர்த்தேக்க பகுதியில் சம்பவத்தன்று மூதாட்டியின் உடல் மிதப்பதாக பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சென்று பார்த்தபோது நீர்த்தேக்க பகுதியில் மிதந்த உடல் தனது பாட்டி உடல் என உறுதி செய்தார்.

    பின்னர் சுப்பம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. சுப்பம்மாள் தவறி நீர்த்தேக்க பகுதியில் விழுந்தாரா? அல்லது என்ன காரணம்? என்பது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×