search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in a mysterious"

    • தாய் சுசீலா (70). கடந்த 8 வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டு
    • கடந்த 25-ந் தேதி சுசீலா, மகள் கவிதா வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அர்த்தனாரி–பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (52). கூலித் தொழிலாளி. இவரது தந்தை மணி. கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

    இவரது தாய் சுசீலா (70). கடந்த 8 வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ–மனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

    சுசீலா, கடந்த ஒரு மாத காலமாக சென்னிமலை, 1010 காலனியில் உள்ள தனது மகள் கவிதா வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில், கடந்த 25-ந் தேதி சுசீலா, மகள் கவிதா வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து, கடந்த 27-ந் தேதி சென்னிமலை போலீசில் கவிதா புகார் செய்தார். மேலும் கவிதா–வின் சகோதரர் சுரேஷ் மற்றும் உறவினர்களும் சுசீலாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில், அறச்சலூர் அருகே, சிவகிரி செல்லும் சாலையில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஒரு பெண் உடல் கிடப்பதாக சுரேஷுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற சுரேஷ் இறந்து கிடக்கும் பெண் தனது தாய் சுசீலா தான் என்பதை உறுதி செய்தார்.

    மேலும் நோயால் பாதிக்கப்பட்ட சுசீலா நோய்க் கொடுமையா–லும், வயது மூப்பு காரணமாகவும் வாய்க்கா–லில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து, அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×