என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீட்டை விட்டு மாயமான மூதாட்டி பிணமாக மீட்பு
- சுப்பம்மாள் பவானியில் உள்ள கூடுதுறை கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
- சுப்பம்மாளை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர்.ஆனால் அவர் குறித்து எந்த விதமான தகவலும் தெரியவில்லை.
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குள்ளப்ப நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (32) இவர் தனது தாய் மட்டும் பாட்டி சுப்பம்மாள் (75) ஆகியோருடன் வசித்து வந்தார்.
கடந்த 1-ந் தேதி சுப்பம்மாள் பவானியில் உள்ள கூடுதுறை கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. சுப்பம்மாளை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர்.ஆனால் அவர் குறித்து எந்த விதமான தகவலும் தெரியவில்லை.
இந்நிலையில் ஈரோடு வெண்டிபாளையம் பேரேஜ் நீர்த்தேக்க பகுதியில் சம்பவத்தன்று மூதாட்டியின் உடல் மிதப்பதாக பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சென்று பார்த்தபோது நீர்த்தேக்க பகுதியில் மிதந்த உடல் தனது பாட்டி உடல் என உறுதி செய்தார்.
பின்னர் சுப்பம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. சுப்பம்மாள் தவறி நீர்த்தேக்க பகுதியில் விழுந்தாரா? அல்லது என்ன காரணம்? என்பது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்