search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "conductor"

    • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம், காமலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ரவுடி கும்பல் அடிக்கடி பொட்டியபுரம் பகுதியில் மோதிக்கொள்கின்றனர்.
    • பொட்டியபுரம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் அரசு பஸ்சை கல்லால் அடித்து பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம், காமலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ரவுடி கும்பல் அடிக்கடி பொட்டியபுரம் பகுதியில் மோதிக்கொள்கின்றனர்.

    கடந்த 18-ந்தேதி இரவு பொட்டியபுரம் அருகே ரவுடி கும்பல் ஒன்று சாலையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது ஓமலூரில் இருந்து காமலாபுரம், பொட்டியபுரம் வழியாக தின்னப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் சென்றது. இந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 40) என்பவர் ஓட்டினார். அரூர் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் (35) கண்டக்டர் பணியில் இருந்தார்.

    பொட்டியபுரம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் அரசு பஸ்சை கல்லால் அடித்து பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த ரமேஷ் குமார், வேடியப்பன் ஆகியோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் டிைரவர், கண்டக்டரை தாக்கியதாக பொட்டியபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் நவீன் (வயது 27), வேலு மகன் விஜய் (23), தங்கவேல் மகன் சின்னதுரை (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • அரசு பஸ் கண்டக்டர் மாரடைப்பால் இறந்தார்.
    • இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆண்டார் கொட்டாராம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 48). இவர் மதுரை அரசு போக்குவரத்து கழக நிறுவனத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி.

    சம்பவத்தன்று இரவு ராஜகோபால் பெரியார்- சக்கிமங்கலம் அரசு பேருந்தில் பணியில் இருந்தார். அந்த பஸ் நள்ளிரவில் சக்கிமங்கலத்தில் நின்றிருந்தபோது தூங்கியிருந்த ராஜகோபாலுக்கு நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் வலியால் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அடுத்த நாள் காலையில் டிரைவர் எழுப்பிய போது, ராஜ கோபாலிடம் பேச்சு மூச்சு இல்லை. எனவே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த வைத்து, இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கோட்டத்தில் சேலம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2000 மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • இந்த நிலையில் சேலம் கோட்டத்தில் 8 பெண் கண்டக்டர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் கோட்டத்தில் சேலம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2000 மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 32 பணிமனைகள் உள்ளன .

    அரசு பஸ்களில் பொதுவாக டிரைவர், கண்டக்டர்கள் 100 சதவீதம் ஆண்களே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் கோட்டத்தில் 8 பெண் கண்டக்டர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சேலம், நாமக்கல், மாவட்டத்தில் 4 பேரும், தர்மபுரியில் 4 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பணி மனையில் லதா என்பவர் கண்டக்டராக பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தாரமங்கலம், மேட்டூர் அரசு டவுன் பஸ்சிலும், ராசிபுரம் பணிமனையில் இளையராணி என்பவர் ராசிபுரம், சேலம் வழித்தடத்திலும் இயங்கும் அரசு பஸ்சிலும் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்கள்.

    இதே போல் அனுசியா என்பவர் பெங்களூரு, சேலம் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றுகிறார். தருமபுரியில் 2 பெண்கள் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகின்றனர். வாரிசு வேலையின் அடிப்படையில் இந்த பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

    • திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.
    • பஸ் மீது மோதுவது போல் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது.

    பல்லடம் :

    திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையம் பிரிவு அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்து பஸ் மீது மோதுவது போல் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது.

    இதனைப் பார்த்த பஸ் கண்டக்டர் பரமசிவம், பார்த்து மெதுவாக போ, என சத்தம் போட்டதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர், பஸ்ஸின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி கண்டக்டரிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாய்த்தகராறு முற்றி கண்டக்டர் பரமசிவத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பஸ்சில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் பல்லடம் அண்ணா நகரைச் சேர்ந்த சலிம் மகன் சாகுல் அமீது(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விருத்தாசலம்அருகே ஓடும் பஸ்சில் தவற விட்ட பணத்தை பயணியிடம் கண்டக்டர் ஒப்படைத்தனர்.
    • இயற்கை உபாதை கழிக்க சென்ற போது முனுசாமி பஸ்சை தவற விட்டுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வீரசிங்ககுப்பம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி (வயது70). இவர் அந்த பகுதியில் முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 7-ந் தேதி இரவு 2:30 மணி அளவில் திருச்சியில் இருந்து கடலூர் செல்லும் விருத்தாசலம் பணிமனையைச் சேர்ந்த பஸ்சில் ஏறி உள்ளார். அந்த பஸ் பெரம்பலூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் நின்றது. அப்போது இயற்கை உபாதை கழிக்க சென்ற போது முனுசாமி பஸ்சை தவற விட்டுள்ளார். அந்த பஸ் கடலூர் பஸ் நிலையம் சென்று அனைத்து பயணிகளும் இறங்கியபின் கண்டக்டர் வேல்முருகன் பஸ்சுக்குள் ஒரு பை இருப்பதை பார்த்துள்ளார். பயணி யாரோ அதை தவற விட்டு சென்று விட்டார்கள் என அதனை பிரித்துப் பார்த்தபோது அந்த பைக்குள் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 700 ரூபாய் பணம் இருந்தது.

    இதனை பார்த்த கண்டக்டர் இந்த தகவலை விருத்தாசலம் அரசு பஸ் பணிமனை 2 மேலாளர் நவநீத கிருஷ்ணனிடம் தெரிவித்தார். பின்னர் பஸ் விருத்தாசலம் பணிமனை வந்த பின்பு அதனை பணத்தை மேலாளிடம் ஒப்படைத்தார். பணத்தை தவறவிட்ட முனுசாமியும் அரசு பஸ் பணிமனைக்கு தொடர்பு கொண்டு தாம் பணத்தை தவறவிட்ட தகவலை கூறியுள்ளார்.  அதனை கேட்ட மேலாளர் முனுசாமியை விருத்தாசலம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் வர கூறினார். அதன்படி பயணி முனுசாமி அங்கு சென்றார். அப்போது போலீஸ் டி.எஸ்.பி. அங்கித் ஜெயின் முன்னிலையில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 700 ரூபாயை கண்டக்டர் வேல்முருகன், டிரைவர் மூர்த்தி மற்றும் கிளை மேலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முனுசாமியிடம் ஒப்படைத்தனர். பஸ் பயணி தவறவிட்ட பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரை போலீஸ் டி.எஸ்.பி. அங்கித் ஜெயின் மற்றும் போலீசார் வெகுவாக பாராட்டினர்.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து பணியாற்றி வருகின்றனர்.
    • பேருந்தில் வந்த பயணிகள் இரு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை சமாதானப்படுத்தி இருவரையும் கலைத்து விட்டனர்.

    திருப்பூர் :

    பின்னலாடை நகரான திருப்பூரில் அதிக அளவிலான வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் உள்ளவர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்திலிருந்து ெரயில் மூலமாகவும், பேருந்துகள் மூலமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருப்பூர் - ஊத்துக்குளி சாலை இரண்டாவது ெரயில்வே கேட் அருகில் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு வந்து 2 தனியார் பேருந்துகள் வந்தது.

    நேரம் பிரச்சனை தொடர்பாக ஒரே சமயத்தில் வந்ததால் நடு ரோட்டில் பஸ்களை நிறுத்தி விட்டு டிரைவர்மற்றும் கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கடைசியில் மோதலாக மாறியது.

    இதையடுத்து பேருந்தில் வந்த பயணிகள் இரு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை சமாதானப்படுத்தி இருவரையும் கலைத்து விட்டனர். இதையடுத்து இருவரும் பேருந்தை எடுத்துச் சென்றனர். தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் சண்டையிட்டு கொண்டதால் ஊத்துக்குளி சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.  

    • நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நாமக்கல் பணிமனை 1,2 ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகள் மூலம் 171 நகர மற்றும் புறநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    600-க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளனர். அண்மையில் வாரிசு அடிப்படையில் 10 பேருக்கு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர், கண்டக்டர் மற்றும் இதர பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதில் பணிக்காலத்தின் போது உயிரிழந்த பயணச்சீட்டு பரிசோதகரான முனியப்பன் அவரது மகள் இளையராணி (வயது 34) என்பவருக்கு நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக அரசு டவுன் பஸ்சில் (ராசிபுரம், சேலம், பஸ் எண் 52) நடத்துனர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்.

    இதுகுறித்து இளையராணி கூறியது:

    எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம்.

    தந்தை இறப்பால் வாரிசு வேலை கிடைத்தது. 10 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது நான் மட்டும் பெண். இப்பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகி விட்டது ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன் என்றார் இளையராணி.

    இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக நாமக்கல் மண்டல மேலாளர் பாண்டியன் கூறியதாவது:

    இதற்கு முன்பாக நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பஸ்சில் பெண் கண்டக்டர்கள் பணியாற்றினார்களா? என்பது சரிவர தெரியவில்லை சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்.

    தற்போது ராசிபுரம் பணிமனையில் வாரிசு அடிப்படையில் ஒருவருக்கு பெண் கண்டக்டர் பணி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    • கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அரசு பஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டரை விசாரணை நடத்தி கண்டித்து அனுப்பி வைத்தார்.
    • இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்கள் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கொடுமுடி:

    வேலூரில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ் கொடுமுடி பஸ் நிலையத்துக்கு காலை 9.30 மணிக்கு வந்து 9.40-க்கு செல்ல வேண்டும்.

    இந்நிலையில் இன்று 9.25 மணிக்கு கொடுமுடி பஸ் நிலையம் வந்த தனியார் பஸ்சின் கண்டக்டர் பஸ் நிலையத்தில் ஈரோட்டுக்கு பயணிகளை ஏற்றி கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு இருந்த அரசு பஸ் நேரக்காப்பாளர் 9.30-க்கு அரசு பேருந்து உள்ளது. பயணிகளை ஏற்ற வேண்டாம் என்று கூறியதற்கு அப்படித்தான் ஏற்றுவேன் என்று தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு வந்த கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அரசு பஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டரை விசாரணை நடத்தி கண்டித்து அனுப்பி வைத்தார்.

    மேலும் தனியார் பஸ் கண்டக்டர் சென்னையில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ பட்ட படித்து வருபவர் என்றும், கல்லூரி விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் கண்டக்டராக பணிக்கு வந்தவர் என்றும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்கள் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பணிச்சுமை அதிகரித்து டிரைவர், கண்டக்டர்கள் மனவேதனை, உடல்நலக்குறைவிற்கு ஆளாகி வருகின்றனர்.
    • இன்னும் சில நாட்களில் பல டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு பெற உள்ளனர்.

    திருப்பூர் :

    அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டத்தின் கீழ்திருப்பூர் மண்டலம் உள்ளது. உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட 8 கிளைகள் உள்ளன.மாவட்டத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் எனநாள் ஒன்றுக்கு 559 பஸ்கள் அதிகாலை முதல் இரவு வரை இயக்கப்படுகிறது.ஆனால் ஓய்வுபெற்ற டிரைவர், கண்டக்டர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் கிராமப்புற போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

    பணிச்சுமை அதிகரித்து டிரைவர், கண்டக்டர்கள் மனவேதனை, உடல்நலக்குறைவிற்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக தற்போதுள்ள டிரைவர், கண்டக்டர்களே தொடர்ந்து பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.குறிப்பாக சில கிராம வழித்தடங்களில் பஸ்களின் இயக்கம் நிறுத்தப்படுகிறது. இதனால் அரசு பஸ்களை நம்பி பயணிக்கும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இது குறித்து டிரைவர்கள் சிலர் கூறியதாவது:- கடந்த ஆட்சியின் போது ஓய்வு வயது 60 ஆக நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் பல டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு பெற உள்ளனர்.இதனால்ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். ஏற்கனவே தினமும் பணி முடிந்து வீடு திரும்பும் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீண்டும் பஸ்களை இயக்க முற்படுவதால் போதிய ஓய்வின்றி, மன அழுத்தம், உடல் நலக் குறைவுக்கு உட்படுகின்றனர்.காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்து அரசு பஸ்கள் தடையின்றி இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • செஞ்சி அருகே பஸ்சை நிறுத்தாத கண்டக்டரை தே.மு.தி.க. பிரமுகர் தாக்கினார்.
    • செஞ்சிஅருகே பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55).

    விழுப்புரம்:செஞ்சிஅருகே பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55) இவர் விழுப்புரத்தில் இருந்து அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். அவர் பாலப்பட்டு கிராமத்தில் பஸ்சை நிறுத்த கூறி உள்ளார். ஆனால் கண்டக்டர் கொளஞ்சி பஸ் பாலப்பட்டில் நிற்காது என்று தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தன் ஊர்க்காரர்களுக்கு போனில் தகவல் தெரிவித்து உள்ளார். இதனை அறிந்த கோவிந்தன் உறவினர்கள் திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்ஸை மறித்து கண்டக்டரை தாக்கினர். இது குறித்து கண்டக்டர் கொளஞ்சி அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் தே.மு.தி.க. மாவட்ட பொருளாளர் தயாநிதி உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

    • கத்தியை காட்டி மிரட்டி மினி பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • தனியார் மினி பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்ததை ஒப்புக் கொண்டார்.

    மதுரை

    மதுரை எழுமலை சூளாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 60). இவர் தனியார் மினி பஸ்சில் கண்ட க்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்தார்.

    அப்போது மினி பஸ் ஆண்டார்கொட்டாரம்- சக்கிமங்கலம் ரோட்டில் சென்றது. அப்போது பஸ்சில் பயணித்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி சுப்புராஜிடம் இருந்து பணப்பையை பறித்தனர்.

    அதன்பிறகு அவர்கள் கல்மேடு பகுதியில் இறங்கி தப்பிச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக சுப்புராஜ் கருப்பாயூரணி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பஸ் கண்டக்டர் சுப்புராஜிடம் பணப்பையை பறித்து சென்ற 2 பேர் அடையாளம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஆண்டார் கொட்டாரத்தில் பதுங்கி இருந்த ஒருவரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர்.

    இதில் அவர் ஆண்டார் கொட்டாரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் தர்மர் என்ற கோட்சா (வயது 23) என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே சிலைமான், அண்ணாநகர், கருப்பாயூரணி ஆகிய போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீஸ் விசாரணையில் அவர் தனியார் மினி பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்ததை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய அய்யனார் நகர் முருகன் மகன் குட்டை ரமேஷ் என்பவரை போலீசார் வருகின்றனர்.

    கோவை சூலூர் அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த கிராம நிர்வாக அதிகாரியிடம் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்த கண்டக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் லோகநாயகி.

    சம்பவத்தன்று இவர் அலுவலக பணி காரணமாக பாப்பம்பட்டி பிரிவில் இருந்து கோவைக்கு செல்வதற்காக தாராபுரத்தில் இருந்து கோவைக்கு வந்த தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது லோகநாயகி தன்னிடம் இருந்த 10 ரூபாய் நாணயத்தை கண்டக்டரிடம் கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார்.

    நாணயத்தை கண்டக்டர் வாங்க மறுத்து பஸ்சில் இருந்து இறங்குமாறு தகராறு செய்துள்ளார். பஸ் சிங்காநல்லூர் அருகே வந்த போது டிக்கெட் பரிசோதகர் பஸ் சில் ஏறி உள்ளார். அவரும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து விட்டார்.

    இதனையடுத்து லோகநாயகி செல்போன் மூலம் சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சித்தாவை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். அவர் கண்டக்டரை எச்சரிதார். பின்னர் கண்டக்டர் 10 ரூபாய் நாணயத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுத்துள்ளார். இதனால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×