பணிச்சுமையால் தவிக்கும் டிரைவர்-கண்டக்டர்கள் - அரசு போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா?

பணிச்சுமை அதிகரித்து டிரைவர், கண்டக்டர்கள் மனவேதனை, உடல்நலக்குறைவிற்கு ஆளாகி வருகின்றனர்.இன்னும் சில நாட்களில் பல டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு பெற உள்ளனர்.
காேப்புபடம்
காேப்புபடம்
Published on

திருப்பூர் :

அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டத்தின் கீழ்திருப்பூர் மண்டலம் உள்ளது. உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட 8 கிளைகள் உள்ளன.மாவட்டத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் எனநாள் ஒன்றுக்கு 559 பஸ்கள் அதிகாலை முதல் இரவு வரை இயக்கப்படுகிறது.ஆனால் ஓய்வுபெற்ற டிரைவர், கண்டக்டர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் கிராமப்புற போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

பணிச்சுமை அதிகரித்து டிரைவர், கண்டக்டர்கள் மனவேதனை, உடல்நலக்குறைவிற்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக தற்போதுள்ள டிரைவர், கண்டக்டர்களே தொடர்ந்து பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.குறிப்பாக சில கிராம வழித்தடங்களில் பஸ்களின் இயக்கம் நிறுத்தப்படுகிறது. இதனால் அரசு பஸ்களை நம்பி பயணிக்கும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இது குறித்து டிரைவர்கள் சிலர் கூறியதாவது:- கடந்த ஆட்சியின் போது ஓய்வு வயது 60 ஆக நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் பல டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு பெற உள்ளனர்.இதனால்ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். ஏற்கனவே தினமும் பணி முடிந்து வீடு திரும்பும் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீண்டும் பஸ்களை இயக்க முற்படுவதால் போதிய ஓய்வின்றி, மன அழுத்தம், உடல் நலக் குறைவுக்கு உட்படுகின்றனர்.காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்து அரசு பஸ்கள் தடையின்றி இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com