என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது

- திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.
- பஸ் மீது மோதுவது போல் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது.
பல்லடம் :
திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையம் பிரிவு அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்து பஸ் மீது மோதுவது போல் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது.
இதனைப் பார்த்த பஸ் கண்டக்டர் பரமசிவம், பார்த்து மெதுவாக போ, என சத்தம் போட்டதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர், பஸ்ஸின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி கண்டக்டரிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாய்த்தகராறு முற்றி கண்டக்டர் பரமசிவத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பஸ்சில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் பல்லடம் அண்ணா நகரைச் சேர்ந்த சலிம் மகன் சாகுல் அமீது(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
