search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மினி பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்த வாலிபர் கைது
    X

    கைது

    மினி பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்த வாலிபர் கைது

    • கத்தியை காட்டி மிரட்டி மினி பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • தனியார் மினி பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்ததை ஒப்புக் கொண்டார்.

    மதுரை

    மதுரை எழுமலை சூளாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 60). இவர் தனியார் மினி பஸ்சில் கண்ட க்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்தார்.

    அப்போது மினி பஸ் ஆண்டார்கொட்டாரம்- சக்கிமங்கலம் ரோட்டில் சென்றது. அப்போது பஸ்சில் பயணித்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி சுப்புராஜிடம் இருந்து பணப்பையை பறித்தனர்.

    அதன்பிறகு அவர்கள் கல்மேடு பகுதியில் இறங்கி தப்பிச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக சுப்புராஜ் கருப்பாயூரணி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பஸ் கண்டக்டர் சுப்புராஜிடம் பணப்பையை பறித்து சென்ற 2 பேர் அடையாளம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஆண்டார் கொட்டாரத்தில் பதுங்கி இருந்த ஒருவரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர்.

    இதில் அவர் ஆண்டார் கொட்டாரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் தர்மர் என்ற கோட்சா (வயது 23) என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே சிலைமான், அண்ணாநகர், கருப்பாயூரணி ஆகிய போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீஸ் விசாரணையில் அவர் தனியார் மினி பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்ததை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய அய்யனார் நகர் முருகன் மகன் குட்டை ரமேஷ் என்பவரை போலீசார் வருகின்றனர்.

    Next Story
    ×