search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மோதல்
    X

    மோதலில் ஈடுபட்ட டிரைவர்-கண்டக்டர்களையும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதையும் படத்தில் காணலாம்.  

    தனியார் பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மோதல்

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து பணியாற்றி வருகின்றனர்.
    • பேருந்தில் வந்த பயணிகள் இரு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை சமாதானப்படுத்தி இருவரையும் கலைத்து விட்டனர்.

    திருப்பூர் :

    பின்னலாடை நகரான திருப்பூரில் அதிக அளவிலான வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் உள்ளவர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்திலிருந்து ெரயில் மூலமாகவும், பேருந்துகள் மூலமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருப்பூர் - ஊத்துக்குளி சாலை இரண்டாவது ெரயில்வே கேட் அருகில் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு வந்து 2 தனியார் பேருந்துகள் வந்தது.

    நேரம் பிரச்சனை தொடர்பாக ஒரே சமயத்தில் வந்ததால் நடு ரோட்டில் பஸ்களை நிறுத்தி விட்டு டிரைவர்மற்றும் கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கடைசியில் மோதலாக மாறியது.

    இதையடுத்து பேருந்தில் வந்த பயணிகள் இரு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை சமாதானப்படுத்தி இருவரையும் கலைத்து விட்டனர். இதையடுத்து இருவரும் பேருந்தை எடுத்துச் சென்றனர். தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் சண்டையிட்டு கொண்டதால் ஊத்துக்குளி சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.

    Next Story
    ×