search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியரிடம்"

    • கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அரசு பஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டரை விசாரணை நடத்தி கண்டித்து அனுப்பி வைத்தார்.
    • இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்கள் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கொடுமுடி:

    வேலூரில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ் கொடுமுடி பஸ் நிலையத்துக்கு காலை 9.30 மணிக்கு வந்து 9.40-க்கு செல்ல வேண்டும்.

    இந்நிலையில் இன்று 9.25 மணிக்கு கொடுமுடி பஸ் நிலையம் வந்த தனியார் பஸ்சின் கண்டக்டர் பஸ் நிலையத்தில் ஈரோட்டுக்கு பயணிகளை ஏற்றி கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு இருந்த அரசு பஸ் நேரக்காப்பாளர் 9.30-க்கு அரசு பேருந்து உள்ளது. பயணிகளை ஏற்ற வேண்டாம் என்று கூறியதற்கு அப்படித்தான் ஏற்றுவேன் என்று தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு வந்த கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அரசு பஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டரை விசாரணை நடத்தி கண்டித்து அனுப்பி வைத்தார்.

    மேலும் தனியார் பஸ் கண்டக்டர் சென்னையில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ பட்ட படித்து வருபவர் என்றும், கல்லூரி விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் கண்டக்டராக பணிக்கு வந்தவர் என்றும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்கள் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×