search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "christians"

    • தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது.
    • 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுசரிப்பர்.

    திருப்பூர் :

    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருவிழாவை யொட்டி கடை பிடிக்கப்படும் தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது. ஏசு கிறிஸ்து சிலுவை யில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த் தெழுந்தார் என்ற நம்பிக்கை தான் கிறிஸ்தவம். இதை நினைவு கூறும் வகையில் தான் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுசரிப்பர்.கடந்த பிப்ரவரி 21-ந்தேதி சாம்பல் புதனுடன், தவ க்காலம் துவங்கியது. தினமும் தேவலாயங்களில் ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் தியானிக்கப்பட்டு வருகின்றன.வெள்ளி தோறும் சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப் படுகிறது.

    பக்தர்களை ஆன்மிக பாதையில் வழி நடத்தும் வகையில் கத்தோலிக்க, சி.எஸ்.ஐ.., உள்ளிட்ட அனைத்து தேவாலயங்க ளிலும், சிறப்பு நற் செய்தி கூட்டங்கள் நடத் தப்பட்டன. இந்த தவக்கா லத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது. இதையொட்டி தேவாலய ங்களில் குருத்தோ லை பவனி நடத்தப்பட்டன. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்க ளில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக, வருகிற 6-ந் தேதி புனித வியாழன், 7ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப் படுகிறது. 9-ந் தேதி ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப் படுகிறது.

    • கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
    • கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற்குட்பட்ட வடக்கு வீதியில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புனித பாத்திமா அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது.

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டுத் திருப்பலியில் கலந்து கொண்டனர். முன்னதாக சிலுவை ஆலயத்திற்குள் எடுத்துவரப்பட்டு தூபம் காண்பிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் கூடியிருந்த கிறிஸ்தவர்களுக்கு அருட்தந்தை ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் ஆலயத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூரையில் அமர்ந்து பலர் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

    மேலும் சரியாக 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஆலயமணி ஒலித்தது.அதனைத் தொடர்ந்து திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது.

    இந்த ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் திருவாரூர் நகரத்தின் முக்கிய வீதிகளான தெற்கு வீதி வடக்கு வீதி கீழ வீதி உள்ளிட்ட இடங்களில் தடுப்புகளை வைத்து இருசக்கர வாகனங்களை அனுமதிக்காமல் தடை செய்தனர்.

    சிலர் வீட்டு வாசலில் வைத்து கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ங்களை சோதனைக்கு பிறகே நகரத்திற்குள் அனுமதித்தனர்.

    • புதுப்புது வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
    • கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ். கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் இயேசு கிறிஸ்து மண்ணுலகில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கிவிடுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமரிசையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் நீங்கியிருப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.

    இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு இன்றும் 22 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குறிப்பாக வீடுகள்தோறும் வர்ணஜாலங்கள் காட்டும் வண்ண, வண்ண ஸ்டார்களால் தோரணங்கள் அமைக்கும் பணிகளிலும், இயேசுவின் பிறப்பை விளக்கும் வகையிலான குடில்கள் அமைக்கும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கிறிஸ்தவ ஆலயங்கள், அமைப்புகள் சார்பில் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குச் சென்று பஜனை பாடல்கள் பாடும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பஜனை பாடல்களைப் பொறுத்தவரையில் சில பகுதிகளில் ஊர்வலமாகச் சென்றும், சில பகுதிகளில் வாகனங்களில் சென்றும் பாடி வருகிறார்கள்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடைவீதிகளில் பல வண்ணங்களில், புதுப்புது வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஸ்டார் விற்பனை செய்யும் கடைகளில் ஸ்டார்கள் தோரணங்களாக தொங்க விடப்பட்டுள்ளன. இதேபோல் குடில்களில் வைக்கப்படும் சொரூபங்களும் பல வடிவங்களில் விற்பனைக்காக வைத்துள்ளனர். எனவே கிறிஸ்துமஸ் பண்டிகை இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது என்று கூறலாம்.

    இன்னும் சில தினங்கள் கழித்து கிறிஸ்தவர்கள் குடும்பம், குடும்பமாகச் சென்று ஜவுளிக்கடைகளில் புத்தாடைகள் வாங்குவதிலும், பேக்கரிகளில் கேக் மற்றும் இனிப்பு வகைகளுக்கு ஆர்டர் கொடுப்பதிலும் ஈடுபடுவார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையும், அதைத்தொடர்ந்து வரக்கூடிய புத்தாண்டு பண்டிகையையும் வரவேற்க தயாராகி விட்டார்கள்.

    • போதகர் அருண் அந்தோணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
    • சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கலெக்டரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அருண் அந்தோணி. சபை போதகர். இவர் அதே பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார். இந்தநிலையில் சபைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியார்பாளையம் பகுதியில் இடம் வாங்கி, சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளை தொடங்கியபோது, ஒருசிலர் சபை கட்டுமான பணி நடந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டுமான பணிகளை தடுத்ததுடன், அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

    இதுதொடர்பாக போதகர் அருண் அந்தோணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கடந்த பல மாதங்களாக கலெக்டரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார். இந்த நிலையில் சொந்த இடத்தில் திருச்சபை கட்ட தொடர்ந்து அனுமதி மறுப்பதை கண்டித்தும், கிறிஸ்தவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் செயல்களை கண்டித்தும் பெத்தேல் ஏ.ஜி. சபை போதகர் அருண் அந்தோணி தலைமையில் சபை மக்கள் 50-க்கும் மேற்பட்டோரும், அனைத்து கிறிஸ்தவ சபை போதகர்களும் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதையும், சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதையும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • இறந்தவர்களின் ஆத்துமா கர்த்தரிடத்தில் இளைப் பாறுகின்றது.
    • மரித்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி வழிபட்டனர்

    திருப்பூர் :

    சகல ஆத்துமாக்கள் தினத்தை கிறிஸ்தவர்கள் இன்று கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். இறந்தவர்களின் ஆத்துமா கர்த்தரிடத்தில் இளைப் பாறுகின்றது.அடிப்படை யில் அவர்களை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.மரித்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி வழிபட்டனர்.

    திருப்பூரில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கு கிறிஸ்தவர்கள் காலையில் இருந்து குடும்பம் குடும்ப மாக வரத் தொடங்கினார் கள்.கார்களிலும், இரு சக்கர வாகனத்திலும் மாலை மற்றும் மலர்களை வாங்கி எடுத்து வந்தனர். இன்று மாலை 3 மணிக்கு பிறகு கூட்டம் அதிகரிக்கும். ஆயிரக்கணக்கான கிறிஸ்த வர்கள் கல்லறை களின் முன்பு சிறிது நேரம் மவுனமாக இருந்து ஜெபித்து சென்றனர். சிறு வர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக வந்தனர்.அனைத்து திருச்சபையை சேர்ந்த கிறிஸ்தவர்களும் தங்களது உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களை நினைவு கூர்ந்து ஜெபத் துடன் வழி பட்டனர்.ஒரு சில கல்லறை தோட்டங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.  

    • களக்காடு சி.எஸ்.ஐ.கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
    • இந்தியாவின் ஒற்றுமையை விளக்கும் வகையில் சிறுவர், சிறுமியர் அனைத்து மாநில உடை அணிந்து சென்றது பொதுமக்களை கவர்வதாக இருந்தது.

    களக்காடு:

    களக்காடு சி.எஸ்.ஐ.கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டுக்கான ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது.

    இதையொட்டி கிறிஸ்தவர்களின் ஊர்வலம் நடந்தது.

    சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம், களக்காடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தை சேகர குரு சந்திரகுமார் தொடங்கி வைத்தார்.

    சபை ஊழியர் சுஜின் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் இந்திய சுதந்திர தின விழாவின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏந்தி சென்றனர்.

    மேலும் அனைவரும் கைகளில் காவி, வெள்ளை பச்சை வண்ண கொடிகளையும் பிடித்து சென்றனர். அத்துடன் இந்தியாவின் ஒற்றுமையை விளக்கும் வகையில் சிறுவர், சிறுமியர் அனைத்து மாநில உடை அணிந்து சென்றது பொதுமக்களை கவர்வதாக இருந்தது. இதில் களக்காடு, தோப்பூர், சிதம்பரபுரம், புதூர், ராமகிருஷ்ணாபுரம், கோவில்பத்து உள்பட 8 சபைகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    அவர்கள் இந்தியாவை நேசிப்போம், இந்தியா மத சார்பற்ற, மத சுதந்திர நாடு போன்ற வாசகங்கள் அடங்கிய பாததைகளையும் ஏந்தி சென்றனர்.

    ஊர்வலம் கிறிஸ்தவ ஆலயத்தை அடைந்ததும் கொடி ஏற்றப்பட்டது. ஸ்தோத்திர பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்து நடக்கிறது.

    தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து 39 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று நடந்தது. புனித வியாழன் இன்று கடைபிடிக்கப்படுவதால் கிறிஸ்தவர்கள் ஓட்டு போடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. #HolyThursday #TNElections2019

    திண்டுக்கல்:

    தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து 39 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று நடந்தது. காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.

    இன்று புனித வியாழக்கிழமையாகும். இன்றைய தினம் கிறிஸ்தவர்கள் புனித வாரமாக கடைபிடித்து வருகிறார்கள். இதனால் ஏராளமானோர் நோன்பு இருந்து வருகின்றனர்.

    கடும் வெயிலும் கொளுத்தி வருவதாலும், இந்த தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாலும் அரசு இதற்கு செவிமடிக்கவில்லை என்ற காரணத்தினாலும் வாக்கினை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

    தேர்தல் முடிந்த கையோடு நாளை(19-ந்தேதி) பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது. பெரும் பாலான வாக்குச்சாவடிகள் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

    நாளை புனித வெள்ளியாகும். அன்றைய தினம் கத்தோலிக்க திருச்சபையின் கடன் திருநாளாகும். எனவே இந்த சமயத்திலும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாவதால் கிறிஸ்தவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து கிறிஸ்தவர்கள் கூறுகையில்,

    மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு சிறுபான்மையினரை நசுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. எனவே இந்நிலையை அவர்கள் மாற்றவேண்டும் என்றனர்.  #HolyThursday #TNElections2019 

    பெரம்பலூர் மற்றும் அரியலூரில் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
    அரியலூர்:

    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து 40 நாட்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவர். மேலும் ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதுபோல் நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி பெரம்பலூரில் உள்ள புனித பனிமயமாதா திருத்தலத்தில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி பெரம்பலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவ பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து, ஆலயத்தில் குருத்தோலை சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதேபோல் குன்னம், வேப்பந்தட்டை, பாடாலூர், மங்களமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது.

    இதேபோல் அரியலூரில் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு இருந்து கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்திக்கொண்டு கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக மார்க்கெட் தெரு, தேரடி, சத்திரம் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தனர்.
    எகிப்து நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மின்யா மாகாணத்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தின் மீது ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். #CopticChristians #7deadinEgypt
    கெய்ரோ:

    காப்டிக் எனப்படும் பழைமைவாத கிறிஸ்தவர்கள் எகிப்து உள்ளிட்ட சில நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எகிப்து நாட்டில் மிக அதிகமாக உள்ளனர். 

    இந்நிலையில், எகிப்து நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மின்யா மாகாணத்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தின் மீது ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மேலும் சிலர் காயமடைந்ததாகவும் எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #CopticChristians #7deadinEgypt
    கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்வதற்கு அரசு மானியம் பெற்றுத்தந்தவர் ஜெயலலிதா என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய கல்வி மனைகளின் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்ட கண்காணிப்பாளர் திபு முன்னிலை வகித்தார். விழாவிற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் ஜெயதாஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

    அமைச்சர் கடம்பூர் ராஜூ பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

    கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் அரசாக அ.தி.மு.க. உள்ளது. அரசு மானியத்துடன் கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்வதற்கு அனுமதி அளித்தவர் ஜெயலலிதா. கிறிஸ்தவர்கள் வேளாங்கன்னி செல்வதற்கு தூத்துக்குடியிலிருந்து இயக்கப்படும் பேருந்தை திருச்செந்தூரிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த பள்ளி மிகவும் பழமை வாய்ந்த பள்ளியாகும். இங்கு விடுதியில் தங்கி பயிலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு சார்பில் 300 பேருக்கு ஆயிரம் கிலோவிற்கு மேல் அரிசி மற்றும் கோதுமை உணவு பொருளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வழங்கிவிட்டு இந்த ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள இங்கு வந்தேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #BJPMP #GopalShetty #Christians
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மலாடில் நடந்த முகமது நபி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மும்பை வடக்கு தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கோபால் ஷெட்டி கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், இந்திய விடுதலை போராட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்தனர். இதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை. கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்கள். அந்நியர்களான அவர்களுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறு பங்கு கூட கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

    பாஜக எம்.பி.யின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடந்து, அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோபால் ஷெட்டி சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக பேசி வருகிறார். வரலாறு தெரியாமல் அவர் பேசியுள்ளார். சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஆற்றிய சேவையை அவர் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, அவரது கருத்துக்கு கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. #BJPMP #GopalShetty #Christians
    ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
    விருதுநகர்:

    கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்புனித பயணம் பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. புனித பயணம் ஜூலை மாதம் முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்‘ என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807, அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு வருகிற 6-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×