search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupali"

    • ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
    • கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

    சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்–கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.


    கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்துள்ளது.

    இன்றும் ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பர்ண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விழா நடைபெறும்.
    • சிறப்பு பாடல், கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    கீழ்த்திசை நாடுகளின் லூர்துநகரம் என அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கும்.

    இந்நிலையில், இந்தாண்டு பெருவிழா இன்று மாலை மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் கொடி புனிதம் செய்யப்பட்டு ஊர்வலத்துக்கு பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், தமிழ் திருப்பலி நடைபெறும்.

    வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், ஆலயம் மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    வரும் 1-ம் தேதி மாலை சிலுவை பாதையும், 7-ம் தேதி மாலை தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபமும் நடைபெறும் அதை தொடர்ந்து சிறப்பு பாடல் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது. 8-ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. காலை 8 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு பெரிய தேர்பவனி நடக்கிறது. இதன்பின்பு கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், 2500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விழா நடைபெறும்.
    • சிறப்பு பாடல், கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    கீழ்திசை நாடுகளின் லூர்துநகரம் என அழைக்கப்ப டும் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கும்.

    இந்தாண்டு பெருவிழா நாளை (29-ந்தேதி) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் கொடி புனிதம் செய்யப்பட்டு ஊர்வலத்துக்கு பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து ஆலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், தமிழ் திருப்பலி நடைபெறும்.

    வரும் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், ஆலயம் மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    வரும் 1-ந்தேதி மாலை சிலுவை பாதையும், 7-ந்தேதி மாலை தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபமும் நடைபெறும் அதை தொடர்ந்து சிறப்பு பாடல் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

    8-ந்தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டா டப்படுகிறது.

    காலை 8 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    இரவு 8 மணிக்கு பெரிய தேர்பவனி நடக்கிறது. இதன்பின்பு கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், ஆலய நிர்வாகம், வேளாங்கண்ணி பேரூராட்சி, போலீஸ்துறையினர் செய்து வருகின்றனர்.

    • பூ அன்னையின் பிறப்பு பெருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது.
    • கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம்.

    பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று பக்தர்களால் புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது.

    வரும் 30 ஆம் தேதி புதன்கிழமை அன்னையின் பிறப்பு பெருவிழா தொடக்கமாக கொடியேற்று நிகழ்வு நடைபெறுகிறது .அன்னையின் உருவம் வரையப்பட்ட திருக்கொ டியை பக்தர்கள் பக்தி பெருக்கோடு எடுத்து வந்து கோவிலின் முன்புறமுள்ள கொடி மரத்தில் ஏற்றப்படும்.

    இந்த நிகழ்வில் கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் கலந்து கொண்டு அன்னையின் பிறப்பு பெருவிழா தொடக்கமாக கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    திருப்பலியில் கும்பகோ ணம் பிஷப் அந்தோனி சாமியுடன், பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ் ,தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் ,உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீகத் தந்தை அருளானந்தம் மற்றும் பல்வேறு அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றி வைக்கின்றனர்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    வரும் 31ஆம் தேதி மரியா -இறை நம்பிக்கையின் நங்கூரம் என்ற தலைப்பில் அரிமளம் பங்கு தந்தை தஞ்சை டோமி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    செப்டம்பர் மாதம் 1ம் தேதி மரியா- சீடத்துவத்தின் அடையாளம் என்ற தலைப்பில் திருச்சி புதிய வளனார் கல்லூரி அதிபர் பவுல்ராஜ் திருப்பலி நிறைவேற்றுகிறார். செப்டம்பர் 2ம்தேதி மரியா-மனிதநேயத்தின் உச்சம் என்ற தலைப்பில் திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரி அதிபர் ஆன்ட்ரூ டி ரோஸ் , செப்டம்பர் 3தேதி மாலை மரியா -உதவுவதில் முன்னோடி என்ற தலைப்பில் கும்பகோணம் கல்வி மற்றும்திட்டப்பணி குழு செயலாளர் கஸ்பார், செப்டம்பர் 4ம் தேதி மரியா -ஆறுதலின் ஊற்று என்ற தலைப்பில் திருச்சி மறை மாவட்ட பொருளாளர் ஜேம்ஸ் செல்வநாதன், செப்டம்பர் 5ஆம் தேதி மரியா -மனவலிமையின் முன்மாதிரி என்ற பொருளில் திருச்சிலுவை சபை தமிழக மறை மாநில தலைவர் ஜோசப் கஸ்பார், 6ம் தேதி மரியா- முன்னெடுப்பின் உதாரணம் என்ற தலைப்பில் அம்மாபேட்டை பங்குத்த ந்தைஜோஜோ லாரன்ஸ்,

    செப்டம்பர் 7ஆம் தேதி மரியா -ஒற்றுமையின் வழிகாட்டி என்ற பொருளில் கும்பகோணம் மறை வட்ட முதன்மை குரு பிலோமின்தாஸ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்று கின்றனர்.

    அதனை தொடர்ந்து அன்னையின் பிறப்பு நாளாக கருதப்படும் செப்டம்பர் மாதம் 8 தேதி மாலை 6 மணிக்கு அன்னையின் பிறப்பு பெருவிழா திருப்பலியை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் நிறைவேற்றி, இரவு 8:30 மணி அளவில் அன்னையின் பிறப்பு பெருவிழா தேர்பவனியை தொடங்கி வைக்கிறார். மறுநாள் செப்டம்பர் 9-ம் தேதி காலை திருவிழா திருப்பலிநிறை வேற்றுவதுடன் பூண்டி மாதா திருத்தல பேராலயத்தின் அன்னையின் பிறப்பு பெருவிழா நிகழ்வுகள் நிறைவு பெறுகின்றன. அன்னையின் பிறப்பு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ்,தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • வண்ண ஒளிச்சிதறல்கள் வானில் பரவியபோது உற்சாக குரல் எழுப்பினர்.
    • பக்தர்கள் கைகளை உயர்த்தி மரியே வாழ்க என முழக்கங்களை எழுப்பினர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் புகழ் பெற்ற கிறித்தவ பேராலயம் பூண்டி மாதா பேராலயம்.பெருமை மிக்க பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 6-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரப்பவனியும் அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நிறைவேற்ற ப்பட்டது.

    பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நாளான நேற்று காலை பூண்டி மாதா பேராலயத்தில் பங்கு தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர், ராயப்பர் ஆகியோரது நினைவு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    நேற்று மாலை 6 மணி அளவில் கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி தலைமையில் மரியா - அருளின் ஊற்று என்ற தலைப்பில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

    திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி,துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ் ,அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் மற்றும் அருட்தந்தையர்கள்பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பலி நிறைவடைந்த உடன் பூண்டி மாதா பேராலயத்தின் முகப்பில் வண்ணமின்னலங்கார பெரிய தேரில் பூண்டி மாதாவின் சுரூபம் வைக்கப்பட்டு தேரை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.

    பேண்டு வாத்திய இசை முழங்க நடைபெற்ற தேர் பவனியின் போது திரண்டு இருந்த பக்தர்கள் ,கைகளை உயர்த்தி மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி வணங்கினார்கள்.

    தேர்பவனிதொடங்கிய உடன் அதிரடி வாணவே டிக்கை நடைபெற்றது.வண்ண ஓளிச்சிதறல்கள் வானில் பரவியபோது உற்சாக குரல் எழுப்பினர்.

    திருவிழா நிறைவு நாளான இன்று (திங்கள்)காலை திருவிழா திருப்பலி கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி நிறைவேற்றினார். இன்று (திங்கள் )மாலை கொடி இறக்கத்துடன் பூண்டி பேராலய ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது.

    தேர் பவனியை முன்னிட்டு பேராலய வளாகம் முழுவதும் நாடெங்கும் இருந்து வந்த பக்தர்கள் குழுமி இருந்தனர்.

    பேராலயம் அதி நவீன மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டு ப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • தேரில் பூண்டி அன்னையின் சுருபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெறும்.
    • வருகிற 15-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. பூலோகம் போற்றும் பூண்டி மாதா என அழைக்கப்படும் இந்த பேராலயத்தில் ஆண்டு பெருவிழா வருகிற 6-ம்தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    பேராலய ஆண்டு திருவிழா தொடக்க நிகழ்வாக கொடியேற்றம் நிகழ்ச்சி வரும் 6-ம் தேதி மாலை நடைபெறுகிறது .

    பூண்டி அன்னையின் உருவத்துடன் கொடியை பக்தர்கள் ஜெபமாலை பாடல்களுடன் ஊர்வலமாக எடுத்து வருவார்கள்.

    ஊர்வலம் கொடி மேடையை வந்து அடைந்தவுடன் கொடி மரத்தில் அந்தமான் நிகோபார், போர்ட் பிளேர் மறை மாவட்ட பிஷப் விசுவாசம் செல்வராஜ் கொடியை ஏற்றி வைத்து மரியா- ஆறுதலின் அன்னை என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், துணைஅதிபர் ரூபன் அந்தோணி ராஜ் , தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    கொடியேற்றத்தினை தொடர்ந்து நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும் அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் அருள் தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    வரும் 8-ம் தேதி (திங்கட்கிழமை) புதுமை இரவு வழிபாடு கும்பகோணம் மறை மாவட்ட அருட்தந்தை யூஜின் டோனி வழிநடத்து தலில் நடைபெறும்.

    பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா நாளான வரும் 14ஆம் தேதி காலை பூண்டி மாதா பேராலயத்தில் பணியாற்றி மறைந்த அருட் தந்தையர்கள் லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் அடிகளாரின் நினைவு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    மாலை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் மரியா -அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    அதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும் மின்விளக்கு களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூண்டி அன்னையின் சுருபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.

    தொடர்ந்து வாணவே டிக்கை நடைபெறும்.

    மே 15ஆம் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி கும்பகோணம் ஆயர் அந்தோ னிசாமி நிறைவேற்றுவார்.

    மாலையில் கொடி இறக்கத்துடன் பூண்டி திருத்தல பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது .

    திருவிழா விற்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் அருட்தந்தையர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    • திருவிழிப்பு சடங்குகளான புதுநெருப்பு, புனித தீர்த்தம் புனிதம் செய்யும் சடங்குகள் நடைபெற்றது.
    • தொடர்ந்து உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்தெழுந்த நிகழ்வை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இதனை முன்னிட்டு நள்ளிரவு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை திரு இருதய பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை நள்ளிரவு வழிபாடு மறைமாவட்ட பரிபாலகரும், ஆயருமான (பொறுப்பு) சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பாஸ்கார் திருவிழிப்பு சடங்குகளான புதுநெருப்பு, புனித தீர்த்தம் புனிதம் செய்யும் சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

    இந்த வழிபாட்டில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலாளர் ஆன்ட்ரூ செல்வகுமார், திருத்தொண்டர் அரவிந்த் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்தவுடன் வியாகுல அன்னை ஆலய முகப்பில் இயேசுவின் உயிர்த்த காட்சி நடைபெற்றது. தொடர்ந்து உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.முடிவில் ஈஸ்டர் பாண்டிகை வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

    இதேப்போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்க ளிலும் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.
    • இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உயிர் நீத்த தினமான புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கலை அரங்கத்தில்பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இறை வார்த்தை வழிபாடு,சிறப்பு கூட்டு திருப்பலி நிறை வேற்றப்பட்டது.

    சிலுவையில் அறை யப்பட்ட இயேசுவின் சொரூ பத்தை பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்கு தந்தைகள் முத்தமிட்டனர்.

    அதைத்தொடர்ந்து இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது பக்தர்கள் முத்தமிட்டு வழிபட்டனர்.

    • குருத்தோலை புனிதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை திரு இருதய பேரா லயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி இன்று தஞ்சை மறைமாவட்ட பரிபாலகரும் ஆயர் (பொ) சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் குருத்தோலைகளை ஏந்தியப்படி பவனியாக சென்றனர்.இதேபோல் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் புனித சேவியர் தொழிற்பயிற்சி பள்ளியின் தாளாளர் சூசைமாணிக்கம் அடிகளார் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து மறைமாவட்ட பரிபாலகர்சகாயராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை புனிதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பேராலய பங்குத்தந்தை பிரபகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலர் ஆன்ட்ரு செல்வகுமார், திருத்தொண்டர் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத்தலைவர் வின்சண்ட் தலைமையில் செயலர் குழந்தைராஜ், அன்பிய பொறுப்பாளர்கள், இளைஞர் மன்றத்தினர், பக்த சபையினர் செய்து இருந்தனர்.

    • சாம்பல் புதனை முன்னிட்டு திருச்சி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது
    • சி.எஸ்.ஐ. திருச்சபைகளிலும் சிறப்பு ஆராதனை

    திருச்சி:

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் கடைபிடிக்கும் தவக்காலம் இன்று தொடங்கியது. தவக் காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புத–னாக அனுசரிக்கப்பட்டது.இதனை முன்னிட்டு திருச்சி மேலப்புதூர் தூய மரி–யன்னை பேரா–லயம், பாலக்கரை சகாய–மாதா தேவாலயம், மெயின் கார்டு கேட் லூர்து அன்னை ஆல–யம், புத்தூர் பாத்திமா கோவில், சிம்கோ மீட்டர் ஜெகன்மாதா கோவில், ஸ்ரீரங்கம் அமல ஆசிரம அந்தோணியார் கோவில், பொன்மலை சூசையப்பர் ஆலயம், எடத்தெரு பழைய கோவில்,கரு–மண்டபம் குணமளிக் கும் மாதா ஆலயம், காட்டூர் அந்தோணியார் ஆலயம், நெம்பர் 1 டோல்கேட் குழந்தை யேசு கோவில், கரு–மண்டபம் தூய யோவான் உள்ளிட்ட கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு திருப் பலி நடைபெற்றது.மேலும் திருச்சியில் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் டி.இ.எல்.சி. ஆலயங்களிலும், பெந்த–கோஸ்தே ஜெப கூடங்க–ளில் சிறப்பு பிரார்த்தனை, பிரசங்கம் நடைபெற்றது. கத்தோலிக்க கோவில்களில் நடைபெற்ற சிறப்பு திருப்ப–லியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.சாம்பல் புதனை முன் னிட்டு திருச்சி புத்தூர் சி.எஸ்.ஐ. ஆல்செயிண்ட் சர்ச், திருச்சி ஜங்ஷன் புனித யோவான் தேவாலயம் ஆகியவற்றில் நடந்த சாம் பல் புதன் சிறப்பு பிரார்த் தனையில் திருச்சி-தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன், குருத்துவ செயலர் சுதர்சன் மற்றும் ஆயர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திருப்பலியின்போது கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது. குருத் தோலைகளை எரித்து அதில் இருந்து கிடைத்த சாம்பலை அருட் தந்தையர்கள், கிறிஸ் தவர்கள் நெற்றியில் பூசி–னர். இதனைத் தொடர்ந்து 40 நாட்கள் கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலி மற்றும் சிலுவை வழிபாடு நடைபெறும். இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் ஒருசந்தி எனும் விரதமிருந்து கடவுளை நினைத்து திருப்பலி மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவர்.ஏப்ரல் மாதம் 6-ந்தேதி பெரிய வியாழன் ஆகும். அன்று பாதம் கழுவுதல் நடைபெறும். அன்றைய இரவு முழுவதும் கிறிஸ்த–வர்கள் விழித்திருந்து நற் கருணை ஆராதனையில் கலந்து கொள்வார்கள். ஏசு உயிர்நீத்த நாளாக கடைபிடிக்கப்படும் பெரிய வெள்ளியான ஏப்ரல் 7-ந்தேதியை கிறிஸ்த–வர்கள் துக்க தினமாக அனுச–ரிப் பார்கள். அன்று மாலை நடைபெறும் சிறப்பு திருப்ப–லியில் பாடுபட்ட ஏசுவின் சொரூபத்திற்கு முத்தமிடும் பாத முத்தி நிகழ்வு நடை–பெறும்.8-ந்தேதி, சனிக்கிழமை இரவு 12 மணிக்கு ஈஸ்டர் திருப்பலி நடைபெறும். 9-ந்தேதியான ஞாயிற்றுக் கிழமை ஏசு உயிர்ப்பித்த நாளாக ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டா–டுவர்.

    • நம்பிக்கைக்கு அழைத்து செல்லும் தொடக்க நாளாக சாம்பல் புதன் கருதப்படுகிறது.
    • குருத்தோலைகளை எரித்து அதிலிருந்து பெறப்பட்ட சாம்பலை புனிதம் செய்து பூசினர்.

    பூதலூர்:

    தஞ்சை அடுத்த பூண்டி மாதா பேராலயத்தில் இன்று கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கமாக சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தீமையில் இருந்து நன்மைக்கும், அநீதியிலிருந்து நீதிக்கும், அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு அழைத்து செல்லும் தொடக்க நாளாக சாம்பல் புதன் கருதப்படுகிறது. இறை உதவியை இறைவனின் அன்பை ஜெபத்தின் மூலம் பெற வேண்டும் என்று எடுத்துரைக்கும் நாளாக சாம்பல் புதன் கடைபிடிக்கப்படுகிறது.

    பூண்டி மாதா பேராலயத்தில் இன்று நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி பேரலாய அதிபர் சாம்சன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பலி நிறைவடைந்தவுடன் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று பக்தர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று பாதுகாத்து வந்த குருத்தோலைகளை எரித்து அதிலிருந்து பெறப்பட்ட சாம்பலை புனிதம் செய்து பக்தர்களின் நெற்றியில் பேராலய அதிபர் பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தவக்கால விரதத்தை தொடங்கினர். திருப்பலியின் போது பக்தர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது.

    • கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றவும் வழிபாடு நடத்தப்பட்டது.
    • கடந்த ஆண்டில் நடந்த நன்மைகளுக்காக நன்றி செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    நள்ளிரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதனை முன்னிட்டு தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு நன்றி வழிபாடு திருத்தொண்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. இதில் கடந்த ஆண்டில் நடந்த நன்மைகளுக்காக நன்றி செலுத்தப்பட்டது.

    மேலும் உலக அமைதிக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றவும் வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின்னர் பேராலய பங்கு தந்தை பிரபாகர் தலைமையில் புத்தாண்டு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. இதில் உதவி பங்குத்தந்தை பிரவீன் மற்றும் பங்கு பேரவையினர், இளைஞர் மன்றத்தினர் உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    இதேப்போல் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயம், தஞ்சை குழந்தை ஏசு திருத்தலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

    ×