என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பூண்டி மாதா பேராலயத்தில் நாளை தேர்பவனி
- கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் மரியாள் எளிமையின் எடுத்துக்காட்டு என்ற பொருளில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
- தேர் பவனியை பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார்.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியே ற்றத்தினை தொடர்ந்து நவ நாட்கள் என அழைக்கப்படும் விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரபவனியும் திருப்பலியும் நடைபெற்றது.
மாதா பிறப்பு பெருவிழா வின் 9ம் நாளான இன்று (புதன் கிழமை) மாலை மறைவட்டமுதன்மை குரு இன்னசென்ட் மரியாள் -தியாகத்தின் சிகரம் என்ற பொருளில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
விழாவின்10 ம்நாள் மற்றும் மாதாவின் பிறப்பு நாள் ஆனநாளை (வியாழன்) மாலை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் மரியாள்-எளிமையின் எடுத்துக்காட்டு என்ற பொருளில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
திருப்பலி முடிந்ததும் இரவு 9.30 மணிக்கு மாதாவின் பிறப்பு பெருவிழா தேர் பவனி நடைபெறுகிறது.வண்ணமின் விளக்கு அலங்காரத்திலும், மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில்அன்னையின் சுருபம் வைக்கப்பட்டு தேர் பவனியை பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார்.
தேர்பவனியின் போது நாடெங்கும் இருந்து திரண்டு வந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று வாழ்த்துஒலி முழக்கங்களை எழுப்பி வணங்குவர்.
தேர்பவனி முடிந்ததும் நாளை மறுநாள் (வெள்ளி கிழமை) காலை 6மணிக்கு திருவிழா திருப்பலி மரியாள் தாய்மையின் தலைப்பேறு என்ற தலைப்பில் கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் நிறைவேற்றுவது டன் கொடி இறக்கப்பட்டு பூண்டி மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா நிறைவு பெறும்.
மாதா பிறப்பு பெருவிழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தையர்கள் அருளானந்தம், ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.மாதாவின் பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு பேராலய வளாகம் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்