search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CCTV"

    • சாகுல் ஹமீது வழக்கம்போல் கடை திறப்பதற்காக வந்துள்ளார்.
    • பணம் வைத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜார் காமராஜர் பூங்கா எதிரே காயல்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது (49) என்பவருக்கு சொந்தமான பேக்கரி கடை உள்ளது.

    பூட்டு உடைப்பு

    அவர் நேற்று காலையில் வழக்கம்போல் கடை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பணம் வைத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது. அதனுள் வைத்திருந்த ரூ.28 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    போலீசில் புகார்

    இது பற்றி சாகுல் ஹமீது ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் பேக்கரி கடையின் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது 2 மர்ம நபர்கள் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து பணத்தை திருடிய காட்சி பதிவாகி இருந்தது. அந்த 2 நபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
    • வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் அண்ணாதுரை. கடந்த சனிக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ள வந்த அண்ணாதுரை தனது இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கின் பின்புறம் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.

    மாலை பணி முடிந்து வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் காணவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. காட்சிகளை பார்த்தபோது அதில் மதியம் 3மணியளவில் குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு அண்ணாதுரையின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது . இருசக்கர வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.

    இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி., காட்சி பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லேயே இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது
    • தனிநபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு இது போன்ற பல குற்றங்களை தடுக்க கேமராவின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது.  இதனை தடுக்கும் விதமாக சின்ன சேலம் பகுதியில் உள்ள புதிய பஸ் நிலையம், அம்சாகுளம், நயினார் பாளையம் செல்லும்ரெயி ல்வே கேட் சாலை, கூகையூர் ரோடு, மூங்கில் பாடி சாலை போன்ற முக்கிய இடங்களில் 23 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் நடந்த குற்றத்தடுப்பு கண்காணிப்பு கேமரா தொடக்க விழாவில் டி.எஸ்.பி. மோகன் ராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் வளர்ந்து வரும் முக்கிய நகரமாகும். தனிநபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு இது போன்ற பல குற்றங்களை தடுக்க கேமராவின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது. தொழில் செய்பவர்கள் அவர்களுடைய சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது. பொருத்த வேண்டும் வே என்றார்.. நிகழ்ச்சியில் கூடுதல் டி.எஸ்.பி. ரமேஷ், இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப் இன்ஸ்பெக்டர் பாரதி, மணிகண்டன், தனிப்பிரிவு காவலர் கணேசன், ராகவேந்திரா நிதி நிறுவன இயக்குனர் ஏ.டி.ஆறுமுகம் மற்றும் போலீஸ் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகர பகுதியில் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு போய் வந்தது.
    • புதிய பஸ்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மோட்டார் சைக்கிள் திருட்டு

    பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், தியேட்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு போய் வந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் உறவினரை வழி அனுப்ப வந்தார். இதற்காக மோட்டார் சைக்கிளை பஸ்நிலையம் முன்பு நிறுத்தி விட்டு சென்றார்.

    பின்னர் வந்து பார்த்த போது அது திருட்டு போய் இருந்தது. இதுதொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சி.சி.டி.வி. காமிரா காட்சி

    இதற்கிடையே புதிய பஸ்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சில சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து நேற்று போலீசார் பஸ்நிலைய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே சிறுவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிள்களை திருடினர். உடனடியாக அவர்களை பிடித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    5 மாணவர்கள் சிக்கினர்

    அதில் அவர்கள் பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவர்கள் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் மாநகர பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து திருடி சென்றது தெரியவந்தது. இதற்காக அவர்கள் போலியாக சாவிகளையும் தயார் செய்து வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து 8 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கொள்ளையர்களை கண்டுபிடிக்க தாலுகா இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • கொள்ளை நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, மூலப்பாளையம் ரைஸ் மில் சாலையை சேர்ந்தவர் முரளிகண்ணன் (35). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.

    அப்போது மர்மநபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரொக்கப்பணம் 1.95 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்தனர்.

    இவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வராஜ் (45). கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரும் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார்.

    இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த 4.5 பவுன் நகை, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்தனர். இதற்கு அடுத்த வீட்டில் வசிப்பவர் சித்திக் அலி. இவரது வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சித்து தப்பிவிட்டனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க தாலுகா இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கொள்ளை நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், மனைவியை அழைத்து கொண்டு வெளியூர் மருத்துவமனை சென்றார்.
    • மேலும் கைரேகை நிபுணர்களை வரழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கீழகாசாக்குடி பகுதியில் வசித்து வருபவர் முத்துசின்னசாமி(வயது75). இவர் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர். காரைக்காலில் உள்ள தனது வீட்டில், மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், மனைவியை அழைத்து கொண்டு வெளியூர் மருத்துவமனை சென்றார். மருத்துவமனையில் மனைவிக்கான சிகிச்சை முடிந்தநிலையில், வீடு திரும்பிய முத்துசின்னசாமி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    பின்னர், முத்துசின்னசாமி கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார், வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மோப்ப நாய் அர்ஜுனை வரவழைத்து ஓடவிட்டனர். நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களை வரழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, வீடு, தெரு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ் மேற்பார்வையில், மர்ம நபர் குறித்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நெல்லை மாவட்டம் ஏர்வாடி 6-வது தெருவை சேர்ந்தவர் சேக். தொழிலதிபர்.
    • சிறுவர்களை வைத்து திருட்டு சம்பவத்தில் கும்பல் ஈடுபடுவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி 6-வது தெருவை சேர்ந்தவர் சேக்(வயது 60). தொழிலதிபர். சம்பவத் தன்று இவரது வீட்டில் பட்டப்பகலில் 15 வயது சிறுவன் ஒருவன் திருடும் நோக்கத்தில் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலை உடைக்க முயற்சி செய்துள்ளான்.

    திருட முயற்சி

    இந்த சத்தம் கேட்டு சேக் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை பார்த்துள்ளார். அப்போது சிறுவன் ஒருவன் வீட்டின் பின்புறம் ஜன்னலை உடைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அந்த சிறுவனை பிடிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றார்.

    அப்போது ஆட்கள் வரும் சத்தம் கேட்ட சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 7-ந் தேதி ஏர்வாடி பகுதியில் ஒரு ஸ்டூடியோவில் புகுந்த சிறுவன், அங்கு உரிமையாளர் இல்லாததை அறிந்து பணத்தை திருடி சென்றுள்ளான்.

    விசாரணை

    இந்த 2 சம்பவங்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது. ஏர்வாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர் களுக்கு கஞ்சா விற்பனை செய்த தாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் சிறுவர்களை வைத்து திருட்டு சம்பவத்தில் கும்பல் ஈடுபடுவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவர்களை போலீசார் பிடித்து, அவர்கள் மூலம் திருட்டு கும்பலை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாரியம்மாள் சங்குபட்டி பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.
    • அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவை அவர்கள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த சங்குபட்டியை சேர்ந்தவர் மாரியம்மாள்(வயது 42). இவர் சங்குபட்டி பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.

    சிவகிரி அருகே உள்ள சரவணபுரத்தை சேர்ந்த இன்பராஜ், வேலு, கருப்பசாமி, சதீஷ்குமார் ஆகியோரிடம் மாரியம்மாளும், அவரது கணவர் அந்தோணி ராஜும் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அவர்கள் 4 பேரும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தென்காசி மாவட்ட செயலாளர் மாடசாமி தலைமையில் சம்பவத்தன்று மாரியம்மாளின் ஓட்டலுக்கு வந்துள்ளனர்.

    அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், ஒரு கட்டத்தில் ஓட்டலை சூறையாடியதோடு அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவை எடுத்து சென்றதாகவும், மாரியம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் த.ம.மு.க. மாவட்ட செயலாளர் மாடசாமி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு நேரங்களில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.
    • கடைகளின் முன்பகுதியில் அதிக திறன் கொண்ட கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் சுற்று வட்டாரத்தில் தொடர்ச்சி யாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வள்ளியூர் பகுதி வியாபாரிகள் தங்களது கடைகளின் முன்பகுதிகளிலும் கடையின் உள்பகுதிகளிலும் உயர் திறன் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    வள்ளியூர் பேரூராட்சியில் உள்ள ராஜரத்தினம் நகர், இ.பி.காலணி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இது தவிர பகல் நேரத்தில் இருசக்கரவாகன திருட்டுகள் அதிகரித்து வருகிறது. எனவே வியாபாரிகள் தங்களது கடைகளின் முன்பகுதியில் அதிக திறன் கொண்ட கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும்.

    கண்காணிப்பு காமிரா பதிவுகளை சேமித்து வைக்கும் கருவிகளில் சேமிக்கவும் அதனை உறுதி படுத்திக் கொள்ளவும் செய்ய வேண்டும். கண்காணிப்பு காமிராவின் செயல்பாடுகளை தங்களது அலைபேசியில் கண் காணித்துக் கொள்ளுங்கள்.

    மேலும் வள்ளியூர் பேரூராட்சி தற்போது தொழில்நிறுவனங்களாலும், ஜனநெருக்கடியிலும் அதிகரித்து வந்துள்ளது.

    வெளியூர்களில் இருந்து அதிக மக்கள் வள்ளியூரில் குடியேறியுள்ளனர்.

    குறிப்பாக வடமாநி லங்களைச் சேர்ந்த ஆயிரத்தி ற்கும் அதிகமானோர் புதிதாக குடியேறியுள்ளனர். இப்படி வளர்ச்சியடைந்துள்ள வள்ளியூர் காவல்நிலை யத்தில் காவலர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

    குறைவான காவலர்க ளால் வளர்ச்சியடைந்து வரும் வள்ளியூர் பகுதியை கண்காணிக்க சிரமமாக உள்ளது. எனவே வள்ளியூர் காவல்நிலையத்தில் கூடுதலாக காவலர்களை நியமிக்கவேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    • தெருக்களில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு திருடர்கள் திருடி வருகின்றனர்
    • சி.சி.டி.வி. காமராவில் பதிவான காட்சி புகைப்படங்களை வலைதளங்களில் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் பஜார் மற்றும் தெருக்களில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு திருடர்கள் திருடி வருகின்றனர். அந்த காட்சி சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமராவில் பதிவாகியுள்ளது.

    இதுகுறித்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சி.சி.டி.வி. காமராவில் பதிவான காட்சி புகைப்படங்களை வலைதளங்களில் போலீசார் வெளியிட்டு அந்த நபர் குறித்த தகவல்களை தெரிந்தால் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

    • திருப்பூர் - பல்லடம் சாலை அதிக அளவில் வாகனங்கள் பயன்படுத்தப்படும் முக்கிய சாலை
    • சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால் ஏராளமானோர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரைச் சேர்ந்தவர் காட்டான். இவர் பல்லடம் ராயர் பாளையத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் அவரது மகனை பார்க்க சென்றுள்ளார் .அப்போது சாலையோரம் இருந்த குழியில்அவரது வாகனம் இறங்கியது .இதில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் காட்டான் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தின் சிசிடிவி. காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் - பல்லடம் சாலை அதிக அளவில் பயன்படுத்தப்படும் முக்கிய சாலையாக உள்ளது. இதில் தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால் ஏராளமானோர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சாலையில் உள்ள குழிகளை மூடி விபத்து நடப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • கைது செய்யப்பட்டவர்கள் மீது காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள ராஜூவ்நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 38). இவர் சிவந்தாகுளம் பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார்.

    பிரைன்ட்நகரை சேர்ந்தவர் பரமேஷ்வரன் (55). இவர் பிரைன்ட்நகர் 7-வது தெருவில் மளிகைகடை நடத்தி வருகிறார்.

    இவர்கள் இருவரது கடையின் பூட்டை உடைத்து நேற்று பணம் மற்றும் செல்போன்களை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

    இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிவந்தாகுளம் பெருமாள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. மேலும் இதே வாலிபர்கள் பரமேஷ்வரன் கடையிலும் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

    அதன்பேரில் தூத்துக்குடியை சேர்ந்த பாஸ்கர் (20), ராம்குமார் (22) மற்றும் செல்வராஜ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் மீது திருச்செந்தூர், தூத்துக்குடி வடக்கு, மத்திய, தென்பாக காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    ×