search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eirvadi"

    • நெல்லை மாவட்டம் ஏர்வாடி 6-வது தெருவை சேர்ந்தவர் சேக். தொழிலதிபர்.
    • சிறுவர்களை வைத்து திருட்டு சம்பவத்தில் கும்பல் ஈடுபடுவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி 6-வது தெருவை சேர்ந்தவர் சேக்(வயது 60). தொழிலதிபர். சம்பவத் தன்று இவரது வீட்டில் பட்டப்பகலில் 15 வயது சிறுவன் ஒருவன் திருடும் நோக்கத்தில் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலை உடைக்க முயற்சி செய்துள்ளான்.

    திருட முயற்சி

    இந்த சத்தம் கேட்டு சேக் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை பார்த்துள்ளார். அப்போது சிறுவன் ஒருவன் வீட்டின் பின்புறம் ஜன்னலை உடைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அந்த சிறுவனை பிடிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றார்.

    அப்போது ஆட்கள் வரும் சத்தம் கேட்ட சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 7-ந் தேதி ஏர்வாடி பகுதியில் ஒரு ஸ்டூடியோவில் புகுந்த சிறுவன், அங்கு உரிமையாளர் இல்லாததை அறிந்து பணத்தை திருடி சென்றுள்ளான்.

    விசாரணை

    இந்த 2 சம்பவங்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது. ஏர்வாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர் களுக்கு கஞ்சா விற்பனை செய்த தாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் சிறுவர்களை வைத்து திருட்டு சம்பவத்தில் கும்பல் ஈடுபடுவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவர்களை போலீசார் பிடித்து, அவர்கள் மூலம் திருட்டு கும்பலை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×