search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே  ஓட்டல் சூறை-பெண்ணுக்கு கொலை மிரட்டல்- த.ம.மு.க. மாவட்ட செயலாளர் மீது வழக்கு
    X

    சங்கரன்கோவில் அருகே ஓட்டல் சூறை-பெண்ணுக்கு கொலை மிரட்டல்- த.ம.மு.க. மாவட்ட செயலாளர் மீது வழக்கு

    • மாரியம்மாள் சங்குபட்டி பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.
    • அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவை அவர்கள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த சங்குபட்டியை சேர்ந்தவர் மாரியம்மாள்(வயது 42). இவர் சங்குபட்டி பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.

    சிவகிரி அருகே உள்ள சரவணபுரத்தை சேர்ந்த இன்பராஜ், வேலு, கருப்பசாமி, சதீஷ்குமார் ஆகியோரிடம் மாரியம்மாளும், அவரது கணவர் அந்தோணி ராஜும் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அவர்கள் 4 பேரும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தென்காசி மாவட்ட செயலாளர் மாடசாமி தலைமையில் சம்பவத்தன்று மாரியம்மாளின் ஓட்டலுக்கு வந்துள்ளனர்.

    அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், ஒரு கட்டத்தில் ஓட்டலை சூறையாடியதோடு அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவை எடுத்து சென்றதாகவும், மாரியம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் த.ம.மு.க. மாவட்ட செயலாளர் மாடசாமி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×