search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூர் கடைகளின் முன்பு கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும்-  வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள்
    X

    வள்ளியூர் கடைகளின் முன்பு கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும்- வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள்

    • இரவு நேரங்களில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.
    • கடைகளின் முன்பகுதியில் அதிக திறன் கொண்ட கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் சுற்று வட்டாரத்தில் தொடர்ச்சி யாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வள்ளியூர் பகுதி வியாபாரிகள் தங்களது கடைகளின் முன்பகுதிகளிலும் கடையின் உள்பகுதிகளிலும் உயர் திறன் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    வள்ளியூர் பேரூராட்சியில் உள்ள ராஜரத்தினம் நகர், இ.பி.காலணி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இது தவிர பகல் நேரத்தில் இருசக்கரவாகன திருட்டுகள் அதிகரித்து வருகிறது. எனவே வியாபாரிகள் தங்களது கடைகளின் முன்பகுதியில் அதிக திறன் கொண்ட கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும்.

    கண்காணிப்பு காமிரா பதிவுகளை சேமித்து வைக்கும் கருவிகளில் சேமிக்கவும் அதனை உறுதி படுத்திக் கொள்ளவும் செய்ய வேண்டும். கண்காணிப்பு காமிராவின் செயல்பாடுகளை தங்களது அலைபேசியில் கண் காணித்துக் கொள்ளுங்கள்.

    மேலும் வள்ளியூர் பேரூராட்சி தற்போது தொழில்நிறுவனங்களாலும், ஜனநெருக்கடியிலும் அதிகரித்து வந்துள்ளது.

    வெளியூர்களில் இருந்து அதிக மக்கள் வள்ளியூரில் குடியேறியுள்ளனர்.

    குறிப்பாக வடமாநி லங்களைச் சேர்ந்த ஆயிரத்தி ற்கும் அதிகமானோர் புதிதாக குடியேறியுள்ளனர். இப்படி வளர்ச்சியடைந்துள்ள வள்ளியூர் காவல்நிலை யத்தில் காவலர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

    குறைவான காவலர்க ளால் வளர்ச்சியடைந்து வரும் வள்ளியூர் பகுதியை கண்காணிக்க சிரமமாக உள்ளது. எனவே வள்ளியூர் காவல்நிலையத்தில் கூடுதலாக காவலர்களை நியமிக்கவேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×