search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை"

    • பள்ளிபாளையம் பேப்பர் மில் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
    • பள்ளிபாளையம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேப்பர் மில் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    மேலும் ஆடி 18 திருவிழா வெகு விமரிசையாக இந்த கோவிலில் நடைபெறும். ஆடி 18 திருவிழாவில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் கோவில் பூசாரி பூஜை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு பூசாரி வந்து பார்க்கும்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. நள்ளிரவில் கொள்ளையர்கள் கோவிலுக்குள் புகுந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.

    • கொள்ளை வழக்கில் அவர்களது உறவினரான ராமர், ராதா, பக்ரூதீன் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
    • கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ராஜேஷ் என்பவன் உட்பட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    வில்லிவாக்கம் சிட்கோ நகரில் கடந்த 22-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியான சோழன்- வனஜா ஆகியோரை மர்ம கும்பல் கட்டிப்போட்டு கத்திமுனையில் 70 பவுன் நகை, ரூ.3½ லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பிசென்றனர்.

    இந்த கொள்ளை வழக்கில் அவர்களது உறவினரான ராமர், ராதா, பக்ரூதீன் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த ஆவடியை சேர்ந்த புருசோத்தமன், ராஜீ, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த திலீப் ஆகிய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ராஜேஷ் என்பவன் உட்பட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • நகை, ரூ.45 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளயைடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள கருங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது47). விவசாயி. இவரது தனது குடும்பத்துடன் கடந்த 25-ந் தேதி திருப்பதிக்கு சென்றார். இதனை பயன் படுத்திய மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தாலி செயின், தாலி, தங்க காசு உள்ளிட்ட 5½ பவுன் நகையையும், ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் திருப்பதிக்கு சென்றவர்கள் திரும்பி வராத நிலையில் ஆதிமூலத்தின் வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்த தகவலை அக்கம்பக்கத்தினர் ஆதிமூலத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் தகவலறிந்த அவர் நேற்று ஊருக்கு திரும்பிவந்து சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளயைடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    • ராஜேந்திரன் 2 நாட்களுக்கு முன்பு தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தார்.
    • ராஜேந்திரன் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    கோவை.

    கோவை பீளமேடு புதூர் திருமகள் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது58). இவர் கடந்த 3-ந் தேதி தனது மனைவியுடன் சொந்த வேலை காரணமாக பெங்களூருவுக்கு சென்றார்.

    2 நாட்களுக்கு முன்பு தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தார்.

    அப்போது வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிரா ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் தாமோதரன் என்பவரை போனில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார்.

    இதையடுத்து அவரும் சென்று பார்த்து விட்டு வீடு பூட்டி இருப்பதாகவே தெரிவித்தார். இருந்தாலும் சந்தேகம் அடைந்த, ராஜேந்திரன் மறுநாள் புறப்பட்டு கோவைக்கு வந்து விட்டார். வீட்டை திறந்து சென்று உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டில் உள்ள பின்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதையடுத்து வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார்.

    அப்போது அதில் வைத்திருந்த செயின், மோதிரம் உள்பட 36 பவுன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்க பணம் மாயமாகி இருந்தது. இவர் வெளி ஊர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து பணம், நகையை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரரைண நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை பி.என்.புதூரை சேர்ந்தவர் குமார்(59). இவரும் சம்பவத்தன்று வீட்டை பூட்டி வெளியில் சென்றார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகை, மற்றும் 1 லட்சம் ரொக்க பணமும் கொள்ளை போயிருந்தது.

    இதேபோல், கோவை கணபதி, எப் சி ஐ ரோடு, பாலு கார்டனை சேர்ந்த பியோ ராபர்ட் (31) என்பவரது வீட்டில் 11.25 பவுன் தங்க நகை திருட்டு போனது. கோவை போத்தநூர் ஜோதி நகரை சேர்ந்த வெங்கட்ரமணி (46) என்பவரது வீட்டில் ரூபாய்.6000 மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாநகர பகுதியில் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் திருட்டில் ஈடுபட்டு வருவதும், ஒரே நாளில் 56.70 சவரன் நகை திருட்டு போய் இருப்பது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தங்கநகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
    • கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கவர்கல்பட்டி பி.என்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி ராணி (வயது 71). தினந்தோ றும் இவரது மகன்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவதால், இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று பகல் 2 மணியளவில் இவரது வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ராணியை சேலையால் கட்டிப்போட்டு விட்டு, வீட்டில் இருந்து ஆறரை சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

    மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வாழப்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார், பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,

    இரு தினத்திற்கு முன் மூதாட்டி வீட்டிற்கு, வேலைக்கு ஆள் வேண்டுமா எனக் கேட்டு பெண் ஒருவர் வந்து சென்றது தெரிய வந்துள்ளது. இதனால், வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை உளவு பார்த்து மர்ம கும்பல் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானதால், இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
    • நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு சீனிவாசா நகரை சேர்ந்தவர் நகுனி.இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றார்.

    பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • பள்ளிமடம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த இரு நாட்களாக மது விற்பனை அதிகமாக நடந்துள்ளது.
    • மர்ம நபர்கள் தாக்குதலில் பூமிநாதன், நாராயணசாமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளது பள்ளிமடம் கிராமம். இந்த கிராமத்திற்கு வெளியே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த கடையில் பள்ளி மடத்தை சேர்ந்த பூமிநாதன் (வயது 49), பச்சேரியை சேர்ந்த முத்துகருப்பன் (45), நார்த்தம்பட்டியை சேர்ந்த நாராயணசாமி (48), பனையூரை சேர்ந்த பெருமாள்சாமி ஆகியோர் விற்பனையாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    அதே கடையில் புளியங்குளத்தை சேர்ந்த செந்தில், பச்சேரியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோரும் பணிபுரிகின்றனர். திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் திரு விழாக்கள் நடந்து வருகின்றன. இதனால் பள்ளிமடம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த இரு நாட்களாக மது விற்பனை அதிகமாக நடந்துள்ளது.

    நேற்றும் ஏராளமான மதுபிரியர்கள் வந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். இரவில் பணி முடிந்ததும் கடை ஊழியர்கள் சென்று விட்ட நிலையில், விற்பனையாளர்கள் வசூல் பணத்தை எண்ணி வைத்து விட்டு கடையை பூட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர்.

    முகக்கவசம் அணிந்திருந்த அவர்கள், கடையில் உள்ள வசூல் பணத்தை தந்து விடுமாறு மிரட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை தர மறுத்து விட்டனர். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள், தங்களிடமிருந்த வாளால் விற்பனையாளர் பூமிநாதனை வெட்டினர்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட மற்ற விற்பனையாளர்கள் கடையை மூட முயன்றனர். அப்போது அவர்களை மர்ம நபர்கள் பீர்பாட்டிலால் தாக்கி டாஸ்மாக் கடையில் இருந்த 5 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    மர்ம நபர்கள் தாக்குதலில் பூமிநாதன், நாராயணசாமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    காயம் அடைந்த பூமிநாதன் உள்ளிட்ட 3 பேரையும் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாளும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    மேலும் விசாரணையை துரிதப்படுத்த உத்தர விட்டார். இதையடுத்து டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த டாஸ்மாக் மதுக்கடையில் சி.சி.டி.வி. கேமிராக்கள் உள்ளன. அதில் பதிவாகி உள்ள வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததால், அவர்களை அடையாளம் காண முடியவில்லை.

    இருந்தபோதிலும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடையில் புகுந்து விற்பனையாளர்களை தாக்கி பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருச்சுழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதே திருச்சுழி தாலுகாவில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் காவலாளியை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    • மகளுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • அனி ஷா வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனது மக ளை சிகிச்சைக்காக சோ்த்து அவளுடன் அங்கேயே தங்கி இருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்க டேஸ்வரன். வெளிநாட்டில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி அனிஷா. இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மகளுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அனி ஷா வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனது மக ளை சிகிச்சைக்காக சோ்த்து அவளுடன் அங்கேயே தங்கி இருந்தார்.

    இதற்கிடையே அனிஷா வின் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு செல்போன் மூல மாக தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு சங்கராபுரத்துக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை, 7 வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் அனிஷா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி கொள்ளை நடந்த வீட்டை பார்வை யிட்டு விசாரணை செய்து வருகிறார்.

    • எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகில் சரவணன் (வயது 43) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • இவர் நேற்று காலை திரும்பி வந்து கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகில் சரவணன் (வயது 43) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    கடையில் பணம் கொள்ளை

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற இவர் நேற்று காலை திரும்பி வந்து கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த பணம், மளிகை பொருட்கள் கொள்ளை–யடிக்கப்பட்டிருந்தது.

    புகார்

    இது குறித்து சரவணன் எலச்சிபாளையம் ேபாலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் ரூ.16 ஆயிரத்து 350 திருட்டு போனது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், மனைவியை அழைத்து கொண்டு வெளியூர் மருத்துவமனை சென்றார்.
    • மேலும் கைரேகை நிபுணர்களை வரழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கீழகாசாக்குடி பகுதியில் வசித்து வருபவர் முத்துசின்னசாமி(வயது75). இவர் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர். காரைக்காலில் உள்ள தனது வீட்டில், மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், மனைவியை அழைத்து கொண்டு வெளியூர் மருத்துவமனை சென்றார். மருத்துவமனையில் மனைவிக்கான சிகிச்சை முடிந்தநிலையில், வீடு திரும்பிய முத்துசின்னசாமி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    பின்னர், முத்துசின்னசாமி கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார், வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மோப்ப நாய் அர்ஜுனை வரவழைத்து ஓடவிட்டனர். நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களை வரழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, வீடு, தெரு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ் மேற்பார்வையில், மர்ம நபர் குறித்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வெண்ணந்தூர் அருகே 4 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மீட்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெடி அரசம்பாளையம் பாலிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். மில் அதிபரான இவரது வீட்டிற்குள் கடந்த 9-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அங்கிருந்த பிரகாஷின் பெற்றோரை கட்டி போட்டுவிட்டு ரூ.2 லட்சம் பணம், 20 பவுன் நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேரடி விசாரணை நடத்தினார். மேலும் 6 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அவர்களின் தேடுதல் வேட்டையில் வெண்ணந்தூர் அருகே 4 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மீட்கப்பட்டது. ரகசிய இடத்தில் வைத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்துள்ளனர்.தொடர்ந்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. வீட்டில் வயதான தம்பதி தனியாக இருப்பதாக அவர் கொடுத்த தகவலின் பேரில் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது தெரியவந்தது.

    இதனால் தலைமறைவாக உள்ள அவரை பிடித்தால் தான் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    • முதல் தளத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
    • ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. நேற்று இரவு அங்குள்ள வியாபாரிகள் வழக்கம்போல் கடைகளை அடைத்து வீடுகளுக்கு சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை வணிக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. தொடர்ந்து அருகே உள்ள மேலும் 7 கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடைகளில் இருந்த பணம் மற்றும் விலை உயர்ந்த காமிராக்கள் என ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    இந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி அதில் பதிவான உருவங்களை கொண்டு, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×