search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிபாளையத்தில் தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த மேலும் 4 வாலிபர்கள் சிக்கினர்
    X

    பள்ளிபாளையத்தில் தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த மேலும் 4 வாலிபர்கள் சிக்கினர்

    • வெண்ணந்தூர் அருகே 4 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மீட்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெடி அரசம்பாளையம் பாலிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். மில் அதிபரான இவரது வீட்டிற்குள் கடந்த 9-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அங்கிருந்த பிரகாஷின் பெற்றோரை கட்டி போட்டுவிட்டு ரூ.2 லட்சம் பணம், 20 பவுன் நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேரடி விசாரணை நடத்தினார். மேலும் 6 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அவர்களின் தேடுதல் வேட்டையில் வெண்ணந்தூர் அருகே 4 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மீட்கப்பட்டது. ரகசிய இடத்தில் வைத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்துள்ளனர்.தொடர்ந்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. வீட்டில் வயதான தம்பதி தனியாக இருப்பதாக அவர் கொடுத்த தகவலின் பேரில் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது தெரியவந்தது.

    இதனால் தலைமறைவாக உள்ள அவரை பிடித்தால் தான் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    Next Story
    ×