search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எலச்சிப்பாளையம் அருகே மளிகை கடையில் பணம் கொள்ளை
    X

    எலச்சிப்பாளையம் அருகே மளிகை கடையில் பணம் கொள்ளை

    • எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகில் சரவணன் (வயது 43) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • இவர் நேற்று காலை திரும்பி வந்து கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகில் சரவணன் (வயது 43) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    கடையில் பணம் கொள்ளை

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற இவர் நேற்று காலை திரும்பி வந்து கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த பணம், மளிகை பொருட்கள் கொள்ளை–யடிக்கப்பட்டிருந்தது.

    புகார்

    இது குறித்து சரவணன் எலச்சிபாளையம் ேபாலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் ரூ.16 ஆயிரத்து 350 திருட்டு போனது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×