search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டப்பட்டியில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
    X

    கோட்டப்பட்டியில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

    • நகை, ரூ.45 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளயைடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள கருங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது47). விவசாயி. இவரது தனது குடும்பத்துடன் கடந்த 25-ந் தேதி திருப்பதிக்கு சென்றார். இதனை பயன் படுத்திய மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தாலி செயின், தாலி, தங்க காசு உள்ளிட்ட 5½ பவுன் நகையையும், ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் திருப்பதிக்கு சென்றவர்கள் திரும்பி வராத நிலையில் ஆதிமூலத்தின் வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்த தகவலை அக்கம்பக்கத்தினர் ஆதிமூலத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் தகவலறிந்த அவர் நேற்று ஊருக்கு திரும்பிவந்து சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளயைடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×