search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery money"

    • 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கொலுசு, ரூ.13 ஆயிரத்து 500 ரொக்கபணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது
    • வீடு புகுந்து நகை பணம் திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அடுத்த பாகூர் திருமால் நகரை சேர்ந்தவர் இந்திரகுமார் (40). இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா (31) கடலூரில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகின்றார். இவர்களுக்கு 2 பிள்ளைகள். நேற்று காலை கணவன் - மனைவி 2 பேரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர்.

    வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுகன்யா, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ திறந்து பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் இருந்த 1¼ பவுன் தங்க நகை, 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கொலுசு, ரூ.13 ஆயிரத்து 500 ரொக்கபணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது குறித்து சுகன்யா இந்திரகுமாரிடம் தெரிவித்தார்.

    அவர் பாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோவில் பதிவான கைரேகை தடயங்களை சேகரித்தனர். வழக்கமாக சாவியை வைத்து செல்லும் இடத்தை நோட்ட மிட்டவர்கள் தான் கைவ ரிசை காட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து இந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டபகலில் வீடு புகுந்து நகை பணம் திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மகளுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • அனி ஷா வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனது மக ளை சிகிச்சைக்காக சோ்த்து அவளுடன் அங்கேயே தங்கி இருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்க டேஸ்வரன். வெளிநாட்டில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி அனிஷா. இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மகளுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அனி ஷா வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனது மக ளை சிகிச்சைக்காக சோ்த்து அவளுடன் அங்கேயே தங்கி இருந்தார்.

    இதற்கிடையே அனிஷா வின் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு செல்போன் மூல மாக தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு சங்கராபுரத்துக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை, 7 வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் அனிஷா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி கொள்ளை நடந்த வீட்டை பார்வை யிட்டு விசாரணை செய்து வருகிறார்.

    • தலைமை ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழகம் பணிமனை எதிரே குடியிருந்து வருபவர் ராமநாதன் (வயது65), இவர் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சித்ரா. இவரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை.

    கள்ளிக்குடி அருகே உள்ள தென்னமநல்லூரில் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சித்ரா இறந்துவிட்டார். இதனால் ராமநாதன் அங்கு சில நாட்கள் தங்கியிருந்தார்.

    இந்த சந்தர்ப்பத்ைத பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் திருமங்க லத்தில் உள்ள ராமநாதன் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 50,000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.

    இந்த நிலையில் வீடு திரும்பிய ராமநாதன் நகை, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திருச்சியில் பைனான்ஸ் அதிபர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் 100 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    திருச்சி:

    திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 2-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகைய்யன். இவர் திருச்சி என். எஸ்.பி. ரோட்டில் அரவிந்த் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு முருகைய்யன் மனைவி மற்றும் மகள்களுன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று காலை ஆறுநாட்டு வேளாளர் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிட்டிருந்ததால் காலை 4 மணிக்கு எழுந்து முருகைய்யன் குளிக்க தயாரானார். அப்போது வீட்டின் பீரோ திறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை  கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து திருச்சி உறையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். வீட்டின் முன்புற கதவு பூட்டு திறக்கப்பட்டு கீழே விழுந்து கிடந்தது. அதேபோல் வீட்டின் பின்பக்க கதவும் திறந்து கிடந்தது. எனவே கொள்ளையர்கள் வீட்டின் முன்பக்க கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து பின்புற கதவை திறந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. 

    மேலும் முருகைய்யனும், குடும்பத்தினரும் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த அறையிலேயே கொள்ளையன் துணிகரமாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். எனவே முருகைய்யன் வீட்டிற்கு நகை பணம் வைத்திருப்பதை அறிந்த ஆசாமியே இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளதும் உறுதியாகி உள்ளது. 

    ஏற்கனவே திருச்சி உறையூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பீடிக்கம்பெனி அதிபர் வீடு உள்பட 2 வீடுகளில் இதேபோன்று கதவைத்திறந்து மர்ம நபர் கொள்ளை அடித்துச் சென்றான். இப்போது மீண்டும் அதேபோன்று கொள்ளை நடந்துள்ளது. அடிக்கடி கொள்ளை நடப்பதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர் கொள்ளையனை பிடித்து திருட்டு சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×