search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
    X

    வாழப்பாடி அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

    • தங்கநகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
    • கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கவர்கல்பட்டி பி.என்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி ராணி (வயது 71). தினந்தோ றும் இவரது மகன்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவதால், இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று பகல் 2 மணியளவில் இவரது வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ராணியை சேலையால் கட்டிப்போட்டு விட்டு, வீட்டில் இருந்து ஆறரை சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

    மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வாழப்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார், பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,

    இரு தினத்திற்கு முன் மூதாட்டி வீட்டிற்கு, வேலைக்கு ஆள் வேண்டுமா எனக் கேட்டு பெண் ஒருவர் வந்து சென்றது தெரிய வந்துள்ளது. இதனால், வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை உளவு பார்த்து மர்ம கும்பல் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானதால், இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×