search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery"

    • பயிர்களில் பணப்பயிர் என்று அழைக்கப்ப டும் வெற்றிலை இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது.
    • இறை வழி பாட்டிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி முக்கிய பொருளாக விளங்கி வருகிறது.

    கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றி லைக்கு மாறு கொள்வோம் என்றார் பாரதியார். காவிரிக்கரையில் விளையும் வெற்றிலைக்கு என்றுமே மவுசு உண்டு.

    பயிர்களில் பணப்பயிர் என்று அழைக்கப்ப டும் வெற்றிலை இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது. எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் அங்கு வெற்றிலை முதலிடம் பிடித்து வருகிறது. அதேபோல இறை வழி பாட்டிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி முக்கிய பொருளாக விளங்கி வருகிறது.

    வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்தது, அது கொடி போல படர்வதால் வெற்றிலை கொடிக்கால் என்று சொல்வார்கள். வெற்றிலை என்ற பெயருக்கு முக்கிய காரணம் உள்ளது. வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக் கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும்.

    இதனால் வெற்று இலை என்பது சுருங்கி வெற்றிலை ஆகிவிட்டது. இது வளர்வதற்கு தண்ணீர் அதிகம் தேவை, வெற்றிலையைப் பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்.

    வெற்றிலையில் கரும்பச்சை நிறத்தில் இருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் 2 வகையாகப் பிரிக்கிறார்கள். சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப் பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு. ஒரு வருடத்தில் நன்கு வளரும், பின்னர் 3 வருடங்களுக்கு வெற்றிலையை பறிக்கலாம்.

    வெற்றிலை கொடிக்கு பராமரிப்பு மிகவும் தேவை. அது கொடி போல வளர ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு கொடியையும் கட்டிக்கொண்டே வர வேண்டும். அது நன்கு வளர்ந்தவுடன் நீங்கள் வெற்றிலையை கிள்ள ஆரம்பிக்கலாம். சிலர் வெற்றிலையை ஒரு மரத்துடன் கட்டி வளர்த்து வருவார்கள்.

    இதனால் மரம் வளர வளர வெற்றிலைக்கு ஒரு ஊன்றுகோலாய் இருக்கும். ஒரு சிலர் வெற்றிலையை பாத்தி கட்டி வளர்ப்பார்கள், சிலர் திராட்சை கொடி போல படர விடுவார்கள். வெற்றிலை வளர்ப்பது என்பது எளிது, ஆனால் பறிப்பது என்பது மிகவும் கடினம். அது வளர ஆரம்பிக்கும்போது கீழே எளிதாக பறிக்கலாம்.

    ஆனால் மேலே செல்ல செல்ல பறிப்பது என்பது கடினமாக இருக்கும். இந்த வெற்றிலையில் இரண்டு வகை உண்டு. கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை. மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை.

    வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் தேவை, காவிரி ஆற்றின் கரையிலே இருக்கும் ஊர்களில் எல்லாம் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை, இதனால் வெற்றிலை பாக்கு எல்லாம் அங்கு நிறைய விளைகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வெற்றிலைக்கு தனி மவுசு உண்டு. பரமத்திவேலூர், நன்செய் இடை யாறு, குப்புச்சிபாளையம், ஓலப்பாளை யம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக் கான ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை பயிர் செய்துள்ளனர். காவிரி ஆற்றின் நேரடி பாசனத்தால் வளர்வதால் ஒரு வாரம் ஆனாலும் வாடாமல் வதங்காமல் அப்படியே இருக்கும். இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த வெற்றிலைக்கு தனி சிறப்புகள் உண்டு.

    வெற்றிலை வேர் குச்சியை நட்டு வைத்தால் அது முளைத்து, அருகில் உள்ள மரம், சுவற்றில் பற்றி வளரும். மண் வளத்தைப் பொறுத்து ஒரு மாதம் முதல் 3 மாதங்களில் வெற்றிலையைப் பறிக்கலாம். வீட்டில் நடக்கும் விசே ஷங்கள், திருமணம், காது குத்து, சீமந்தம்என அனைத்து சுப நிகழ்ச்சி யானாலும் வெற்றிலை பாக்கு இல்லாமல் இருக்காது. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகள், சுவாச பிரச்சனை, இருமல், சளி என பல வற்றிற்கும் வெற்றிலை ஒரு அருமருந்து. வெற்றிலை போட்டால் தொண்டை கரகரப்பு சரியாகி விடும். குரல் வளமும் பெருகுமாம். கணவன், மனைவி இருவரில் யார் வெற்றிலை போட்டு நாக்கு செக்கச் செவேல்னு சிவந்தால் அவர்கள் மற்றவர் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் வழக்கம் இன்றளவும் கிராமங்களில் உண்டு.

    வெறும் வாயில் வெற்றிலை மென்றால் போதும் வாய் துர்நாற்றம் நீங்கும். தொடர்ந்து தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் குடல் புண்வாய், புண்கள் ஆறிவிடும். தலையில் பொடுகு பிரச்சனை இருந்தால் வெற்றி லையை அரைத்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கிவிடும். முகத்தில் ஏற்படும் முகப்பருக்களுக்கு வெற்றி லையை வைத்து தேய்த்தால் போதும் முகப்பரு போய்விடும். உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகம் அடித்தால் தண்ணீரில் வெற்றிலையை போட்டு காயவைத்து சுடு தண்ணீராக குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கிவிடும்.

    குழந்தை பெற்ற தாய்மார்கள் வெற்றிலை தின்றால் பால் அதிகமாக சுரக்கும். வெற்றிலையில் இவ்வளவு மருத்துவ குணம் அடங்கியுள்ளது. ஆயுர்வேத மருந்துகளில் வெற்றிலையே அதிகம் பயன்படுத்தப்படு கிறது. சங்க கால நூல்களான பத்துப்பாட்டு, மணிமேகலை, சீவக சிந்தாமணி, கம்பராமா யணம் உட்பட பல்வேறு நூல்களில் வெற்றி லையின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது. மருத்துவ குணங்கள் கொண்ட காவிரிக் கரை வெற்றிலை நம் வாழ்வின் அங்கமாக உள்ளது.

    வெற்றிலையில் உள்ள சத்துக்கள்

    நீர்ச்சத்து – 90 சதவீதம், புரதச்சத்து – சதவீதம், கொழுப்புச்சத்து – சதவீதம், தாது உப்பு – சதவீதம், நார்ச்சத்து – சதவீதம், பச்சையம் – 0.25சதவீதம், மாவுச்சத்து – 6.10 சதவீதம், நிகோடினிக் அமிலம் – 0.89 மி.கி, வைட்டமின் சி – 0.01, வைட்டமின் ஏ – 2.9 மி.கி., தயாமின் – 10 கி, ரிபோப்ளேவின் –, நைட்ரஜன் – 7.0சதவீதம், பாஸ்பரஸ் – 0.6சதவீதம், பொட்டாசியம் – 4.6 சதவீதம், கால்சியம் – 0.2 சதவீதம், சத்தூட்டம் –

    44 கலோரி, இரும்புச்சத்து – 0.007சதவீதம்.

    • காலம் காலமாக இந்த சட்டத்திற்கு எதிரான செயலை கர்நாடகம் செய்து கொண்டிருக்கிறது.
    • காவிரியில் கழிவுகளை கலந்ததற்காக ரூ.2,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 2017-ம் ஆண்டே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றில் கர்நாடகம் மிகப்பெரிய அளவில் கழிவுகளை கலக்கச் செய்வதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும்.

    காவிரியிலும், தென்பெண்ணையாற்றிலும் கர்நாடகம் கழிவுநீரை கலப்பது ஒன்றும் புதிதல்ல. காலம் காலமாக இந்த சட்டத்திற்கு எதிரான செயலை கர்நாடகம் செய்து கொண்டிருக்கிறது.

    கர்நாடகத்தின் இந்த அத்துமீறலை தமிழகம் வேடிக்கை பார்க்கக் கூடாது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு பெற வேண்டும். காவிரியில் கழிவுகளை கலந்ததற்காக ரூ.2,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 2017-ம் ஆண்டே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

    கிடப்பில் உள்ள அந்த வழக்கை விரைவுபடுத்தவும், 2017-ம் ஆண்டுக்கு பிறகு கலந்த கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டையும் சேர்த்து பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
    • காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது.

    சென்னை:

    காவிரியில் கழிவு நீர் அதிகளவில் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரளவை காட்டிலும், இது 484 டி.எம்.சி கூடுதல். நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

    சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது.

    காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காவிரி பக்தர்களால் அல் தீபங்கள் ஆற்று நீரில் வரிசையாக மிதக்கவிட்டு ஒளிரச் செய்யப்ட்டது.
    • இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி அன்னையை வழிபட்டார்கள்.

    திருவையாறு:

    அகில பாரத துறவிய ர்கள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகிய அமைப்பினர் 12வது ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரையை கர்நாடக மாநிலம் குடகு மலையிலிருந்து துவங்கி ஒவ்வொரு காவிரி தீர்த்தக் கட்டத்திலும் காவிரி அன்னை விக்ரஹத்திற்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடு செய்து 'காவிரிக் கழிமுகமாம் பூம்புகாரை அடைகிறார்கள்.

    இத்துலாம் மாதத்தில் காவிரி அன்னையை துலாக்கட்டத் துறைதோறும் வழிபாடு செய்யும் பொருட்டு நேற்று மாலை திருவையாறு வந்தடைந்த.

    காவிரி வழிபாட்டுக் குழுவினர் மற்றும் திருவையாறு அன்னைக் காவிரி பௌர்ணமி வழிபாட்டுக் குழுவினர் ஆகியோர் திருவையாறு காவிரி புஷ்யமண்டபத்துறையில் காவிரி அன்னை விக்ரஹ த்திற்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடுகள் செய்து, காவிரி ஆற்றுக்கு தீபாராதனைக் காட்டப்பட்டது. பின்னர் காவிரி பக்தர்களால் அல் தீபங்கள் ஆற்று நீரில் வரிசையாக மிதக்கவிட்டு ஒளிரச் செய்யப்ட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி அன்னையை வழிபட்டார்கள்.

    • கரூருக்கு காவிரி ரத யாத்திரை குழுவினர் வருகை தந்தது
    • பாதுகாப்பு சங்கத்தினர் வரவேற்றனர்

    கரூர்:

    நதியில் குப்பை, கழிவுகளை கொட்டுவதை தவிர்த்தல், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் லட்சக்கணக்கான மரங்களை நடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், கடந்த, மாதம் 21ல் கர்நாடகா மாநிலம், தலைக்காவிரியில் இருந்து இந்த குழுவினர் காவிரி ரத யாத்திரையை தொடங்கினர்.

    இந்நிலையில் நேற்று காலை கரூர் வடிவேல் நகர் முனியப்பன் கோவில் பகுதிக்கு ரத யாத்திரை குழுவினர் வந்தனர். அவர்களை, அனைத்திந்திய இந்து திரு கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து, கரூர் தீயணைப்பு அலுவலக வளாகத்தில் உள்ள சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமி கோவிலில், காவிரி ரத யாத்திரை குழுவினர், மகேஸ் வர பூஜை நடத்தி, சிறப்பு வழிபாடு செய்தனர். இக்குழுவினர் இரண்டாம் நாளாக 

    • கொடுமுடி ஆற்றில் இருந்து காங்கயம் நகருக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் கொண்டு வரப்படுகிறது.
    • நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டாா்களை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காவிரி ஆற்றில் வெள்ளம் தணிந்தவுடன் காங்கயம் நகருக்கு குடிநீா் வழங்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஆற்றில் இருந்து காங்கயம் நகருக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் கொடுமுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டாா்களை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க போா்க்கால அடிப்படையில் வாகனங்கள் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.ஆற்றில் வெள்ளம் தணிந்தவுடன் காங்கயம் நகராட்சி பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் சீராக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏப்ரல் 25ந் தேதி கொடிவேரி பாசன பகுதி நெல் சாகுபடிக்கு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
    • காவிரி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய நீர் அளவு 3.48 டி.எம்.சி., மட்டுமே.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தவிவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கீழ்பவானி விவசாயிகள் நல சங்க தலைவர் நல்லசாமி பேசியதாவது:-

    கடந்த 1924ம் ஆண்டில் அப்போதைய மைசூர் சமஸ்தானம் மற்றும் மதராஸ் மாகாணத்துக்கும் இடையே, காவிரி வடிநில உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.அதன்படி கோடை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கூடாது.காவிரி தீர்ப்பிலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.தீர்ப்புக்கு மாறாககோடையில் 2022 ஏப்ரல் 25ந் தேதி கொடிவேரி பாசன பகுதி நெல் சாகுபடிக்கு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி இறுதி தீர்ப்பின்படி, கீழ்பவானி அணை சம்பா பருவத்துக்கு மட்டுமே திறக்கப்பட வேண்டும்.குறுவை பருவத்தில் ஜூன் 16ந்தேதி காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    காவிரி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய நீர் அளவு 3.48 டி.எம்.சி., மட்டுமே. ஆனால் கூடுதலான தண்ணீரை ஒதுக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நீர்வளத்துறையானது விருப்பு - வெறுப்பு அடிப்படையிலேயே ஆதாய அடிப்படையில் நீர் நிர்வாகம் செய்கிறது.தவறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால்அது திருத்திக்கொள்ளப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க சுதந்திரமாக எந்த செயலும் செய்ய முடியவில்லை.
    • காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அமிர்தராஜின் தாயாரின் படத்திறப்பு விழா கீழ்வேளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. படத்திறப்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க சுதந்திரமாக எந்த செயலும் செய்ய முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் இருந்த அ.தி.மு.க, பா.ஜ.க.வின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. இதுவரை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவராக முடியாத நிலையில், இந்த முறை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக ஒரு கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும்.இந்தியாவில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. பா.ஜ.க.வை தனிமைப்படுத்தி எழுதுவதை நோக்கமாக கொண்டு ஒரே அணியை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மகுடேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
    • இப்பயிற்சியில் எதிர்வரும் மழை வெள்ள காலங்களில் தங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்ட தீணைப்பு துறை அலுவலர் உத்தரவுப்படி தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இப்பயிற்சியில் எதிர்வரும் மழை வெள்ள காலங்களில் தங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கொடுமுடி மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது.
    பூதலூர்:

    தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையிலிருந்து கடந்த 27ம் தேதி மாலை காவிரியில் திறக்கப்பட்டது.

    கல்லணை கால்வாயில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் செய்யப்பட்டு வரும் பணிகள் முடிவடையாத நிலையில் கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கல்லணையில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என். நேரு கல்லணை கால்வாய் மற்றும் வெண்ணாறு பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருவதால் சற்று தாமதமாக தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கல்லணை கால்வாயில் முழுவதுமாக தண்ணீர் திறக்கப்படவில்லை.காவிரி மற்றும் வெண்ணாற்றில் குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலையில் இருந்து கல்லணையிலிருந்து காவிரி ஆற்றில் 3503 கன அடியும், வெண்ணாற்றில் 4300 கனஅடியும், கொள்ளிடத்தில் 822 கன அடியும் தண்ணீர் திறந்து வெளியேறி கொண்டுள்ளது.

    கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. திருக்காட்டுப்பள்ளி காவிரி குடமுருட்டி தலைப்பிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. குடமுருட்டி ஆற்றின் திருக்காட்டுப்பள்ளி தலைப்பில் சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாததால் குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.மேட்டூர் அணையின் நீர் இருப்பு இன்று காலை லை நிலவரப்படி 117.02 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து 3037 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வெளியேறும் நீர் 10 ஆயிரம் கன அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அனைத்து ஆறுகளிலும் பணிகளை முடித்து முழு அளவு தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமேவிரைவாக கடைமடைக்கு தண்ணீர் சென்று அடையும். அதன் பின்னர் கிளை ஆறுகள் வாய்க்கால் களில் தண்ணீர் திறந்து விட்டு குறுவை விவசாய பணிகள் மும்முரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடக்கிறது.
    புதுடெல்லி:

    தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத்தர மாநில அரசு நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தை மேற்கொண்டது. இதன் பலனாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் சில மாற்றங்கள் செய்து சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை வழங்கியது.

    அதன் அடிப்படையில் காவிரியோடு தொடர்புடைய கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் காவிரி நீரை பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் மேற்படி 4 மாநிலங்களும் தலா ஒரு பிரதிநிதியை தங்களது சார்பில் நியமித்து உள்ளன.

    இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. முன்னதாக ஒழுங்காற்று குழு கூட்டம் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி நடந்தது. அதற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு கூட்டம் ஆகியவை இதுவரை நடத்தப்படவில்லை.

    தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக வருகிற ஜூன் 12-ந் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் அதுகுறித்து ஆணையம் இதுவரை எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதைப்போல காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டமும் டெல்லியில் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பருவமழை தவறியதால் தமிழ்நாட்டில் விவசாயிகள் பாசனத்துக்கு காவிரி நீரை பெரிதும் நம்பி இருக்கின்றனர். எனவே இந்த ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரம் கர்நாடகாவில் கடுமையான வறட்சி நிலவுவதாக அந்த மாநில அரசு கூறிவருகிறது.

    இதனால் இந்த 2 கூட்டங்களும் இரு மாநிலங்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் படுத்தப்படும் என மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். #NitinGadkari #Godavari #Cauvery
    அமராவதி:

    ஆந்திராவின் அமராவதியில் நடந்த பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

    கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணார்-காவிரி நதிகளை இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. இது விரைவில் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து இந்த திட்டத்துக்காக ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது உலக வங்கியில் இருந்து நிதியுதவி கோரப்படும்.

    இந்த திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.

    இந்த திட்டத்தில் கால்வாய்களை உருவாக்காமல், சிறப்பு தொழில்நுட்பத்துடன் மெல்லிய தடிமன் கொண்ட இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.  #NitinGadkari #Godavari #Cauvery
    ×