search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    காவிரி, வெண்ணாற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு

    கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது.
    பூதலூர்:

    தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையிலிருந்து கடந்த 27ம் தேதி மாலை காவிரியில் திறக்கப்பட்டது.

    கல்லணை கால்வாயில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் செய்யப்பட்டு வரும் பணிகள் முடிவடையாத நிலையில் கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கல்லணையில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என். நேரு கல்லணை கால்வாய் மற்றும் வெண்ணாறு பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருவதால் சற்று தாமதமாக தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கல்லணை கால்வாயில் முழுவதுமாக தண்ணீர் திறக்கப்படவில்லை.காவிரி மற்றும் வெண்ணாற்றில் குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலையில் இருந்து கல்லணையிலிருந்து காவிரி ஆற்றில் 3503 கன அடியும், வெண்ணாற்றில் 4300 கனஅடியும், கொள்ளிடத்தில் 822 கன அடியும் தண்ணீர் திறந்து வெளியேறி கொண்டுள்ளது.

    கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. திருக்காட்டுப்பள்ளி காவிரி குடமுருட்டி தலைப்பிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. குடமுருட்டி ஆற்றின் திருக்காட்டுப்பள்ளி தலைப்பில் சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாததால் குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.மேட்டூர் அணையின் நீர் இருப்பு இன்று காலை லை நிலவரப்படி 117.02 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து 3037 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வெளியேறும் நீர் 10 ஆயிரம் கன அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அனைத்து ஆறுகளிலும் பணிகளை முடித்து முழு அளவு தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமேவிரைவாக கடைமடைக்கு தண்ணீர் சென்று அடையும். அதன் பின்னர் கிளை ஆறுகள் வாய்க்கால் களில் தண்ணீர் திறந்து விட்டு குறுவை விவசாய பணிகள் மும்முரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×