search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்லசாமி"

    • பனங்கள் ஒரு தடை செய்யக்கூடிய போதை பொருள் அல்ல.
    • ஒரு மரத்துக்கள்ளை 48 நாட்கள் தொடர்ந்து பருகி வந்தால் பல நோய்கள் குணமாகும்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பனங்கள் ஒரு தடை செய்யக்கூடிய போதை பொருள் அல்ல. பாரம்பரியமான உணவு பொருளான கள் இறக்குவதற்கும், பருகுவதற்கும் அரசு விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். ஒரு மரத்துக்கள்ளை 48 நாட்கள் தொடர்ந்து பருகி வந்தால் பல நோய்கள் குணமாகும். எனவே தான் கள்ளுக்குத் தடை கூடாது என்கிறோம்.

    கேரளாவை பின்பற்றி தமிழ்நாட்டிலும், மதுவிலக்கு மற்றும் மதுக்கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். 2023-24-ம் ஆண்டுக்கான மதுக்கொள்கையை முடிவு செய்வதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஜூலை 25-ந்தேதி நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் 'கள்' இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் முக்கியத்துவம் அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்பனை ஆகாமல் மீதமாகும் கள்ளை வீணாக்காமல், அதிலிருந்து வினிகர் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பொருட்களையும் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. கள்ளுக்கடைகளை திறக்க கோருவதுவும், கள்ளுக்கு அரசிடம் அனுமதி கேட்பதுவும் அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 47-க்கு எதிரானதுடன் கள்ளுக்கடைக்கு தடை விதிக்கக்கூடாது.

    இவற்றை முன்னிறுத்தி வருகிற ஜனவரி மாதம் 21-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 'கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏப்ரல் 25ந் தேதி கொடிவேரி பாசன பகுதி நெல் சாகுபடிக்கு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
    • காவிரி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய நீர் அளவு 3.48 டி.எம்.சி., மட்டுமே.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தவிவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கீழ்பவானி விவசாயிகள் நல சங்க தலைவர் நல்லசாமி பேசியதாவது:-

    கடந்த 1924ம் ஆண்டில் அப்போதைய மைசூர் சமஸ்தானம் மற்றும் மதராஸ் மாகாணத்துக்கும் இடையே, காவிரி வடிநில உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.அதன்படி கோடை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கூடாது.காவிரி தீர்ப்பிலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.தீர்ப்புக்கு மாறாககோடையில் 2022 ஏப்ரல் 25ந் தேதி கொடிவேரி பாசன பகுதி நெல் சாகுபடிக்கு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி இறுதி தீர்ப்பின்படி, கீழ்பவானி அணை சம்பா பருவத்துக்கு மட்டுமே திறக்கப்பட வேண்டும்.குறுவை பருவத்தில் ஜூன் 16ந்தேதி காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    காவிரி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய நீர் அளவு 3.48 டி.எம்.சி., மட்டுமே. ஆனால் கூடுதலான தண்ணீரை ஒதுக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நீர்வளத்துறையானது விருப்பு - வெறுப்பு அடிப்படையிலேயே ஆதாய அடிப்படையில் நீர் நிர்வாகம் செய்கிறது.தவறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால்அது திருத்திக்கொள்ளப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    அரசு கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை. லஞ்சம் கொடுக்காமல் நெல் விற்கும் விவசாயிக்கு பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம்.
    அவிநாசி:

    எண்ணை-பருப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென  தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் அவினாசியில் நிருபர்களிடம்  கூறியதாவது:-

    விவசாய விளைபொருட்களுக்கு விலை இல்லை. வெளிநாடுகளில் இருந்து  70 சதவீதம் எண்ணெய், 50 சதவீதம் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றுக்கு மானியம் வழங்குவதால் விவசாயிகளுக்கு பயன் இல்லை.

    நம் நாட்டில் எண்ணெய், பருப்பு உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு  மானியம் தர வேண்டும். அவற்றை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும்.

    இறக்குமதி கொள்கையை மாற்றாத வரை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயராது.பிற உரங்களின் விலை 50 கிலோவுக்கு ரூ.1,000  வரை உள்ள நிலையில், யூரியா ரூ.300க்கு விற்கிறது.

    விவசாயிகள் யூரியாவை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால்  விளைச்சல் அதிகரிக்காது.  பயிரில் நோய் தாக்குதல் ஏற்படும். இந்த விஷயத்தில், அரசு கவனம் செலுத்த வேண்டும்.

    அரசு கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை. லஞ்சம் கொடுக்காமல் நெல் விற்கும் விவசாயிக்கு பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம்.

    கலப்படம் இல்லாத உணவு பொருட்களை வழங்கும் போது நோய் பரவல் குறையும். அதன் மூலம் மருத்துவர் தேவை குறையும். இதன் மூலம் ‘நீட்’ தேர்வு அவசியமில்லாததாகிவிடும் என்றார்.
    ×