என் மலர்
நீங்கள் தேடியது "கள் போராட்டம்"
- சீமான் திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- திருமாவளவன் அண்ணன் பேச வேண்டிய இடத்தில் மீசையை முறுக்கி பேசுவேன் என்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற "கள்" விடுதலை மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தமிழனின் தேசிய பானம் "கள்". அதனை பனஞ்சாறு, மூலிகை சாறு என்றும் சொல்லலாம். ஒரு நாள் நானே பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன் என கூறியிருந்தார்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், சீமானின் 'கள்' இறக்கும் போராட்டம் குறித்த கேள்விக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்தார்.
அப்போது அவர்," 'கள்' போராட்டத்திற்கு பாஜகவின் முழுமையான ஆதரவு இருக்கிறது. கள் இறக்கும் தடையை மீறி போராட்டம் நடத்த எனக்கு உடன்பாடு இல்லை. தடையை நீக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். சட்டப்படி தடையை தளர்த்திவிட்டு களத்திற்கு வருவோம்" என்றார்.
மேலும், "திருமாவளவன் அண்ணன் பேச வேண்டிய இடத்தில் மீசையை முறுக்கி பேசுவேன் என்கிறார். எப்போது பேசுவார் என்று நாங்களும் காத்திருக்கிறோம்" என்றார்.
- பனங்கள் ஒரு தடை செய்யக்கூடிய போதை பொருள் அல்ல.
- ஒரு மரத்துக்கள்ளை 48 நாட்கள் தொடர்ந்து பருகி வந்தால் பல நோய்கள் குணமாகும்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பனங்கள் ஒரு தடை செய்யக்கூடிய போதை பொருள் அல்ல. பாரம்பரியமான உணவு பொருளான கள் இறக்குவதற்கும், பருகுவதற்கும் அரசு விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். ஒரு மரத்துக்கள்ளை 48 நாட்கள் தொடர்ந்து பருகி வந்தால் பல நோய்கள் குணமாகும். எனவே தான் கள்ளுக்குத் தடை கூடாது என்கிறோம்.
கேரளாவை பின்பற்றி தமிழ்நாட்டிலும், மதுவிலக்கு மற்றும் மதுக்கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். 2023-24-ம் ஆண்டுக்கான மதுக்கொள்கையை முடிவு செய்வதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஜூலை 25-ந்தேதி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் 'கள்' இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் முக்கியத்துவம் அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்பனை ஆகாமல் மீதமாகும் கள்ளை வீணாக்காமல், அதிலிருந்து வினிகர் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பொருட்களையும் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. கள்ளுக்கடைகளை திறக்க கோருவதுவும், கள்ளுக்கு அரசிடம் அனுமதி கேட்பதுவும் அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 47-க்கு எதிரானதுடன் கள்ளுக்கடைக்கு தடை விதிக்கக்கூடாது.
இவற்றை முன்னிறுத்தி வருகிற ஜனவரி மாதம் 21-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 'கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பூரிகுடிசையில் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கள் இறக்கி போராட்டம் நடைபெற்றது.
- மருத்துவ குணம் கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது பனை மரம்.
தமிழகம் முழுவதும் ஜனவரி 21-ந்தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் பூரிகுடிசையில் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கள் இறக்கி போராட்டம் நடைபெற்றது.
கள் இறக்கி போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் விவசாயிகளுக்கு ஆதரவாக பொது மேடையில் கள் அருந்தி ஆதரவு தெரிவித்தார்.
பனை மரத்தில் இருந்தும் நன்மை பயக்கக்கூடிய ஏராளமான உணவுப் பொருட்கள் நமக்கு கிடைக்கிறது. பனை மரத்தில் இருந்து கள், பதனீர், பனை வெல்லம், நுங்கு, பனம் பழம், பனக்கிழங்கு, விசிறி ஆகியவை கிடைக்கிறது.
மருத்துவ குணம் கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது பனை மரம். ரசாயனம், உரம் போன்ற எந்த வேதிப்பொருளும் சேர்க்காமல் பயன் தரக்கூடிய பனை மரம் ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 01.01.1987-ம் ஆண்டு முதல் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 38 ஆண்டு காலமாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.






