search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "campaigning"

    • விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியலின அணி சார்பாக சென்னையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியலின அணி சார்பாக சென்னையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    விழுப்புரம் பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.ஏ.டி. கலிவரதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின அணி மாவட்ட நிர்வாகிகள், ராஜசேகர், அங்காளன், நாகராஜ், கலையரசன், முரளி, சதாசிவம் , பார்த்திபன், வெங்கடேசன், சுந்தர்ராஜன், எல்.குமாரசாமி, குபேரன், பிரியா, ஆன்மீக பிரிவு மாவட்ட நிர்வாகிகள் சந்திரசேகரன், வெங்கட்ராமன், சுரேஷ் குருக்கள், விக்கிரவாண்டி ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடகிருஷ்ணன், ஞானவேல், முருகன், தங்கராசு, காணை ஒன்றிய நிர்வாகிகள் வினோத், பிரச்சார பிரிவு மாவட்ட நிர்வாகிகள் தனசேகரன், சுகுமார், குணசேகரன், பாலா, விழுப்புரம் நிர்வாகிகள் விஜயன், குமரகுரு, ஆறுமுகம், திருக்கோவிலூர் நிர்வாகிகள் பத்ரி நாராயணன், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர்கள ஜோதி, ராஜா, நாகராஜ், செல்வகுமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தியாகு, மேற்கு நிர்வாகி ஜெயசீலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் பிரபாகரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், ஞானவேல், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் எஸ்.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிரச்சார நடை பயணம் தஞ்சையிலிருந்து புறப்பட்டு ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாசத்திரம் வழியாக மல்லிப்பட்டிணத்தை சென்றடைகிறது.
    • 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    சுதந்திர தின பொன் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பிரச்சார நடை பயணம் நடைபெற்றது.

    100 பேருக்கு மேலான காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள காந்தி சிலைக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு பிரச்சார நடைபயணம் தொடங்கியது. பிரச்சார நடை பயணம் தஞ்சையிலிருந்து புறப்பட்டு ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாசத்திரம் வழியாக மல்லிப்பட்டிணத்தை வருகிற 14-ந் தேதி அன்று சென்றடைகிறது. பிரச்சார நடை பயணத்தின் ஆரம்பத்தில் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் வக்கீல் கோ.அன்பரசன், பட்டுக்கோட்டை ராமசாமி, மாநில துணைத்தலைவர் பண்ண வயல் ராஜாதம்பி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், குணா பரமேஸ்வரி, முன்னாள் மாநில துணைத்தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, பட்டுக்கோட்டை நகரத்தலைவர் ரவிக்குமார், சிறுபான்மை–ப்பிரிவுத்தவைவர் நாகூர்கனி, வட்டாரத்தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, இப்ராஹும், அன்பழகன், கோவி.செந்தில், அத்திவெட்டி நாராயணன், அய்யப்பன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜே.ஆர்.சுரேஷ், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரமேஷ் சிங்கம், ஏ.ஆர்.எம்.ரகுநாத், மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலாளர் சசிகலா, மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் இளையபாரத், சிவகுரு, சம்பத் வாண்டையார், ஒரத்தநாடு சுப்பு தங்கராஜ், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், சூரக்கோட்டை ராஜசேகர், சித்திரக்குடி ஆண்டவர், வரகூர் மீசை முருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 19-ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் 59 தொகுதிகளிலும் அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
    புதுடெல்லி:

    ஏப்ரல் மாதம் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் இதுவரை ஆறுகட்ட தேர்தல் முடிந்துள்ளது.

    ஏப்ரல் 11-ந் தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல், ஏப்ரல் 18-ந் தேதி 96 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல், ஏப்ரல் 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல், ஏப்ரல் 29-ந் தேதி 71 தொகுதிகளுக்கு 4-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி 59 தொகுதிகளுக்கு 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.

    வரும் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிக்கட்ட தேர்தலில் பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), சத்தீஸ்கர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய 8 மாநிலங்களில் இருக்கும் 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. 

    இதையொட்டி 59 தொகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த 59 தொகுதிகளில் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கொல்கத்தா நகரில் அமித் ஷா பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்குள்ள 9 தொகுதிகளில் ஒருநாள் முன்னதாகவே (நேற்று முதல்) பிரசாரத்துக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    மீதமுள்ள 59 தொகுதிகளில் நடைபெற்றுவந்த உச்சக்கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுவடைந்தது. 

    19-ந் தேதி இறுதிக்கட்ட தேர்தல் முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும். முன்னர் ஆறுகட்டங்களாக நடந்த தேர்தலுடன் அனைத்து தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் வரும் 23-ந் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் படிப்படியாக முடிவுகள் அறிவிக்கப்படும். 
    ‘தி கிரேட் காளி’ என அழைக்கப்படுபவர் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் தலிப் சிங் ரானா பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக தேர்தல் கமிஷனிடம் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. #Trinamool #ElectionCommission #TheGreatKhali #BJP
    கொல்கத்தா:

    ‘தி கிரேட் காளி’ என அழைக்கப்படுபவர் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் தலிப் சிங் ரானா. தற்போது இவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, அங்கு வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் இங்கு வந்து பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். இதற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் செய்துள்ளது.

    அதில், “தி கிரேட் காளி அமெரிக்க குடியுரிமை பெற்றிருக்கிறார். அவரது பிரபலத்தை பயன்படுத்தி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சி முயற்சிக்கிறது. இந்தியாவில் யார் ஒரு பொருத்தமான எம்.பி.யாக இருக்க முடியும் என்பது பற்றி முழுமையாக தெரியாத ஒருவர் இந்திய வாக்காளர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துதற்கு அனுமதிக்க கூடாது” என கூறப்பட்டுள்ளது.

    இந்த புகார், மேற்கு வங்காள மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஏப்ரல் 26-ந் தேதி, ஜாதவ்பூர் தொகுதி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் அனுபம் ஹஸ்ராவுடன் தி கிரேட் காளியும் சேர்ந்து பிரசாரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தி கிரேட் காளி அளித்த பேட்டியில், “என்னை எப்போது அழைத்தாலும் நான் வருவேன். அமெரிக்காவில் இருந்து என் தம்பிக்கு ஆதரவு தர வந்துள்ளேன். உங்கள் ஓட்டுகளை வீணடிக்காதீர்கள். அனுபம், படித்தவர். உங்கள் கஷ்டங்கள் தெரிந்தவர். மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்” என குறிப்பிட்டுள்ளார்.  #Trinamool #ElectionCommission #TheGreatKhali #BJP 
    சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. #LokSabhaElections2019 #ManekaGandhi
    புதுடெல்லி:

    சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரத்தின் போது மேனகா காந்தி கூறியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் அவருக்கு தேர்தல் கமிஷன் தடைவிதித்து இருக்கிறது.

    ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் தன்னை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஜெயப்பிரதாவின் பெயரை குறிப்பிடாமல், அவரது உள்ளாடை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனால் அவர் பிரசாரம் செய்ய 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, தான் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்து இருப்பதற்கு மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். “இந்தியா ஜனநாயக நாடு என்றும், இதுபோன்று தடை விதிப்பது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் என்றும்” அவர் கூறி இருக்கிறார். #LokSabhaElections2019  #ManekaGandhi
    சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. #ElectionCommission #AzamKhan #JayaPrada
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



    பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக உள்ளார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.

    அவருக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.  ஆசம்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தனக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் போட்டியில் இருந்து விலக தயார் எனவும் யாரையும் பெயர் குறிப்பிட்டு தான் பேசவில்லை எனவும் ஆசம்கான் தெரிவித்தார்.

    இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் என கூறி அவர் 72 மணிநேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  இதன்படி அவர் நாளை காலை 10 மணி முதல் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.  #ElectionCommission #AzamKhan #JayaPrada
    ராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையாடினர். நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. #Rajasthan #Telangana #AssemblyElection #Campaigning
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.

    ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் நாளை (7-ந் தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது.



    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுக்கும் முக்கியமானது. கடந்த 25 ஆண்டுகளாக அங்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதால், ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதாவும், கைப்பற்றுவதற்கு காங்கிரசும் வரிந்து கட்டுகின்றன. இங்கு ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது. 199 தொகுதிகளில் மட்டுமே நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.



    ராஜஸ்தானில் 2,188 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தலில் முடிவாகும்.

    பிரதமர் மோடி நேற்று அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் செய்து, பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு ஓட்டு வேட்டையாடினார். சுமர்பூர் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் அவர் ஆவேசமாக பேசினார்.

    119 இடங்களை கொண்டுள்ள தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்கு தேச கூட்டணி, பாரதீய ஜனதா என மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கு 1,821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மல்காஜ்கிரி தொகுதியில் அதிகபட்சமாக 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஆட்சியை தொடர்வதற்கும், காங்கிரஸ்-தெலுங்கு தேச கூட்டணியும், பாரதீய ஜனதாவும் ஆட்சியை கைப்பற்றுவதற்கும் கடும் போட்டியில் உள்ளன.

    அங்கு சூரியபேட் மாவட்டம், கொடாட் என்ற இடத்தில் நேற்று பிற்பகல் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் தோன்றிப் பேசினார்கள். அவர்கள் பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக சாடினர்.

    2 மாநிலங்களிலும் நேற்று மாலை 5 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது. நாளை காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவெளி இன்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

    நாளை ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்கு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகின்றன.

    5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பதிவான ஓட்டுகள் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. அன்று பிற்பகலில் அந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்போவது யார் என தெரிந்து விடும். #Rajasthan #Telangana #AssemblyElection #Campaigning 
    ராஜஸ்தான், தெலுங் கானா மாநில சட்டசபைகளுக்கு இன்றுடன்(புதன்கிழமை) தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். #Rajasthan #Telangana #CampaigningPoll
    ஐதராபாத்:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்ட சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இங்கு தேர்தலை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஆயுட்காலத்தை கொண்டிருந்த தெலுங்கானா சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தீர்மானித்தது.

    நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலை சந்திப்பதை தவிர்க்கும் விதமாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இந்த முடிவை மேற்கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் கமிஷன் தெலுங்கானா சட்டசபைக் கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் நடக்கும் தேதிகளை வெளியிட்டது.



    இதைத்தொடர்ந்து 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த மாதம் 12 மற்றும் 20-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசம் மற்றும் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் ஆகியவற்றில் கடந்த 28-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

    ராஜஸ்தான்(200 தொகுதிகள்), தெலுங்கானா(119) ஆகியவற்றில் வருகிற 7-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் இன்று(புதன்கிழமை) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

    இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் மத்திய மந்திரிகள், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சச்சின் பைலட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஏற்கனவே சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டனர்.

    தெலுங்கானாவில் ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பிரசாரத்தில் ஈடுபட்டார். எனினும் இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வதால் பல்வேறு தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ராஜஸ்தானில் ராம்கார்க் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமண் சிங்(வயது 62) என்பவர் இறந்து விட்டதால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    7-ந்தேதி நடைபெறும் தேர்தலையொட்டி இப்போதே இந்த 2 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்குச் சாவடிகளில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் குவிக்கப்படுகின்றனர். மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களை அனைத்து தொகுதிகளுக்கும் கொண்டு செல்லும் பணி இன்று முழு வீச்சில் தொடங்குகிறது.

    ஓட்டுப் பதிவு முடிந்த பின்னர் இந்த மாநிலங்களிலும் ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகியவற்றுடன் சேர்த்து ஓட்டு எண்ணிக்கை வருகிற 11-ந் தேதி நடக்கிறது. அன்று மதியம் 2 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

    5 மாநில சட்டசபை தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக் கான அரையிறுதி போட்டி என்று வர்ணிக்கப்படுகிறது.

    இதனால் இந்த தேர்தலை பெரும் சவாலாக எடுத்துக்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
    தேர்தல் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ளுங்கள் என முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தலைமை தேர்தல் கமிஷன் அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. #ElectionCommission #Twitter #Facebook
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. 2 நாட்களுக்கு முன்பே அங்கு தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் வாக்குப்பதிவு நாளான நேற்று பா.ஜனதாவும், காங்கிரசும் இணையதள சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.



    இதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் கமிஷன் டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு ஒரு அவசர உத்தரவை பிறப்பித்தது. அதில், ‘தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு எந்த விதத்திலும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களும், பிரசாரங்களும் இடம்பெறக்கூடாது. எனவே தேர்தல் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டு உள்ளது. #ElectionCommission #Twitter #Facebook 
    மத்தியபிரதேசம், மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. வரும் 28-ம் தேதி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. #Campaigningends #MPpolls #Mizorampolls
    போபால்:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை, தலைமை தேர்தல் ஆணையம் தற்போது நடத்தி வருகிறது.

    முதலில் சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு கடந்த 12 மற்றும் 20-ந்தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அம்மாநிலத்தில் சராசரியாக 73 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    அடுத்தகட்டமாக மத்தியபிரதேசம், மிசோரம் மாநிலங்களில் நாளை மறுநாள் (புதன்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியபிரதேசம் மாநிலத்தில் 230 தொகுதிகள் உள்ளன. மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகள் இருக்கின்றன.

    இந்த இரு மாநிலங்களிலும் வரும் 28-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்ற கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்தது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் இரு மாநிலங்களிலும் முற்றுகையிட்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.

    கடந்த ஒரு வாரமாக மத்திய பிரதேசத்திலும், மிசோரமிலும் உச்சக்கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. 28-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.

    வாக்குப்பதிவை சுமுகமாகவும், நியாயமாகவும் நடத்தி முடிக்க இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமானவை கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் துணைநிலை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.

    இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாக்கப்படும்.

    ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் வரும் 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்ததும் 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். #Campaigningends #MPpolls #Mizorampolls
    நாடாளுமன்ற தேர்தலுக்கான பாரதீய ஜனதா பிரசாரத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந் தேதி உத்தரபிரதேசத்தில் தொடங்குகிறார். #ParliamentaryElection #NarendraModi
    லக்னோ:

    நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    சமீபத்தில் நடைபெற்ற சில இடைத்தேர்தல்களில் பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டதால், நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான உத்திகளை வகுக்கும் முயற்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இப்போதே ஈடுபட்டு உள்ளனர்.

    நாடாளுமன்ற தேர்தலுக்கான பாரதீய ஜனதாவின் பிரசாரத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறார். அன்று உத்தரபிரதேச மாநிலம் சந்த் கபீர்நகர் மாவட்டத்தில் உள்ள மகார் என்ற இடத்தில் நடைபெறும் பாரதீய ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 2½ லட்சம் பேரை திரட்டி பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் திட்டமிட்டு உள்ளார். கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து வரும் பொறுப்பு 11 மாவட்ட பாரதீய ஜனதா தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    வருகிற 26-ந் தேதி கோரக்பூர் செல்லும் யோகி ஆதித்யநாத் அங்கிருந்தபடி பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மேற்பார்வையிடுகிறார். மேலும் இது தொடர்பாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கட்சி எம்.பி.க்கள் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அன்று அவர் ஆலோசனை நடத்துகிறார்.  #ParliamentaryElection #NarendraModi
    ×