search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arjun sampath"

    அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக செயல்பட்டு வருகிறது என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியுள்ளார். #arjunsampath #admkgovt
    தென்காசி:

    இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் அர்ஜூன்சம்பத் தென்காசிக்கு வந்தார். தென்காசி மலையான்தெருவில் உள்ள மறைந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் எஸ்.குமார்பாண்டியன் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற இந்து மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சக்திபாண்டியன் தலைமை தாங்கினார்.  சேகர்பாண்டியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியதாவது:- 

    பாராளுமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பா.ஜ.க., அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற முடிவு செய்துள்ளோம்.  தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தோல்வி கூட்டணி ஆகும். தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் தான் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது. 

    மோடி பிரதமர் ஆன பிறகு தான் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுடுவது தடுத்து நிறுத்தப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தான் மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை மக்கள் அனுபவித்தார்கள். இப்போது தமிழகம் முன்மாதிரி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. 

    இவ்வாறு அவர் பேசினார். 

    நிகழ்ச்சியில் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பொன்னுச்சாமி, மாநில இளைஞரணி செயலாளர் ஓம்கார பாலாஜி, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ஹரி, தென்காசி பா.ஜ.க. தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கருப்பசாமி, பா.ஜ.க. மேலிட பார்வையாளர் தென்காசி ராஜ்குமார், 32-வது வார்டு பா.ஜ.க. தலைவர் இசக்கிமுத்து, தென்காசி நகர ஆர்.எஸ்.எஸ். தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  #arjunsampath #admkgovt
    சபரிமலை விவகாரத்தால் கேரளாவில் வன்முறை நீடித்து வரும் நிலையில், சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் கேரளாவில் கைது செய்யப்பட்டனர். #Sabarimala #VavarSwamyMosque
    பத்தனம்திட்டா:

    திருப்பூரில் இருந்து சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். 

    கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள வாவர் பள்ளி வாசலுக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில்  வாவர்சாமி பள்ளிவாசலுக்குள் நுழைய தமிழகத்தில் இருந்து சில பெண்கள் வருவதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், 3 பெண்கள் உட்பட 5 பேரை கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுசீலாதேவி, ரேவதி, காந்திமதி, திருப்பதி, முருகசாமி ஆகியோர் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுப்ப, கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் கேரள அரசு, வாவர் பள்ளி வாசலுக்குள் செல்லவும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



    இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது,

    சபரிமைலையின் புனிதம் காக்கப்பட வேண்டும். சபரிமலை கோவிலுக்குள் 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று வந்த நிலையில், மசூதிக்கு செல்ல பெண்களுக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறீர்கள். மசூதிக்குள் பெண்ணுரிமையை நிலைநாட்ட மறுப்பது ஏன்? பினராயி விஜயினின் இரட்டை வேடம் ஏன்? இந்துக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஒருதலைபட்சமான இந்த நடிவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை என்றார். #Sabarimala #VavarSwamyMosque

    கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #ArjunSampath

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் , கைகளில் தென்னங்கன்றுகளுடன் கலந்து கொண்டு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் மனு கொடுத்தார்.

    கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் சேதமாகி உள்ளது. இதனால் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தென்னை மரங்கள் அதிகமாக சேதமானதால் தேங்காய் விலை அதிகமாகும் சூழ்நிலை உள்ளது. இதனை சரிசெய்ய விவசாயிகளுக்கு புதிய தென்னங்கன்றுகளை தமிழக அரசு வழங்க வேண்டும். வீடு மற்றும் விவசாய பயிர் சேதங்களை விரைவாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி கேட்டது. அதனை உடனடியாக மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    அதற்கு முன்பு இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன், டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த போது, இலவசமாக மண்எண்ணை வழங்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது மக்கள் மண்எண்ணையை அதிகம் பயன்படுத்துவதில்லை. எனவே மக்களுக்கு கியாஸ் அடுப்பு, சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் மோடி வந்து பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பொருட்களை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ArjunSampath

    தமிழக அரசை எதிர்ப்பதையே கமல்ஹாசன் கொள்கையாக வைத்துள்ளார் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் விமர்சித்துள்ளார். #ArjunSampath #KamalHaasan
    ஈரோடு:

    இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து 108 நாட்கள் ஆன்மீக பிரச்சாரத்தின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    பிரச்சார வாகனத்தை இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அர்ஜூன்சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் இந்து மக்கள் சட்சி சார்பில் 108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் அ,தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்றாக ஆன்மீக அரசியல் கொள்கையில் நம்பிக்கை இருக்கக்கூடிய அனைத்து தலைவர்களை ஒன்று திரட்ட வேண்டும். ஒரு மாற்று அரசியல் சக்தி, தேசிய அரசியல், ஆன்மீக அரசியல் தமிழகத்தில் காலுன்ற வேண்டும்.

    மத்தியில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க வேண்டும். இந்த இரண்டு கருத்துகளை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் 108 நாட்கள் இந்த பிரச்சாரம் நடைபெறும்.

    கஜா புயலால் தற்போது டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கடந்த காலங்களில் நிஷாபுயல், தானே புயல் ஏற்பட்டபோது நரேந்திரமோடி நேரடியாக வந்து வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார். இடைகால நிவாரணமாக சில நூறு கோடி ரூபாய் ஒதுக்கினார். அதேபோல் இப்போதும் மோடி வந்து பார்வையிட வேண்டும்.

    கஜா புயலால் சேதமடைந்த வீடுகளை மத்திய அரசின் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டம் மூலம் மறுசீரமைப்பு செய்து கொடுக்க வேண்டும் இப்படி புயல் பாதித்த அனைத்து பகுதிகளில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை மாநில அரசு செய்ய வேண்டும். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது.

    மக்கள் எளிதில் அணுகும் முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர்.



    கமல்ஹாசன் தமிழக அரசை எதிர்ப்பதையே தனது கொள்கையாக வைத்துள்ளார். அதன் மூலம் விளம்பரம் தேடி கொள்கிறார். தமிழகத்தில் எந்த நன்மையும் கிடைக்க கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஊதுகோலாக கமல்ஹாசன் உள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தை பொறுத்தவரை சபரிமலை ஐயப்பன் கோவிலை அழித்துவிட்டு அதை சுற்றுலா தலமாக்க மாற்ற முயற்சி செய்து வருகிறார் கேரள முதல்வர். ஒரு மத்திய அமைச்சரையே கேரள போலீசார் தடுத்து உள்ளார்கள் என்றால் சாதாரண பக்தர் நிலை என்னவாகும்?

    உடனடியாக மத்திய அரசு சபரிமலை ஐயப்பன் கோவிலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ArjunSampath #KamalHaasan

    கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்த வழக்கில் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கு தலா ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி வேலுச்சாமி தீர்ப்பளித்தார். #ArjunSampath
    கோவை:

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதானது. இதனை பலர் வரவேற்றனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டாடும் விதமாக இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 3-ல் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்த அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கும் தலா ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி வேலுச்சாமி தீர்ப்பளித்தார். #ArjunSampath
    18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கூவத்தூர் கலாச்சாரம் தொடர்வதால் குதிரை பேரம் விரைவாக ஆரம்பிக்கும் என்றும் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். #MLAsDisqualificationCase #ArjunSampath
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    144 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு பல லட்சம் மக்கள் வருவார்கள் என்று தெரிந்தும் அரசும், அறநிலையத்துறையும் ஒத்துழைக்கவில்லை. போக்குவரத்து வசதி, ரெயில் வசதி, பெண்கள் உடை மாற்றும் அறைகள் எல்லாம் சரி செய்து தரப்படவில்லை. புஷ்கர விழாவில் 40 லட்சம் மக்கள் புனித நீராடி இருக்கிறார்கள்.

    18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கூவத்தூர் கலாச்சாரம் தொடர்கிறது. இதனால் குதிரை பேரம் விரைவாக ஆரம்பிக்கும். இதற்கு மாற்று அரசியல் கண்டிப்பாக வரவேண்டும். அ.தி.மு.க., தி.மு.க. இருக்கும் வரை இது போன்ற அரசியல் நடக்கும் என்றார். இதற்காகத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் ஆரம்பித்திருக்கிறார். ஆன்மீக அரசியல் கண்டிப்பாக வெற்றி பெறும்.

    வருகிற 26-ந் தேதி சென்னையில் மீ டூ விவகாரம் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பொதுவாக பாலியல் விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். அது பொய்யென்றால் புகார் அளித்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுபோன்ற வி‌ஷயங்களில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்.

    எச்.ராஜா மீது தொடர்ந்து மீம்ஸ் மூலம் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கூறப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும். இதை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MLAsDisqualificationCase  #ArjunSampath
    சபரிமலை கோவில் பிரச்சினைக்காக கேரள அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #Sabarimala #ArjunSampath
    நாகர்கோவில்:

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக பக்தர்கள் அனைவரும் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

    கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டின் பல தீர்ப்புகளை உதாசீனப்படுத்தி உள்ளது. குறிப்பாக முல்லை பெரியார் அணை பிரச்சினை, கூம்பு வடிவ ஒலிபெருக்கி, காவிரி பிரச்சினைகளில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தவில்லை.

    அய்யப்பன் கோவில் விவகாரத்தில் மட்டும் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த ஆர்வமாக உள்ளனர். ஆனால் இதற்கு மக்கள் காட்டிய எதிர்ப்பை கண்டு இப்போது பின்வாங்கியுள்ளனர்.

    முதல்-மந்திரி பினராய் விஜயன், வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று 2 பெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்வதற்கு முதல்-மந்திரி பினராய் விஜயனே காரணம். இதன்மூலம் நாடு முழுக்க கலவரம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.

    சபரிமலை கோவில் பிரச்சினைக்காக போராடிய பந்தளம் மன்னர் குடும்பத்தினர், தந்திரிகள் துன்புறுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக கேரள அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

    மத்திய அரசும் இப்பிரச்சினையில் வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் உடனடியாக பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி சட்டம் கொண்டு வர வேண்டும். இதன்மூலம் அய்யப்பன் கோவிலை மத்திய அரசே ஏற்றுநடத்த வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மறு ஆய்வு மனுக்கள் போடுவது இப்பிரச்சினைக்கு தீர்வை தராது. இப்பிரச்சினை தொடர்பாக நாளை 21-ந் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய சத்தியாகிரக போராட்டம் நடைபெறும்.

    தாமிரபரணி புஷ்கர விழா நடைபெறும் வேளையில் நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #ArjunSampath
    சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். #Sabarimala #ArjunSampath
    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோர்ட் பல முறை உத்தரவிட்டும், உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். தேர்தல் நடத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தி கண்ட கனவை நனவாக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் தான் மதுவினால் அதிக இளம் விதவைகள் உள்ளனர். திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக தமிழகத்தில் ஆன்மிக அரசியல் கொண்டு வர ராமராஜ்யம் பிரச்சார யாத்திரை நடத்தி வருகிறோம்.

    சபரிமலையில் கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது. 10 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் போகலாம் என சட்டத்தில் உள்ளது. ஆனால் பெண்கள் அனைவரும் கோவிலுக்கு செல்லலாம் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது அய்யப்ப பக்தர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இந்து கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு கோர்ட் தலையிடாமல் இருப்பதற்கு பாராளுமன்றத்தில் தனி சட்டம் இயற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #ArjunSampath
    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை திட்டமிட்டு சீர்குலைக்க சில சக்திகள் முயற்சித்து கொண்டு இருக்கின்றன என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #arjunsampath

    தூத்துக்குடி:

    இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பசுமை தீர்ப்பாயத்தின் குழு தூத்துக்குடி வந்த போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் மனு கொடுக்க மக்கள் வந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து ஆலைக்கு ஆதரவாக மனு கொடுக்க வந்தவர்களை தங்களின் மனுக்களை குழுவினரிடம் கொடுக்க தடையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதையும் மீறி சென்னையில் 35 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனுக்கள் ஆலைக்கு ஆதரவாக பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய-மாநில அரசுகள் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். இந்த பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். அதே போல் எத்தனால் கலந்த எரிபொருட்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மின்சாரத்தில் இயங்க கூடிய வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக தமிழ்நாடு முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை திட்டமிட்டு சீர்குலைக்க சில சக்திகள் முயற்சித்து கொண்டு இருக்கின்றன. இதை தி.மு.க. ஆதரித்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குகிறது. இது தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சவால். இதனை அவர் சமாளிக்க வேண்டும்.

    தாமிரபரணி புஷ்கர விழாவில் 1 கோடி பேர் கலந்து கொள்ள உள்ளார்கள். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய இந்த விழாவை நடத்த நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதுடன், ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

    இந்த விழா நடந்துவிட்டால் தென் மாவட்டங்களில் ஆன்மீக அரசியல் பலப்பட்டு விடும், இந்து ஒற்றுமை ஏற்பட்டு விடும் என்ற கண்ணோட்டத்தில் இந்த விழாவை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். அரசு இந்த நிகழ்ச்சிக்கு நிதி ஒதுக்கி, விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    ஆனால் நெல்லை மாவட்டத்தில் 2 இடங்களில் விழா நடத்த தடை விதித்து உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்த தடையை மீறி விழா வெற்றிகரமாக நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்தியில் மீண்டும் மோடி பிரதமராகவும், தமிழகத்தில் ரஜினிகாந்த் முதல்-அமைச்சராகவும் வலியுறுத்தி 108 நாள் பிரசாரத்தை இந்து மக்கள் கட்சி தொடங்கி உள்ளது. #Rajinikanth #HinduMakkalKatchi
    ஓசூர்:

    மத்தியில் மீண்டும் மோடி பிரதமராகவும், தமிழகத்தில் ரஜினிகாந்த் முதல்-அமைச்சராகவும் வலியுறுத்தி 108 நாள் பிரசாரத்தை இந்து மக்கள் கட்சி தொடங்கி உள்ளது.

    ஓசூரில் தொடங்கிய இந்த பிரசார பயணம் ரஜினியின் பூர்வீக கிராமமான நாச்சிக்குப்பத்தில் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டது. தொடர்ந்து இந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்கிறார்கள்.

    இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:-

    மி‌ஷன் 2019 என்ற தலைப்பில் ஆன்மீக அரசியல் பிரசார பயணம் தொடங்கப்பட்டு உள்ளது. மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் திராவிட இயக்க ஆட்சி முடிவுக்கு வந்து ஆன்மீக அரசியல் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காக ரஜினி முதல்வராக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளது.

    எங்கள் பிரசார குழுவினர் 108 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்வார்கள். அந்த பிரசார வேனில் மோடியின் சாதனை பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Modi #Rajinikanth #ArjunSampath #HinduMakkalKatchi
    திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ரஜினிகாந்த் முதலமைச்சராக வந்தால் பெரும் மாற்றம் ஏற்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். #Rajinikanth #ArjunSampath
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு அரசின் அனைத்து நிபந்தனைகளையும் இந்து மக்கள் கட்சி ஏற்கிறது. ஒரு சில இடங்களில் காவல்துறையின் அதிகப்படியான கெடுபிடிகளை மீறி விழா நடத்திய இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    ஆன்மிக அரசியல் குறித்து பிரசாரம் செய்யும் விதமாக இன்று (நேற்று) முதல் 108 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம். மத்தியில் ஆளும் மோடி அரசு மீண்டும் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா அரசின் சாதனை குறித்து 1 லட்சம் துண்டுபிரசுரங்கள் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்க உள்ளோம்.


    தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வரவேண்டும். அவர் வந்தால் தமிழகத்தில் பெரும் மாற்றம் ஏற்படும்.

    தாமிரபரணி புஷ்கரணி விழா நடத்த கூடாது, அதற்கு நிதி அளிக்க கூடாது என்று கூறும் அரசியல் கட்சிகளுக்கு எங்களது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நதி தாய்க்கு நாம் விழா எடுத்து நடத்த வேண்டும். எனவே அரசு இந்த விழாவிற்கு நிதி ஒதுக்கி சிறப்பாக நடத்த வேண்டும் என்பது இந்துக்களின் கோரிக்கையாகும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத்தேர் ஓட அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீபத்திருவிழா அன்று மலையேற பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #ArjunSampath
    விமானத்தில் தமிழிசையுடன் பிரச்சினை செய்த சோபியாவின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். #ArjunSampath #Sophia
    கோவை:

    வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வ.உ.சி. நினைவு மண்டபத்தில் அவரது சிலை மற்றும் அவர் இழுத்த செக்குக்கு இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வ.உ.சி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கோவை மாநகரில் வ.உ.சி.க்கு சிலை வைக்க வேண்டும். கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்த அறையை பராமரிப்பு செய்ய வேண்டும். அவினாசி சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

    தூத்துக்குடி சென்ற விமானத்தில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசையுடன் பிரச்சினையில் ஈடுபட்ட சோபியா என்ற பெண் தமிழிசையுடன் பயணம் செய்வதாக டுவீட் செய்துள்ளார். விமானத்துக்குள் கோ‌ஷம் எழுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்பது கனடா சென்று பெண்ணுக்கு தெரியும். அந்த பெண் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்.

    எனவே தான் தமிழிசை முறையாக போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சோபியா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இதுபோன்றவர்களுக்கு ஆதரவு தரக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ArjunSampath #Sophia

    ×