search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு வெடித்த வழக்கு- அர்ஜூன் சம்பத்துக்கு ரூ.1000 அபராதம்
    X

    பட்டாசு வெடித்த வழக்கு- அர்ஜூன் சம்பத்துக்கு ரூ.1000 அபராதம்

    கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்த வழக்கில் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கு தலா ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி வேலுச்சாமி தீர்ப்பளித்தார். #ArjunSampath
    கோவை:

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதானது. இதனை பலர் வரவேற்றனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டாடும் விதமாக இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 3-ல் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்த அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கும் தலா ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி வேலுச்சாமி தீர்ப்பளித்தார். #ArjunSampath
    Next Story
    ×