என் மலர்
நீங்கள் தேடியது "Anger"
- 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பனை விதைகளை விதைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- செருதூர் கடற்கரை–யிலிருந்து- ராமர்மடம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு பனை விதை நடப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சியானது 6 கி.மீ தூரம் கடற்கரை கொண்ட கிராமமாகும். 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மற்றும் 2018ம் ஆண்டு வீசிய கஜாபுயல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்த கடலோர கிராமம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது
அதனை தடுக்கும் வகையில் இயற்கை அரணாக விளங்கும் பனை மரத்தை அதிக அளவில் நட வேண்டும் என ஊராட்சி சார்பில் திட்டமிட்டு 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பனை விதைகளை விதைக்க இலக்கு நிர்ணயிக்க–ப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன் தொடங்கி வைத்தார்
செருதூர் கடற்கரை–யிலிருந்து- ராமர்மடம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு பனை விதை நடப்பட்டது இதன் மூலம் கிராமத்தை பெரிய அளவிலான பாதிப்பிலிருந்து காக்க முடியும் என தெரிவித்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி வெற்றிச்செல்வன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யா தமிழரசன், ஊராட்சி செயலர் ச.சீதா, வார்டு உறுப்பினர் செல்வம், செல்வி, கலாநிதி மக்கள் நல பணியாளர் செல்வி கலந்து கொண்டனர்.
- எல்லா கோபத்துக்கு பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது.
- எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை தருகின்றன.
கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்கு போட்டியாக இருப்பதை பயமுறுத்தி விரட்டவும் உருவான ஒரு செயல். அதுவே மனிதர்களுக்கான காரணம் என்றால், பின்வருமாறு சொல்லப்படுகிறது.
ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக்கொண்டுவர உதவும் ஒரு நடவடிக்கையாக கோபம் உருவாகிறது.
எல்லா கோபத்துக்கு பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது. கோபத்தின்போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
கோபத்தை குறைப்பதற்கு அடுத்து என்ன செய்யலாம் என அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கும் மூளையில் சில பகுதிகள் உள்ளன.
மன அழுத்தம், விபத்து, மூளையில் ஏற்படும் நோய்கள், மது போன்றவை மூளையின் கோபத்தை கட்டுப்படுத்தும் பகுதியை பாதிக்கின்றன. அதனால் சிறு விஷயங்களுக்குக்கூட கட்டுப்படுத்த முடியாமல், ஏன் காரணமே இல்லாமல்கூட கடுங்கோபம் ஏற்படுகிறது. அதனால்தான் 'ஆறுவது சினம்' என அவ்வையார் கூறியுள்ளார்.
அளவுக்கு அதிகமான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை தருகின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஏற்க தொடங்கினாலே பாதி கோபம் குறைந்துவிடும்.
இன்னொரு முக்கியமான விஷயம் கோபம் என்பது அனிச்சையாக நடைபெறும் ஒரு பழக்கம். சூடான பாத்திரத்தை தொட்டவுடன் கை அனிச்சையாக பின்செல்வதுபோல், ஒரு நிகழ்வு நடந்ததும் யோசிக்காமல் அனிச்சையாக கோபப்பட்டு பலரும் பழகி இருக்கிறோம். தினமும் காலை எழுந்ததும் ஓர் 5 நிமிடம் இன்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம், என்கிறார்கள் உளவியலாளர்கள்.
- மனைவி மீதான கோபத்தில் மகனை வீட்டில் அடைத்து சி்த்ரவதை செய்த தந்தை போலீசார் தேடி வருகின்றனர்.
- தந்தை விளக்கால் பெற்ற மகனையே குத்தியுள்ளார். வலியால் துடித்த சிறுவன் கதறி அழுதுள்ளான்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே உள்ளது சின்னகற்பூரம்பட்டியை சேர்ந்தவர் அறிவாணன் (வயது32). இவரது மனைவி ரோஜா (29) இவர்களுக்கு ஜீவா(8) என்ற மகனும், நிலா என்ற மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் ரோஜா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவியின் மீது ஆத்திரத்தில் இருந்த அறிவாணன் சம்பவத்தன்று தனது மகன் ஜீவாவை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு விளக்கால் பெற்ற மகனையே குத்தியுள்ளார். வலியால் துடித்த சிறுவன் கதறி அழுதுள்ளான்.
இந்த நிலையில் மாயமான மகனை பல்வேறு இடங்களில் ேதடி பார்த்து உள்ளார். அப்போது ரோஜாவின் உறவினரான இன்பவள்ளி என்பவர், கணவர் வீட்டிலிருந்த மகனின் சத்தம் கேட்டதாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து ரோஜா கணவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது சிறுவன் ஜீவா காயங்களுடன் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அவரது தாயார் உடனடியாக மகனை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கமலமுத்து, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் வழக்குப்பதிவு செய்து அறிவாணனை தேடி வருகின்றனர். மனைவி மீது உள்ள கோபத்தில் பெற்ற மகனை தந்தை சித்ரவதை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* சுவாசிப்பதில் கவனம் செலுத்தலாம். உதாரணமாக, ஒன்று முதல் ஆறு வரை மனதில் எண்ணிக்கொண்டே மெதுவாக மூச்சை உள்ளிழுங்கள். பின்னர், அதேபோல ஒன்று முதல் ஏழு வரை எண்ணிக்கொண்டே மூச்சை அடக்க முயற்சி செய்யுங்கள். இறுதியாக, மனதில் ஒன்று முதல் எட்டு வரை எண்ணிக்கொண்டு மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். இப்படி பத்து முறை செய்து பாருங்கள்... கோபம் மட்டுமல்லாமல், பதற்றமும் பயமும்கூடக் குறைந்துவிடும்.
* சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்படும். அப்போது, வீட்டில் ஒரு தனி அறைக்குள் போய், தாழிட்டுக்கொண்டு தலையணையிடம் கோபத்தைக் காண்பிக்கலாம். ஆனால், அதுவும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற சூழலில் ஓர் அழகான கவிதையை எழுத முயற்சிப்பதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
* விரும்பத்தகாத சூழலில் கோபமான மனநிலையை மாற்றுவதற்காக, மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறிது நேரம் பேசலாம். நகைச்சுவை மற்றும் செல்லப் பிராணிகளின் வீடியோக்களை பார்ப்பதால், உடனடியாக மனம் மாறும். கோபம் ஏற்படும் சூழலில் மனதில் ஒன்று முதல் பத்து வரை எண்ண ஆரம்பியுங்கள். பின்னர், அதையே மீண்டும் பத்தில் இருந்து ஒன்று வரை ரிவர்ஸாக எண்ணவும். இந்தக் கால அவகாசம், உங்கள் மனநிலையைச் சற்று மாறச் செய்யும்.
* கோபம் தணிந்ததும், அதற்கானக் காரணம் என்ன... எப்படி... எதனால்... யார் மீது தவறு என்பதை எல்லாம் நிதானமாக நினைத்துப் பாருங்கள். உங்கள் மீது தவறு இருந்தால், திருத்திக்கொள்ளுங்கள். பிறர் மீது தவறு இருந்தால், ஒரு வாரம் கழித்து அவர்களிடம் நடந்தது என்ன என்பதைத் தெளிவாக விளக்குங்கள். நீங்கள் காயப்பட்டதையும்கூட பொறுமையாக எடுத்துச்சொல்லுங்கள். இதனால், உறவுகளிடம் சிக்கல் ஏற்படாது.

* காரணமில்லாமல் கோபம் வருவது, அந்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் முரட்டுத்தனமாகச் செயல்படுவது போன்ற அதீத உணர்ச்சி வெளிப்பாடு இருந்தால், அவசியம் மனநல ஆலோசகர் அல்லது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
* கோபம் வரும்போது வெளியே போய், சிகரெட் பிடிப்பது, டீ குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், கண்களை மூடி உட்காருங்கள். அல்லது தனி இடத்துக்குச் சென்று, குறைந்தது பத்து நிமிடங்களாவது உட்கார்ந்துவிட்டு வாருங்கள். ஃபிரெஷ் ஜூஸ், ஐஸ்க்ரீம் போன்ற சுவையான உணவுகள் மனம் அமைதிபெற உதவுபவை.
* பசி, அசிடிட்டி, அல்சர், அதீதப் பசி, தலைவலி போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு அதிகக் கோபம் வரும். இவர்கள் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். அதுவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளாகச் சாப்பிடுவது நல்லது.
* மகிழ்ச்சியான சூழலும் மனநிலையும் வேண்டுமெனில், நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்தெடுங்கள். சிந்திப்பது, பேசுவது, செய்வது என எல்லாவற்றையும் பாசிட்டிவ் கோணங்களில் செய்துவந்தால், மகிழ்ச்சியான சூழல் உங்களைத் தழுவிக்கொள்ளும்.
* சிலருக்குக் கோபம் நோயின் அறிகுறியாக இருக்கும். ஓவர்ஆக்டிவ் தைராய்டு, அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரைநோய், மனச்சோர்வு, மறதி நோய், ஆட்டிசம், தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளால்கூட கோபம் வரலாம். இவர்கள் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.
பெண்களே உங்களுக்கு கோபம் வரும் போது தயவு செய்து ஒரு முறை உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் நின்று உங்கள் உருவத்தை பாருங்கள். முகம் அஷ்ட கோணலாகி, கண்கள் சிவந்து நீர் வழிய, மூக்கு விடைக்க, நரம்பு வெளியே தெரிய நீங்களே விரும்பாத உங்கள் முகத்தை உங்களை சுற்றி உள்ளவர்கள் எப்படி சகித்துக்கொள்வார்கள் என்று ஒரு கணம் சிந்தித்து இருக்கிறீர்களா?
ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு கோபம் வருவது குறைவாக இருக்கலாம். ஏனென்றால், அவர் தன் மீது எப்போதும் இறைவன் பார்வை விழுந்து கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறார். அதனால் கோபம் குறைகிறது. கோபங்களை குறைத்துக்கொள்ள ஆன்மிகம், யோகா, தியானம் போன்ற ஞான மார்க்கத்தில் ஈடுபட்டால் கோபம் வருவது குறையும். ஆனால் இதிலும் மனதை அடக்க தெரிந்தவர்களுக்கே சாத்தியம். அதே போல் மறதி பல உறவுகளுக்கு பாதையை அமைக்கும்.

இதனால் தான் நமது பெரியவர்கள் சொன்னார்கள். “குற்றம் பார்க்கின் சுற்றும் இல்லை“ என்று? மாமியாரின் குத்தல் பேச்சுகளை மருமகள் மறந்தால் தான் வீட்டில் அமைதி நிலைக்கும். கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க ஆரம்பிக்கும்.
இப்படி ஒருவர் மேல் ஒருவர் வரும் கோபத்தை மறப்பதுடன் அவரை மன்னித்தால் அவரும் திருந்துவார். அங்கே அன்பும், சமாதானமும் நிலைக்கும். இதனால் ஏட்டிக்கு போட்டி நான் தான் பெரியவன், எனக்கு தான் எல்லாம் தெரியும், இது என்னால் மட்டும் தான் முடியும் என்ற சுயநலம் பறந்தோடி உறவுக்கு உயிர்கொடுக்கும். ஒருவரை ஒருவர் மன்னிப்பதால் அங்கே அமைதி நிலைத்து நிற்கும்.
அராஜகமும், தீவிரவாதமும் விரட்டி அடிக்கப்படும். இதைத்தான் கவிஞன் ஒருவன் கூறுகிறான். மண்ணில் மன்னிக்க தெரிந்தவன் மகாத்மா ஆகிறான் என்று. இதே கருத்தைத்தான் அனைத்து மதங்களும் எடுத்துரைக்கின்றன. அறிவியல் விந்தைகள் நிகழ்ந்து வரும் இந்த காலத்தில் மன்னிப்பு என்ற கேடயத்தை நாம் கையில் வைத்திருந்தால், கோபம், துன்பம் என்ற அரக்கர்கள் நம்மை அணுகமாட்டார்கள்.
உங்கள் குழந்தைக்கு, இயல்பிலே நல்ல குணங்கள் இருக்கலாம். அந்தக் குணத்தை தக்க வைக்க, அவை வெளிப்படும்போதெல்லாம் பாராட்டுங்கள். குழந்தைகளைப் பாராட்டும் போது, எந்தச் செயலுக்காகப் பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுவதுதான் சரி. அவர்களை தன் செயலில் தெளிவுடன் இறங்க வைக்க இதுதான் நல்ல வழியும் கூட.
பாராட்டுகளைப் பொறுத்தவரை, அவை வாய் வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு தட்டிக்கொடுத்தலோ, ஒரு முத்தமோ, அன்பான அழுத்தமான அணைப்போ, ஆச்சர்யப் பார்வையோ, தலை கோதி விடுதலோ, பிடித்த இடத்துக்கு அழைத்துச் செல்வதோ, பிடித்த உணவைச் சமைத்து தருவதாகவோகூட இருக்கலாம்.
உங்கள் குழந்தையின் ஏதேனும் ஒரு சிறப்பான செயல்பாட்டினை, அவர்களுக்குப் பிடித்தவர்களின் முன்னிலையில் வைத்து பாராட்டுங்கள். இது அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இது போன்ற செயல்களைச் செய்யும் ஊக்கத்தையும் அளிக்கும்.
நம் பாராட்டுதல்கள் குழந்தையை ஊக்கப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பிறரைப்பாராட்டும் தன்மையைக் குழந்தையிடம் வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் ஏற்று அதையும் மனதார பாராட்டுவதை குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பழக்குங்கள். இதுஅவர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்கும்.
திறனை வெளிப்படுத்தும் போதும், போட்டிகளில் வெற்றி பெறும் போதும் மட்டும் பாராட்டாமல், தோல்வி அடையும் போதும், குழந்தையின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பாராட்டுதல் வேண்டும்.
ஒருமுறை பாராட்டிவிட்டு அந்தத் திறமையை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்த்தெடுக்க வழியாக இருந்து உதவுங்கள். அவர்களின் அடுத்தகட்ட நகர்வுக்கு அதுதான் உதவும்.
பாராட்டு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது. உணர்வுரீதியான மற்றும் சமுக ரீதியான சரியான வளர்ச்சிக்கு குழந்தைகளுக்குப் பாராட்டு என்னும் வைட்டமின் சத்து மிக மிக அவசியம்.
* உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடாக கோபம் வருகிறது. வெறுப்பு, வலி, பயம் ஆகியவையே கோபத்தின் வேர்களாக உள்ளன. ஆரம்பத்தில் எதிர்பார்ப்பின் காரணமாக வெறுப்பும், வலியும் ஏற்படலாம். நம்பிக்கையின்மை, அறியாமை, சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயமும், கோபம் உருவாக காரணமாகலாம். நீங்களாக யோசித்துப் பார்த்தால் கோபத்தின் அடியில் இந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு இருப்பதை உணரலாம். எதிர்பார்ப்பை குறைப்பதன் மூலம் வெறுப்பை தணிக்கலாம். வெறுப்பை கைவிட்டால் கோபமும், துன்பமும் பறந்துபோகும்.
குட்டீஸ்... சமர்த்துப் பிள்ளையான உங்களை, நீங்கள் ரொம்ப கோபப்படுவதாக மற்றவர்கள் கூறுவதுண்டா? கோபத்தால் உண்டாகும் தீமைகளை இங்கே தெரிந்துகொண்ட பிறகும் கோபப்படுவது தவறு என்பதை புரிந்து கொண்டீர்களா? கோபத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்...
* பேசுவதில் கவனம் வையுங்கள். இனிமையாக பேசுங் கள். உங்கள் வார்த்தைகள் மற்றவர் மனதை காயப் படுத்தாத வகையில் இருந்தால் அவர்களும் உங்க ளை கோபப்படும் அளவுக்கு காயப்படுத் தமாட்டார்கள்.
* விளையாட நேரம் ஒதுக்குங்கள். அது மனதை பக்குவப்படுத்தும். சவாலான நேரங்களையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை எட்டும்.
* சிறிது நேரம் வெளியே சென்று வாருங்கள். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.
* நான் சரியாகத்தான் நடந்து கொண்டேன், எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போன்ற கர்வ நடத்தைகளை தவிருங்கள்.
* வேலையில் மூழ்கி மனவருத்தங்களில் இருந்து விடுதலை பெறுங்கள்.
* மூச்சுப் பயிற்சியும் மனநிலை மாற்றத்திற்கு துணை செய்யும்.
* உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடாக கோபம் வருகிறது. வெறுப்பு, வலி, பயம் ஆகியவையே கோபத்தின் வேர்களாக உள்ளன. ஆரம்பத்தில் எதிர்பார்ப்பின் காரணமாக வெறுப்பும், வலியும் ஏற்படலாம். நம்பிக்கையின்மை, அறியாமை, சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயமும், கோபம் உருவாக காரணமாகலாம். நீங்களாக யோசித்துப் பார்த்தால் கோபத்தின் அடியில் இந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு இருப்பதை உணரலாம். எதிர்பார்ப்பை குறைப்பதன் மூலம் வெறுப்பை தணிக்கலாம். வெறுப்பை கைவிட்டால் கோபமும், துன்பமும் பறந்துபோகும்.
* பலரும் தங்கள் கோபத்தின் காரணத்தை உணராமல் இருக்கிறார்கள். சகிப்புத்தன்மை குறைவே கோபம் வெளிப்பட காரணமாகும்.
* கோபம் ஏற்படும்போது மூளையை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், ‘அமிக்டாலா’ என்ற பகுதியில் இருந்து கோப உணர்வுகள் வெளிப்படுவதை கண்டுபிடித்தனர். உற்சாகம் தரும் விஷயங்களில் மனதை ஈடுபடுத்தினால் இந்த அமிக்டாலா பகுதியின் செயல்பாட்டை குறைத்து கோபத்தை கட்டுப்படுத்திவிடலாம் என்றும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
* உடலில் செரொடானின் ரசாயனப் பொருள் அதிகமானால் தீவிர மனப்போக்கு தூண்டப்படும். இதுவே கோபம், எரிச்சல், வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளை தூண்டுகின்றன. செரோடானின் திரவத்தை கட்டுப்படுத்தினால் அமிக்டாலா பகுதியின் செயல்பாட்டை தடுத்து கோபத்தையும் இல்லாமல் செய்துவிடலாம்.
* கோபமானது அட்ரினலின், கார்டிசோல் போன்ற ஹார்மோன்களை அதிகமாக தூண்டுகின்றன. இவை ஒருவகையில் உடலுக்கு சில நிமிடங்களுக்கு தீவிர ஆற்றலை வழங்குகின்றன. அதனால் கோபம் அளவாக வரு வது நல்லதுதான் என்று சொல்லப்படுகிறது. அளவுக்கு அதிகமான கோபமே, உடல் எந்திரத்தின் வேகத்தை அதிகமாக்கி எளிதில் சூடாக்கிவிடுகிறது. அது பலவித சிக்கல்களை தந்துவிடுகிறது.
* கோபம் உணர்வுகளின் வடிகால் என்றும் கருதப்படுகிறது. கவலை, வலி, ஏமாற்றம் போன்ற வேதனையான உணர்வுகளின் வடிகாலாக கோபம் வெளிப்படுவதால் அது கொடிய உணர்வல்ல என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். எனவே மற்றவர்களை காயப்படுத்தாத அளவுக்கு கோபத்தை வெளிப்படுத்துவது ஒன்றும் தவறல்ல.
* கோபம் நமது திறன்களை பாதிக்ககக்கூடியது. கோபத்துடன் தொடர்புடைய ரசாயனப் பொருட்கள் மூளை செல்களை அழிக் கிறது. மேலும் புதிய மூளை செல்கள் வளர்வதையும் தடுக்கிறது. இதனால் கோபமானது நமது நினைவுத்திறனில் தடுமாற்றத்தை உருவாக்கும்.

* உலகில் சரிபாதிக்கும் மேலானவர்கள் கோப வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்கிறது ஒரு உளவியல் ஆய்வு.
* கோபத்தின் விளைவால் பகை, விரோதம், உறவு முறிவு, போர்கள், வன்முறைகள் நிகழ்வதால் கோபம் கட்டுப்படுத்தக்கூடிய உணர்வாக வலியுறுத்தப்படுகிறது. கோபம் அழிவின் பாதை என்பது அனைத்து மத போதனைகளிலும் சொல்லப்பட்டுள்ளது.
* ஆண்களைவிட பெண்கள் கோபக்காரர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அவர்கள், ஆண்களைவிட 12 சதவீதம் அதிகமாக கோபத்தை வெளிப்படுத்துகிறார்களாம். ஆனால் கோபத்தின் விளைவாக ஆண்களே அதிகமாக வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
* போதைப் பழக்கம் கோப உணர்வை அதிகமாகத் தூண்டி கொடுமையானதாக மாற்றும் என்றும் ஆய்வு கூறுகிறது.
* கோபத்தால் ஏற்படும் மன அழுத்தம் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளதாம். எனவே கோபம் கொள்ளக்கூடாது.
* வீடியோ கேம்ஸ் விளையாட்டுகள் கோபத்திற்கும், தீவிர உணர்வுகளுக்கும் ஒரு காரணம் என்று நம்பப்பட்டது. ஆனால் விளையாட்டு நேரத்தில் மட்டுமே அவை தீவிர எண்ணத்தை உருவாக்குவதாக அறியப்பட்டு உள்ளது. விளையாட்டும், உடற்பயிற்சியும் கோபத்தை கட்டுப்படுத்தும் என்றே ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பழு தூக்கும் பயிற்சியைவிட, நீச்சல் பயிற்சி பலமடங்கு கோபத்தை கட்டுப்படுத்துகிறதாம். உங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறது என உணர்ந்தால் விளையாட்டிலாவது, உடற்பயிற்சியிலாவது கவனம் செலுத்துங்கள்.
* ஆண்களின் பாலின ஹார்மோன்களான டெஸ்டோஸ் டிரோன்கள், கோபத்தை அதிகம் தூண்டுவதாக அறியப்படுகிறது.
* டிஸ்னி லேண்ட் உள்ளிட்ட பொழுதுபோக்கு பூங்காக்கள் நிறைந்த அமெரிக்க நகரங்களான ஆர்லாண்டோ மற்றும் புளோரிடா போன்றவை அதிக கோபக்காரர்கள் வசிக்கும் பகுதியாக கணக் கெடுப்பில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியான உண்மையாகும்.
* ரோவியோ நிறுவனம் ‘அங்கிரிபேர்டு’ விளையாட்டையும், சினிமாவையும் உருவாக்கி புகழ்பெற்றது. ‘அங்கிரிபேர்டு’ சினிமா அதிகம் வசூல் செய்த சினிமா படங்களில் ஒன்றாக விளங்குகிறது.
* ‘இன்டர்லுகின்-6’ என்ற வைட்டமின்கள் குறைவு கோபத்தை தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது. இந்த வைட்டமின் பற்றாக் குறையால் இதய பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். வைட்டமின்கள் நிரம்பிய காய்கறிகள், பழங்களை சாப்பிட்டால் இதன் பற்றாக்குறையை ஈடுசெய்யலாம்.
* கோபத்தை கட்டுப்படுத்தும் பயிற்சிகள் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்துவதாகவும் உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் வெற்றியாளராக உயர விரும்பினால் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.






