search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anger"

    • குரல்வளையில் இருக்கும் மெல்லிய தசைகள் சேதமடையும்.
    • கத்திக்கொண்டே இருப்பதால் உறவுகளுக்குள் பிளவு ஏற்படவும்.

    அன்றாட வாழ்க்கை முறையில் பலரும் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறர்கள். குறிப்பாக பெண்களுக்கு வீட்டு வேலைகள், அலுவலகப்பணிகள், குழந்தைகள் பராமரிப்பு, குடும்பத்தின் முக்கிய பொறுப்புகள் ஆகியவற்றை தினசரி கையாள்வதன் காரணமாக எதிர்மறையான மனநிலை மாற்றங்கள் எளிதாக ஏற்படுகின்றன. இதன் விளைவாக பெண்களுக்கு அதிக கோபம், எரிச்சல், சலிப்பு, விரக்தி போன்ற பாதிப்புகள் உண்டாகும். அந்த உணர்வுகளை சத்தமாக திட்டுவது. கத்துவது போன்ற செயல்பாடுகளின் மூலம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

    குறும்பு செய்யும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், அதிகமாக சத்தம் போட்டு திட்டுவதும். கத்துவதும் பெண்களின் தினசரி நடவடிக்கையாகவே மாறிவிடும். இதன் காரணமாக குழந்தைகளுக்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

    குரல் நாண் மற்றும் தொண்டையில் அழுத்தம் ஏற்படும். தொண்டையில் இருக்கும் குரல்வளையில் ஏற்படும் அதிர்வு காரணமாகத்தான் நம்மால் பேச முடிகிறது. சத்தமாக பேசும்போது குரல்வளையில் அதிக அழுத்தத்தோடு அதிர்வு ஏற்படுவதாலும், அடுக்குகளுக்கு இடையில் காற்றோட்டம் குறைவதாலும் உராய்வு ஏற்படுகிறது. இதனால் குரல்வளையில் இருக்கும் மெல்லிய தசைகள் சேதமடையும்.

    மேலும் நாளடைவில் பேசுவதற்கே சிரமம் ஏற்படலாம். அதிகமாக கோபப்பட்டு கத்துபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 6 மடங்கு குறைய வாய்ப்பு உள்ளது.

    ஒவ்வொரு முறையும் நீங்கள் கோபத்தில் உங்கள் குரலை உயர்த்தி பேசும்போது, உங்களுடைய இதயத் துடிப்பு அதிகரிப்பதை கவனிக்க முடியும். கோபம் அதிகரிக்கும்போது, உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதன் மூலம் இதயம் சீரற்று வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். சுவாசிக்கும் வேகம் அதிகமாகும். தசைகளில் அதிக அழுத்தம் உண்டாகும். இதன் காரணமாக தசைகள் தளர்ந்துபோக நேரிடும்.

    கோபப்பட்டு கத்துவதால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதன்மூலம் வளர்சிதை மாற்றம் குறையும். தலைவலி, பதற்றம், தூக்கமின்மை, செரிமானக் கோளாறுகள் மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்படும். எப்போதும் கோபப்பட்டு கத்திக்கொண்டே இருப்பவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    அடிக்கடி கத்திக்கொண்டே இருப்பதால் உறவுகளுக்குள் பிளவு ஏற்படவும். பிள்ளைகள் மற்றும் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர் அதிக சத்தம் போட்டு கண்டிப்பது, குழந்தைகளின் உடல் மற்றும் மனநிலையில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கும்.

    சிறுவயதில்தான் முளை மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால் பெற்றோர் அதிக சத்தம் போட்டு கண்டிப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். தொடர்ந்து இத்தகைய கடுமையான சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு ஆர்த்ரைட்டிஸ், தலைவலி, முதுகு மற்றும் கழுத்துவலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன

    • முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழிலாளி சரவணன்
    • கணவன் -மனைவிக்கும் அடிக்கடி தகராறு

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரசிங்கன் குப்பம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. தொழிலாளி அடிக்கடி குடித்து விட்டு வருவதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அப் பெண் பக்கத்து வீட்டை சேர்ந்த முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழிலாளி சரவணன் (47) என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் இருந்து வந்த அப் பெண் வேறு ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

    இந்த விவகாரம் கள்ளக்காதலன் சரவணனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், கள்ளக்காதலியை கொள்ளுகாரன் குட்டைக்கு வரவழைத்துள்ளார்.

    கொள்ளுகாரன்குட்டை பகுதியில் உள்ள முந்திரி தோப்புக்கு அழைத்துச் சென்று யாருடன் மணி கணக்கில் போனில் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அப் பெண்ணை சரவணன் தன் கையில் வைத்திருந்த சுத்தியால் காலிலும், தலையிலும் அடித்துள்ளார்.

    இதில் காயம் அடைந்தஅப் பெண் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், முத்தாண்டி குப்பம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் சரவணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • உலக அளவில் இருக்கிற நோய்களில் முதலிடத்தில் இருப்பது மன அழுத்தம் தான்.
    • மனஅழுத்தம் ஏற்படுகிற போது ஒருவரின் செயலும், குணமும் மாறுபடுகிறது.

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் என்பது சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி ஆகும்.

    எனவே மனதை சரியான திசையில் செலுத்தினால் மனஅழுத்தம் இன்றி நிம்மதியாக இருக்கலாம். உடல் ரீதியாக ஒருவர் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் மனரீதியில் பலவீனமாக இருந்தால் எளிதாக வீழ்த்தி விட முடியும். எனவே உலக அளவில் இருக்கிற நோய்களில் முதலிடத்தில் இருப்பது மன அழுத்தம் தான்.

    மனஅழுத்தம் ஏற்படுகிற போது ஒருவரின் செயலும், குணமும் மாறுபடுகிறது. இது அவர்களின் முன்னேற்றம் தடைபடுகிறது. தோல்வி அடைகிற போது எழும் கவலை மன அழுத்தமாக மாறுகிறது. நினைத்தது நடக்காத போது வரும் ஏமாற்றம், விரக்தி ஆகிறது. விரும்பியதை அடைய முடியாத போது ஏற்படும் கோபம் ஆத்திரமாக மாறுகிறது.

    குடும்பம், தொழில், வாழ்வியல் சூழல்களில் சிக்கல் ஏற்படும் போது மனரீதியாக அழுத்தம் ஏற்படுகிறது. அதை சரியாக கையாள கற்றுக் கொள்ளவேண்டும். இல்லை என்றால் மனிதர்க ளிடம் உளவியல் சிக்கல்கள் அதிகரித்து தவறுகளும், குற்றங்களும் அதிகரிக்க தொடங்கி விடும். எனவே மனதை சமநிலையில் நிறுத்தி நிதானமாக செயல்பட முயற்சிக்க வேண்டும்.

    • நிலைமை சீரடையும்போது ரத்த அழுத்தம் குறைய தொடங்கும்.
    • உயர் அழுத்தங்களினால் உடலில் விரும்பத்தகாத பாதிப்புகள் உண்டாகும்.

    உடல் ஆரோக்கியத்தை போல மன நலனையும் பேண வேண்டும். சிலர் எப்போதும் சிடுசிடுவென இருப்பார்கள். சிலரோ பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பார்கள். மனதை நிதானமாக வைத்திருக்காமல் ஒருவித பதற்றத்துடனே காணப்படுவார்கள். அப்படி இயல்பற்ற நிலையில் இருப்பது ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். இதயத்திலிருந்து ரத்தம் சீரான அழுத்தத்தோடு வெளிப்படும்போது அது உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும், திசுக்களுக்கும் பரவலாக சென்றடையும்.

    அப்படி சீரான அழுத்தத்தோடு தொடர்ச்சியாக ரத்தம் சென்றால் தான் திசுக்களால் சீராக இயங்க முடியும். அதற்கு இடம் கொடுக்காமல் உடலில் மாற்றங்கள் ஏற்படும்போது ரத்த அழுத்த அளவுகளும் மாறுபடக் கூடும். மிகவும் குறைந்த அளவு ரத்த அழுத்தம் இருந்தாலோ, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டாலோ அது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். ரத்தமானது, ரத்த நாளங்களின் வழியே பாய்ந்து செல்லும்போது ரத்தநாளச்சுவர்களில் ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தமாகும்.

    120 அளவுக்கு மேலுள்ள அழுத்தம், 'சிஸ்டோலிக்' அழுத்தம் எனப்படும். 80 அளவுக்கு கீழுள்ள தளர் அழுத்தம் 'டயஸ்டோலிக்' அழுத்தம் எனப்படும். ஒரு மனிதருக்கு பொதுவாக 'சிஸ்டோலிக்' அழுத்தம், 100-ல் இருந்து 120 மி.மீ பாதரச அளவில் இருக்க வேண்டும். அதுபோல் 'டயஸ்டோலிக்' அழுத்தம், 70-ல் இருந்து 80 மி.மீ பாதரச அளவில் இருக்க வேண்டும்.

    ஒருவருக்கு ரத்த அழுத்தமானது தொடர்ச்சியாக 120/80 மி.மீ. பாதரச அளவிற்கு மேல் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தம் எனப்படும். அந்த உயர் அழுத்தங்களினால் உடலில் விரும்பத்தகாத பாதிப்புகள் உண்டாகும். ஒருவருடைய உடல், மன நல செயல் பாடுகளில் ஏற்படும் மாற்றம் ரத்த அழுத்த அளவுகளில் வெளிப்படும். மன உளைச்சல், பதற்றம், பீதி, அச்சம், கோபம், கடுமையான உடற்பயிற்சி, கடும் உடல் உழைப்பு, கடும் குளிர் போன்ற சமயங்களின் போது வழக்கத்தை விட ரத்த அழுத்தம் உயர்ந்தே காணப்படும்.

    நிலைமை சீரடையும்போது ரத்த அழுத்தம் குறைய தொடங்கும். இப்படி உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்படும் ரத்த அழுத்தம், நாளடைவில் நிலையானதாகி உயர் ரத்த அழுத்த அளவுகளிலேயே நிலைத்து விடும். சிலருக்கு ஏன் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்ற காரணத்தை உடனே கண்டறிய முடியாது. அப்படி காரணத்தை கண்டறிய முடியாமல் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகுபவர்களின் பெற்றோர் மற்றும் முன்னோர்கள் பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.

    அவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வித்திடும் வகையிலான உடல் செயல்பாடுகளை கொண்டிருப்பார்கள். மன நலனினும் அதன் தாக்கத்தை உணர முடியும். குறிப்பாக மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இவர்களால் அமைதியான முறையில் வாழ்க்கை நடத்த முடியாது. சாப்பிடும் உணவில் உப்பை அதிகம் சேர்ப்பது ரத்த நாளங்களை முறுக்கேறச் செய்து ரத்த அழுத்தத்திற்கு வித்திட்டுவிடும் என்பது அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும்.

    • ஒருவர் மீது ஒருவருக்குக் கோபம் ஏற்படக் காரணம் என்ன? அவர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் போவதுதான்.
    • சொர்க்கம் - நரகம் என்பதெல்லாம் வேறெங்கும் இல்லை. அது நம்மிடம்தான் உள்ளது. மூர்க்க குணம் கொண்டவன் நரகவாசி. சாந்தகுணம் கொண்டவன் சொர்க்கவாசி.

    நமக்குக் கோபம் அவசியமா. ஏன் கோபம் வருகிறது. யாரிடத்தில் கோபப்படுகிறோம். கோபத்தினால் நமக்குப் பயனுண்டா... இப்படி கோபத்தைப் பற்றிய பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

    மிருகங்கள் நம் மீது கோபப்படுவதில்லை. ஆனால், அவற்றைச் சீண்டினால் நம்மைத் தாக்க வரும். நாயைத் தடவிக் கொடுத்தால் அது வாலாட்டிக் குழையும். நாம் கல்லெடுத்து எறிந்தால் நம்மைக் கடிக்க வரும். சிற்றெறும்புகளுக்கும் கோபம் வரும், நாம் அவற்றை மிதித்துவிட்டால்.

    நம்மையும் சிலர் அப்படிதான் சீண்டிப் பார்ப்பார்கள். நம்மைக் கோபப்படுத்தி, பின்னர் குற்றப்படுத்துவதில் அவர்களுக்கு அப்படியொரு பிரியம். அதற்கென்றே திட்டமிட்டுத் திரிபவர்கள் உண்டு. நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தார், பொது இடங்களில் பார்க்கின்ற மனிதர்கள் என பலதரப்பட்ட மக்களிடையே அப்படிப்பட்டவர்களையும் நாம் பார்க்க முடியும்.

    வேண்டுமென்றே வம்புக்கிழுப்பார்கள். தேவையற்ற வார்த்தைகளைப் பேசுவார்கள். உங்களை ஆத்திரமூட்டுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள். மொத்தத்தில் உங்கள் அமைதியைக் கெடுக்க வேண்டும். அதுதான் அவர்களின் நோக்கம். விஷப்பாம்புகளைக் கண்டால் எப்படி துரிதமாக விலகிச் செல்கிறோமோ, அதேபோல் அவர்களிடமிருந்து விலகிச் செல்வதுதான் உத்தமம்.

    சில சந்தர்ப்பங்களில் விலகிச் செல்ல முடிவதில்லை. அத்தருணங்களில் ஞானமாகப் பேசுவதும், புத்திசாலித்தனமாக அவர்களை மேற்கொள்வதும் மிக முக்கியம். இல்லையெனில், உங்கள் கோபத்தைக் கொண்டே உங்களை அழிவுக்கு உட்படுத்திவிடுவார்கள். அதனால்தான், 'தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்' என்றான் வள்ளுவன்.

    இந்த உலகில் நல்லபடியாய் நாம் வாழ்வதற்குச் சில தகுதிகள் நமக்குத் தேவைப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, 'கோபத்தை அடக்கி ஆளும் திறன்' மற்றும் 'நியாயமான கோபத்தை நேர்மையாக வெளிப்படுத்தும் ஆற்றல்'.

    தவறான நடத்தையைத் திருத்த - சமூக நீதியைப் பாதுகாக்க - எதிர்மறை உணர்வுகளை நீக்க - தன்மானத்தைக் காத்துக் கொள்ள உதவக்கூடிய கோபம் நியாயமானதுதான். ஆனால், அதுவே சரியான வடிகால் இல்லாவிடில் அழிவைத் தந்துவிடும்.

    கண்மூடித்தனமான கோபம் ஆபத்தானது. எத்தனையோ பேருடைய வாழ்க்கை அவர்களுடைய கோபத்தினால் அழிந்த கதைகள் உண்டு. சிறைச்சாலைகளில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அப்படி வந்தவர்கள்தான். பேசித் தீர்க்க வேண்டிய சாதாரணமான விஷயங்களை, கோபம் பூதாகரமாக்கிவிடும். நிலைமையைத் தாறுமாறாக்குவது கோபம்தானே.

    ஒரு ஜென் குருவை, படைத்தளபதி ஒருவன் பார்க்க வந்தான்.

    குருவை பணிவுடன் வணங்கினான். பின்னர் அவரைப் பார்த்து, 'சொர்க்கம் நரகம் என இருவேறு இடங்கள் உண்டா?' என்று கேட்டான்.

    'நீ யார்?' என்று கேட்டார் குரு.

    'நான் ஒரு சமுராய்' என்று மிடுக்குடன் பதிலளித்தான் அந்தப் படைத்தளபதி. 'சமுராய்' என்பது ஜப்பானில் வீரப் பரம்பரையைக் குறிப்பது.

    கம்பீரமாய் நின்ற அவனிடம், 'சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?' என்றார் குரு.

    அவனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. 'சமுராய்' என்று சொன்ன பிறகும் இப்படிக் கேட்டு அவமானப்படுத்திவிட்டாரே என்ற ஆத்திரத்தில் கொதித்தான்.

    உரக்கச் சிரித்தார் குரு.

    ஒன்றும் புரியாமல் படைத்தளபதி திகைத்தான்.

    'நீ கசாப்புக் கடைக்காரன்போல் தெரிகிறாயே. உன்னை எவன் தளபதியாக நியமித்தான்?' என்றார் குரு.

    படைத்தளபதிக்கு உச்சந்தலைமேல் கோபம் ஏறியது. சட்டென்று தன் உடைவாளை உருவினான்.

    'இப்போதே உங்கள் தலையைக் கொய்துவிடப் போகிறேன்' என்று கர்ஜித்தபடி வாளை ஓங்கினான்.

    'இதோ, இதுதான் நரக வாசல்' என்று நிதானமாகச் சொன்னார் குரு.

    அவன் புரிந்து கொண்டான். பனிபோல் கோபம் மறைந்தது. தலை தாழ்த்தி குருவை வணங்கினான்.

    'என்னை மன்னியுங்கள் குருவே' என்று பணிந்து கூறி, உடைவாளை உறையில் போட்டான்.

    'இதுதான் சொர்க்க வாசல்' என்றார் குரு.

    சொர்க்கம் - நரகம் என்பதெல்லாம் வேறெங்கும் இல்லை. அது நம்மிடம்தான் உள்ளது. மூர்க்க குணம் கொண்டவன் நரகவாசி. சாந்தகுணம் கொண்டவன் சொர்க்கவாசி.

    சிலர் அடிக்கடி கோபப்படுவார்கள். யாரைப் பார்த்தாலும் எரிந்து விழுவார்கள். அவர்கள் இருக்கும் இடம் நரகத்தைப் போலிருக்கும். அவர்களை யாரும் விரும்பமாட்டார்கள்; நெருங்கிச் செல்ல யோசிப்பார்கள். ஏனெனில், எதற்கெடுத்தாலும் கோபப்படுகின்றவர்கள், எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது.

    சாலையில் தங்கள் வாகனத்தை வேறு யாராவது முந்திவிட்டால் சிலருக்குக் கோபம் வந்துவிடுகிறது. விரட்டிச் சென்று அவர்களை முந்தப் பார்ப்பார்கள். பார்த்துப் பார்த்து முறைப்பார்கள். சிலர் சண்டைக்கே வந்துவிடுவார்கள். இது போன்ற சம்பவங்களை நாம் பார்க்கத்தானே செய்கிறோம்.

    சாப்பாட்டில் உப்பு குறைந்துவிட்டால் தட்டோடு தூக்கி வீசுகின்ற ஆண்கள்; பண்டிகைக்குப் பட்டுப் புடவை வாங்கித் தரவில்லை என்று கோபித்துக் கொண்டு, அம்மா வீட்டிற்குச் செல்லும் பெண்கள்; கைச்செலவுக்குப் பணம் தராத தந்தையை ஜென்மப் பகையாகப் பார்க்கும் பிள்ளைகள்; மாமியாரை வசைபாடும் மருமகள்கள்; அண்ணன் தம்பி வழக்குகள் - இப்படி ஒரு குடும்பத்திற்குள்ளேயே எத்தனை கோபதாபங்கள்!

    ஒருவர் மீது ஒருவருக்குக் கோபம் ஏற்படக் காரணம் என்ன? அவர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் போவதுதான். அதை உடனே அவர்களிடத்தில் சாமர்த்தியமாகப் புரிய வைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும். அப்படிச் செய்யாமல், மனதிற்குள்ளேயே போட்டு அமுக்கி வைத்துக் கொண்டிருந்தால், அது ஒருநாள் வெடித்துச் சிதறிவிடும்.

    யாரையும் காயப்படுத்தாமல் எதையும் நாகரிகமாகப் பேசி நல்ல இணக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், சிலருக்குப் பேசவே தெரிவதில்லை. உள்ளதைத்தானே சொல்கிறேன் என்று முகத்தில் அடித்தாற்போல் பேசிவிடுவார்கள். அது கோபத்தை அதிகமாக்கி மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.

    உறவுகளில் ஏற்படுகின்ற பிரிவுகளுக்கும், தேவையற்ற பிணக்குகளுக்கும் ஆத்திரமூட்டும் பேச்சுதானே காரணம். ஒரு சிறு தீக்குச்சியின் நெருப்பு மிகப்பெரிய காட்டையே சாம்பலாக்கிவிடும். அதைப் போன்றதுதான் கோபத்தை ஏற்படுத்துகின்ற வார்த்தை.

    கொலைகளும்கூட நிகழ்ந்துவிடுவதுண்டு. பலரின் வாழ்வில் கோபத்தினால் எத்தனை எத்தனை இழப்புகள்!

    மூவேந்தர் பாரி மகளிரைப் பெண் கேட்டு வந்தனர். ஆனால் அவர்களில் யாருக்குமே பெண் கொடுக்க பாரி சம்மதிக்கவில்லை. எனவே, மூவேந்தரும் ஓரணியாக இணைந்து பறம்பு மலையை முற்றுகை இட்டனர். அத்தோடு விட்டிருந்தால் நிலைமை மாறியிருந்திருக்கலாம்.

    ஆனால், மூவேந்தரையும் நோக்கிக் கபிலர் பாடிய பாடல்தான் அவர்களுக்குள் கோபத்தை அதிகப்படுத்தியது. அப்பாடல், புறநானூற்றில் நூற்றொன்பதாவது பாடலாக இடம்பெற்றுள்ளது.

    'அளிதோதானே பாரியது பறம்பே-

    நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்...' என்று தொடங்கும் அப்பாடலில் கபிலர் கூறுவது இதுதான்:

    'பாரியின் பறம்பு மலை, நாடி வருவோர்க்கு இரங்கத்தக்கது. ஆனால், மூவேந்தர்களாகிய நீங்கள் ஒன்று கூடி முற்றுகை இட்டாலும், பறம்பு மலையை உங்களால் கைப்பற்ற முடியாது. வாள் கொண்டு செய்யும் போருக்குப் பயந்து, தனது பறம்பு மலையை பாரி தந்துவிடமாட்டான். முற்றுகையின் காலத்தை நீட்டித்து, எங்கள் மக்களையும் வீரர்களையும் நலிவடையச் செய்து கைப்பற்றிவிடலாம் என்றும் எண்ண வேண்டாம். ஏனெனில், உழவர்கள் உழாமலேயே பறம்பு மலை நான்கு வகையான வளங்களை உடையது. எனவே, எக்காலத்திலேயும் பறம்பில் பஞ்சம் இல்லை. நீர் வளத்துக்கும் குறைவே இல்லை. உங்கள் வாள் வலிமைக்குப் பயந்து அவன் தன் மலையை ஒருபோதும் உங்களுக்குத் தாரை வார்க்க மாட்டான்'.

    இப்படியெல்லாம் பேசிய கபிலர், கிண்டலாக மூவேந்தரிடம் இன்னொன்றையும் சொல்கிறார்.

    'பறம்பு மலையை நீங்கள் பெறுவதற்கு ஒரே ஒரு வழி உண்டு. அது என்னவெனில், வடித்து முறுக்கப்பட்ட சிறிய யாழினைப் பண்ணிக் கொண்டு, நறுமணம் கொண்ட கூந்தலை உடைய உங்கள் விரலிகள் பின்னே வர, இரவலராய் ஆடியும் பாடியும் நீங்கள் வருவீர்களானால், கலைக்குத் தானமாக பறம்பு நாட்டையும், பறம்பு மலையையும் உங்களுக்குத் தருவான். எனினும், ஏற்கனவே பல கலைஞர்கள் வந்து ஆடிப் பாடி பறம்பு நாட்டின் முந்நூறு ஊர்களையும் பரிசாகப் பெற்றுச் சென்றுவிட்டார்கள். எனவே, பறம்பு மலையோடு நானும் பாரியும்தான் மிச்சம். தாமதம் பண்ணிவிட்டீர்களே' என்று பரிதாபப்படுவதுபோல் கபிலர் சொன்ன வார்த்தைகள்தான் மூவேந்தரை மூர்க்க வெறி கொள்ளச் செய்தது.

    விளைவு? பாரி கொல்லப்பட்டான். அவன் மகளிர் அனாதைகளாயினர்.

    இருவருக்கிடையே பிரச்சினை வருகின்ற போது, இன்னொருவர் பேசும் வார்த்தைகள் அந்தப் பிரச்சினையை நீக்குவதாக இருந்தால் நல்லது. கோபப்படுவது எப்படி குற்றமோ, அதைவிட பெரிய குற்றம் கோபமூட்டுவது. எனவே, நாம் கோபப்படுகிறோமோ இல்லையோ, கோபமூட்டாமலிருக்கத் தெரிய வேண்டும்.

    பலதரப்பட்ட நண்பர்கள், கருத்தொற்றுமை இல்லாத உடன்பணியாளர்கள், சுயநலமான சொந்தங்கள், புரிந்தவர்கள், புரியாதவர்கள் - இப்படி விதவிதமான மனிதர்களிடையில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. முரண்பாடுகள் வரலாம். அதில் தவறில்லை. மோதல்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கென்றே பலர் இருக்கிறார்கள். நாம் பலியாகிவிடக் கூடாது.

    ஆனால், கோபமே இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா? முடியாதுதான். ஏனெனில், உணர்வுகளால் ஆனது வாழ்க்கை. கோபமும் ஒருவகையான உணர்வுதானே. நமக்கு யாராவது அநியாயமோ துரோகமோ செய்துவிட்டால், அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. அது முற்றும் போது கோபமாக உருவெடுக்கிறது. எனினும், கோபத்தைக் கையாள நாம் பழகிக் கொள்ள வேண்டும். எப்படி? அதற்குச் சில எளிய வழிமுறைகள்:

    கோபம் என்பது, நம் புத்தி செயல்படுவதற்கு முன்பே ஆழ்மனத்தில் இருந்து வரும் ஓர் உணர்வு. அதனால், கோபம் ஏற்படும் சூழ்நிலை வரும்போது ஒரு 5 நிமிடம் தியானம் செய்தால் போதும். புத்தி விழித்துக் கொள்ளும். கோபம் மாயமாகிவிடும்.

    கோபம் எழும் வேளையில் நாம் சுய உணர்வை இழந்துவிடக் கூடாது. 'கோபம் வந்தாலும் ஆத்திரப்பட்டு யாரிடமும் எதையும் பேசிவிடக் கூடாது' என்னும் உறுதிப்பாடு மனதில் வேண்டும்.

    கோபம் வரும்போது எளிதாக சுவாசப் பயிற்சி செய்யலாம். ஒன்றுமுதல் ஆறுவரை எண்ணியபடி, மெதுவாக மூச்சை உள்ளிழுங்கள். பின்னர் அதேபோல், ஒன்றுமுதல் ஏழுவரை எண்ணிக்கொண்டு மூச்சை அடக்க முயற்சி செய்யுங்கள். இறுதியாக, ஒன்றுமுதல் எட்டுவரை எண்ணிக்கொண்டு, மூச்சை நிதானமாக வெளியே விடுங்கள். இப்படி பத்து முறை செய்தால் போதும். கோபம் மட்டுமன்றி, பதற்றமும் பயமும்கூட பறந்துவிடும்.

    சிலருக்குக் கோபம் வந்துவிட்டால், இதயத்துடிப்பு அதிகமாகும்; நகங்களைக் கடித்திழுப்பார்கள்; பற்களை நறநற என்று கடிப்பார்கள்; கைகளைப் பிசைவார்கள். நீங்களும் அப்படியெனில், உங்கள் மனதை உடனடியாக அமைதிப்படுத்துங்கள். நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்யுங்கள். இனிமையான இசையைக் கேளுங்கள். புத்தகத்தை வாசியுங்கள். உங்கள் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்; தசைகள் நிதானமாகும்.

    கோபப்படும்போது நூற்றுக்கணக்கான நரம்புகள் செயல்படுகின்றன. அதிகப்படியான கோபத்தில் நரம்புகள் விரைவில் செயல் இழந்துவிடுகின்றன. கோபம் மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்துவிடும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    மூளையைப் பாதிக்கும் பக்கவாதத்துக்குக்கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் நம்மை அழிப்பதற்குள் நாம் அதை அழித்துவிட வேண்டும். சினம் கொண்டவன் தன் மன நிம்மதியை இழக்கிறான். அவனுடைய மனைவி பிள்ளைகளும்கூட அவனுடன் பேச அஞ்சுகிறார்கள். அத்தகைய பொல்லாத கோபம் நமக்குத் தேவைதானா! கோபம் என்பது வீரம் அல்ல; அது நம் பலவீனத்தின் வெளிப்பாடு. எனவே, கோபத்தைத் தவிர்ப்போம்; குற்றங்களைத் தடுப்போம். அன்பின் வழியில் வாழ்வை வளப்படுத்துவோம்.

    • 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பனை விதைகளை விதைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • செருதூர் கடற்கரை–யிலிருந்து- ராமர்மடம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு பனை விதை நடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சியானது 6 கி.மீ தூரம் கடற்கரை கொண்ட கிராமமாகும். 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மற்றும் 2018ம் ஆண்டு வீசிய கஜாபுயல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்த கடலோர கிராமம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது

    அதனை தடுக்கும் வகையில் இயற்கை அரணாக விளங்கும் பனை மரத்தை அதிக அளவில் நட வேண்டும் என ஊராட்சி சார்பில் திட்டமிட்டு 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பனை விதைகளை விதைக்க இலக்கு நிர்ணயிக்க–ப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன் தொடங்கி வைத்தார்

    செருதூர் கடற்கரை–யிலிருந்து- ராமர்மடம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு பனை விதை நடப்பட்டது இதன் மூலம் கிராமத்தை பெரிய அளவிலான பாதிப்பிலிருந்து காக்க முடியும் என தெரிவித்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி வெற்றிச்செல்வன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யா தமிழரசன், ஊராட்சி செயலர் ச.சீதா, வார்டு உறுப்பினர் செல்வம், செல்வி, கலாநிதி மக்கள் நல பணியாளர் செல்வி கலந்து கொண்டனர்.

    • எல்லா கோபத்துக்கு பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது.
    • எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை தருகின்றன.

    கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்கு போட்டியாக இருப்பதை பயமுறுத்தி விரட்டவும் உருவான ஒரு செயல். அதுவே மனிதர்களுக்கான காரணம் என்றால், பின்வருமாறு சொல்லப்படுகிறது.

    ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக்கொண்டுவர உதவும் ஒரு நடவடிக்கையாக கோபம் உருவாகிறது.

    எல்லா கோபத்துக்கு பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது. கோபத்தின்போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

    கோபத்தை குறைப்பதற்கு அடுத்து என்ன செய்யலாம் என அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கும் மூளையில் சில பகுதிகள் உள்ளன.

    மன அழுத்தம், விபத்து, மூளையில் ஏற்படும் நோய்கள், மது போன்றவை மூளையின் கோபத்தை கட்டுப்படுத்தும் பகுதியை பாதிக்கின்றன. அதனால் சிறு விஷயங்களுக்குக்கூட கட்டுப்படுத்த முடியாமல், ஏன் காரணமே இல்லாமல்கூட கடுங்கோபம் ஏற்படுகிறது. அதனால்தான் 'ஆறுவது சினம்' என அவ்வையார் கூறியுள்ளார்.

    அளவுக்கு அதிகமான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

    எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை தருகின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஏற்க தொடங்கினாலே பாதி கோபம் குறைந்துவிடும்.

    இன்னொரு முக்கியமான விஷயம் கோபம் என்பது அனிச்சையாக நடைபெறும் ஒரு பழக்கம். சூடான பாத்திரத்தை தொட்டவுடன் கை அனிச்சையாக பின்செல்வதுபோல், ஒரு நிகழ்வு நடந்ததும் யோசிக்காமல் அனிச்சையாக கோபப்பட்டு பலரும் பழகி இருக்கிறோம். தினமும் காலை எழுந்ததும் ஓர் 5 நிமிடம் இன்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம், என்கிறார்கள் உளவியலாளர்கள்.

    • மனைவி மீதான கோபத்தில் மகனை வீட்டில் அடைத்து சி்த்ரவதை செய்த தந்தை போலீசார் தேடி வருகின்றனர்.
    • தந்தை விளக்கால் பெற்ற மகனையே குத்தியுள்ளார். வலியால் துடித்த சிறுவன் கதறி அழுதுள்ளான்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே உள்ளது சின்னகற்பூரம்பட்டியை சேர்ந்தவர் அறிவாணன் (வயது32). இவரது மனைவி ரோஜா (29) இவர்களுக்கு ஜீவா(8) என்ற மகனும், நிலா என்ற மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் ரோஜா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவியின் மீது ஆத்திரத்தில் இருந்த அறிவாணன் சம்பவத்தன்று தனது மகன் ஜீவாவை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு விளக்கால் பெற்ற மகனையே குத்தியுள்ளார். வலியால் துடித்த சிறுவன் கதறி அழுதுள்ளான்.

    இந்த நிலையில் மாயமான மகனை பல்வேறு இடங்களில் ேதடி பார்த்து உள்ளார். அப்போது ரோஜாவின் உறவினரான இன்பவள்ளி என்பவர், கணவர் வீட்டிலிருந்த மகனின் சத்தம் கேட்டதாக கூறியுள்ளார்.

    இதனை அடுத்து ரோஜா கணவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது சிறுவன் ஜீவா காயங்களுடன் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அவரது தாயார் உடனடியாக மகனை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கமலமுத்து, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் வழக்குப்பதிவு செய்து அறிவாணனை தேடி வருகின்றனர். மனைவி மீது உள்ள கோபத்தில் பெற்ற மகனை தந்தை சித்ரவதை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோபத்தை ஆக்கப்பூர்வமாக எப்படி மாற்ற முடியும்... கோபத்தை எப்படிக் கையாள்வது... யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் எப்படிக் கட்டுப்படுத்துவது? என்று அறிந்து கொள்ளலாம்.
    * கோபம் வரும்போது உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள். இதயத்துடிப்பு அதிகமாவது, நகங்களைக் கடிப்பது, வேகமாக சுவாசிப்பது, பற்களைக் கடிப்பது, கைகளை இறுகப் பிடிப்பது இவற்றில் ஏதேனும் சிலவற்றை நீங்கள் செய்துகொண்டிருந்தால், உடனடியாக உங்கள் மனதைச் சாந்தப்படுத்துங்கள். இதுபோன்ற செய்கைகளில் நீங்கள் ஈடுபடும்போது, உங்களுக்கு நீங்களே `அமைதியாக இரு... பொறுமையுடன் இரு... சாந்தமாக இரு’ எனத் தொடர்ந்து சொல்லுங்கள். இவை எல்லாம் தற்காலிகமாக உங்கள் கோபத்தைத் தள்ளிப்போட உதவும்.

    * சுவாசிப்பதில் கவனம் செலுத்தலாம். உதாரணமாக, ஒன்று முதல் ஆறு வரை மனதில் எண்ணிக்கொண்டே மெதுவாக மூச்சை உள்ளிழுங்கள். பின்னர், அதேபோல ஒன்று முதல் ஏழு வரை எண்ணிக்கொண்டே மூச்சை அடக்க முயற்சி செய்யுங்கள். இறுதியாக, மனதில் ஒன்று முதல் எட்டு வரை எண்ணிக்கொண்டு மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். இப்படி பத்து முறை செய்து பாருங்கள்... கோபம் மட்டுமல்லாமல், பதற்றமும் பயமும்கூடக் குறைந்துவிடும்.

    * சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்படும். அப்போது, வீட்டில் ஒரு தனி அறைக்குள் போய், தாழிட்டுக்கொண்டு தலையணையிடம் கோபத்தைக் காண்பிக்கலாம். ஆனால், அதுவும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற சூழலில் ஓர் அழகான கவிதையை எழுத முயற்சிப்பதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

    * விரும்பத்தகாத சூழலில் கோபமான மனநிலையை மாற்றுவதற்காக, மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறிது நேரம் பேசலாம். நகைச்சுவை மற்றும் செல்லப் பிராணிகளின் வீடியோக்களை பார்ப்பதால், உடனடியாக மனம் மாறும். கோபம் ஏற்படும் சூழலில் மனதில் ஒன்று முதல் பத்து வரை எண்ண ஆரம்பியுங்கள். பின்னர், அதையே மீண்டும் பத்தில் இருந்து ஒன்று வரை ரிவர்ஸாக எண்ணவும். இந்தக் கால அவகாசம், உங்கள் மனநிலையைச் சற்று மாறச் செய்யும்.

    * கோபம் தணிந்ததும், அதற்கானக் காரணம் என்ன... எப்படி... எதனால்... யார் மீது தவறு என்பதை எல்லாம் நிதானமாக நினைத்துப் பாருங்கள். உங்கள் மீது தவறு இருந்தால், திருத்திக்கொள்ளுங்கள். பிறர் மீது தவறு இருந்தால், ஒரு வாரம் கழித்து அவர்களிடம் நடந்தது என்ன என்பதைத் தெளிவாக விளக்குங்கள். நீங்கள் காயப்பட்டதையும்கூட பொறுமையாக எடுத்துச்சொல்லுங்கள். இதனால், உறவுகளிடம் சிக்கல் ஏற்படாது.



    * காரணமில்லாமல் கோபம் வருவது, அந்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் முரட்டுத்தனமாகச் செயல்படுவது போன்ற அதீத உணர்ச்சி வெளிப்பாடு இருந்தால், அவசியம் மனநல ஆலோசகர் அல்லது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

    * கோபம் வரும்போது வெளியே போய், சிகரெட் பிடிப்பது, டீ குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், கண்களை மூடி உட்காருங்கள். அல்லது தனி இடத்துக்குச் சென்று, குறைந்தது பத்து நிமிடங்களாவது உட்கார்ந்துவிட்டு வாருங்கள். ஃபிரெஷ் ஜூஸ், ஐஸ்க்ரீம் போன்ற சுவையான உணவுகள் மனம் அமைதிபெற உதவுபவை.

    * பசி, அசிடிட்டி, அல்சர், அதீதப் பசி, தலைவலி போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு அதிகக் கோபம் வரும். இவர்கள் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். அதுவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளாகச் சாப்பிடுவது நல்லது.

    * மகிழ்ச்சியான சூழலும் மனநிலையும் வேண்டுமெனில், நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்தெடுங்கள். சிந்திப்பது, பேசுவது, செய்வது என எல்லாவற்றையும் பாசிட்டிவ் கோணங்களில் செய்துவந்தால், மகிழ்ச்சியான சூழல் உங்களைத் தழுவிக்கொள்ளும்.

    * சிலருக்குக் கோபம் நோயின் அறிகுறியாக இருக்கும். ஓவர்ஆக்டிவ் தைராய்டு, அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரைநோய், மனச்சோர்வு, மறதி நோய், ஆட்டிசம், தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளால்கூட கோபம் வரலாம். இவர்கள் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.
    கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க ஆரம்பிக்கும்.
    தவறு செய்பவர்கள் யார் மீது கோபப்பட்டாலும் அதனால் கோபப்படுபவரின் உள்ளம் வெந்து, கண்கள் சிவந்து, வயிறு எரிய கோபம் கொள்ளும் போது ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்தால் கோபப்படுபவரின் உடல் நலன் தான் கெட்டுப்போகும். ஆகவே கோபம் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள் உண்டு என்பதை இங்கு பார்க்கலாம்.

    பெண்களே உங்களுக்கு கோபம் வரும் போது தயவு செய்து ஒரு முறை உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் நின்று உங்கள் உருவத்தை பாருங்கள். முகம் அஷ்ட கோணலாகி, கண்கள் சிவந்து நீர் வழிய, மூக்கு விடைக்க, நரம்பு வெளியே தெரிய நீங்களே விரும்பாத உங்கள் முகத்தை உங்களை சுற்றி உள்ளவர்கள் எப்படி சகித்துக்கொள்வார்கள் என்று ஒரு கணம் சிந்தித்து இருக்கிறீர்களா?

    ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு கோபம் வருவது குறைவாக இருக்கலாம். ஏனென்றால், அவர் தன் மீது எப்போதும் இறைவன் பார்வை விழுந்து கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறார். அதனால் கோபம் குறைகிறது. கோபங்களை குறைத்துக்கொள்ள ஆன்மிகம், யோகா, தியானம் போன்ற ஞான மார்க்கத்தில் ஈடுபட்டால் கோபம் வருவது குறையும். ஆனால் இதிலும் மனதை அடக்க தெரிந்தவர்களுக்கே சாத்தியம். அதே போல் மறதி பல உறவுகளுக்கு பாதையை அமைக்கும்.



    இதனால் தான் நமது பெரியவர்கள் சொன்னார்கள். “குற்றம் பார்க்கின் சுற்றும் இல்லை“ என்று? மாமியாரின் குத்தல் பேச்சுகளை மருமகள் மறந்தால் தான் வீட்டில் அமைதி நிலைக்கும். கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க ஆரம்பிக்கும்.

    இப்படி ஒருவர் மேல் ஒருவர் வரும் கோபத்தை மறப்பதுடன் அவரை மன்னித்தால் அவரும் திருந்துவார். அங்கே அன்பும், சமாதானமும் நிலைக்கும். இதனால் ஏட்டிக்கு போட்டி நான் தான் பெரியவன், எனக்கு தான் எல்லாம் தெரியும், இது என்னால் மட்டும் தான் முடியும் என்ற சுயநலம் பறந்தோடி உறவுக்கு உயிர்கொடுக்கும். ஒருவரை ஒருவர் மன்னிப்பதால் அங்கே அமைதி நிலைத்து நிற்கும்.

    அராஜகமும், தீவிரவாதமும் விரட்டி அடிக்கப்படும். இதைத்தான் கவிஞன் ஒருவன் கூறுகிறான். மண்ணில் மன்னிக்க தெரிந்தவன் மகாத்மா ஆகிறான் என்று. இதே கருத்தைத்தான் அனைத்து மதங்களும் எடுத்துரைக்கின்றன. அறிவியல் விந்தைகள் நிகழ்ந்து வரும் இந்த காலத்தில் மன்னிப்பு என்ற கேடயத்தை நாம் கையில் வைத்திருந்தால், கோபம், துன்பம் என்ற அரக்கர்கள் நம்மை அணுகமாட்டார்கள்.
    குழந்தைகளின் மனது சின்னச் சின்ன பாராட்டுகளுக்காக எப்போதும் ஏங்கி நிற்கும். அதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினாலே தோல்வி என்கிற வலைக்குள் அவர்கள் விழ மாட்டார்கள்.
    குழந்தைகளின் மனது சின்னச் சின்ன பாராட்டுகளுக்காக எப்போதும் ஏங்கி நிற்கும். அதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினாலே தோல்வி என்கிற வலைக்குள் அவர்கள் விழ மாட்டார்கள்.

    உங்கள் குழந்தைக்கு, இயல்பிலே நல்ல குணங்கள் இருக்கலாம். அந்தக் குணத்தை தக்க வைக்க, அவை வெளிப்படும்போதெல்லாம் பாராட்டுங்கள். குழந்தைகளைப் பாராட்டும் போது, எந்தச் செயலுக்காகப் பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுவதுதான் சரி. அவர்களை தன் செயலில் தெளிவுடன் இறங்க வைக்க இதுதான் நல்ல வழியும் கூட.  

    பாராட்டுகளைப் பொறுத்தவரை, அவை வாய் வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு தட்டிக்கொடுத்தலோ, ஒரு முத்தமோ, அன்பான அழுத்தமான அணைப்போ, ஆச்சர்யப் பார்வையோ, தலை கோதி விடுதலோ, பிடித்த இடத்துக்கு அழைத்துச் செல்வதோ, பிடித்த உணவைச் சமைத்து தருவதாகவோகூட இருக்கலாம்.  

    உங்கள் குழந்தையின் ஏதேனும் ஒரு சிறப்பான செயல்பாட்டினை, அவர்களுக்குப் பிடித்தவர்களின் முன்னிலையில் வைத்து பாராட்டுங்கள். இது அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இது போன்ற செயல்களைச் செய்யும் ஊக்கத்தையும் அளிக்கும்.

    நம் பாராட்டுதல்கள் குழந்தையை ஊக்கப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பிறரைப்பாராட்டும் தன்மையைக் குழந்தையிடம் வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் ஏற்று அதையும் மனதார பாராட்டுவதை குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பழக்குங்கள். இதுஅவர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்கும்.

    திறனை வெளிப்படுத்தும் போதும், போட்டிகளில் வெற்றி பெறும் போதும் மட்டும் பாராட்டாமல், தோல்வி அடையும் போதும், குழந்தையின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பாராட்டுதல் வேண்டும்.

    ஒருமுறை பாராட்டிவிட்டு அந்தத் திறமையை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்த்தெடுக்க வழியாக இருந்து உதவுங்கள். அவர்களின் அடுத்தகட்ட நகர்வுக்கு அதுதான் உதவும்.

    பாராட்டு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது. உணர்வுரீதியான மற்றும் சமுக ரீதியான சரியான வளர்ச்சிக்கு குழந்தைகளுக்குப் பாராட்டு என்னும் வைட்டமின் சத்து மிக மிக அவசியம். 
    குட்டீஸ்... சமர்த்துப் பிள்ளையான உங்களை, நீங்கள் ரொம்ப கோபப்படுவதாக மற்றவர்கள் கூறுவதுண்டா? அப்ப கோபத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்...
    உங்களுக்கு கோபம் வருமா? குட்டீஸ். அம்மா, நீங்கள் கேட்ட பொம்மையை, சாக்லெட்டை வாங்கித் தராவிட்டால் கோபம் வந்துவிடுகிறதா? அம்மா கூப்பிட்டாலும் சத்தம் கொடுக்காமல் முகத்தை திருப்பிக் கொள்கிறீர்களா? கோபம் கொடியது என்பதை நீங்கள் அறிவீர்களா? கோபம் ஏன் வருகிறது? கோபத்தால் விளையும் தீமைகள் என்ன? கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி அறிந்து கொள்ளலாம்...

    * உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடாக கோபம் வருகிறது. வெறுப்பு, வலி, பயம் ஆகியவையே கோபத்தின் வேர்களாக உள்ளன. ஆரம்பத்தில் எதிர்பார்ப்பின் காரணமாக வெறுப்பும், வலியும் ஏற்படலாம். நம்பிக்கையின்மை, அறியாமை, சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயமும், கோபம் உருவாக காரணமாகலாம். நீங்களாக யோசித்துப் பார்த்தால் கோபத்தின் அடியில் இந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு இருப்பதை உணரலாம். எதிர்பார்ப்பை குறைப்பதன் மூலம் வெறுப்பை தணிக்கலாம். வெறுப்பை கைவிட்டால் கோபமும், துன்பமும் பறந்துபோகும்.

    குட்டீஸ்... சமர்த்துப் பிள்ளையான உங்களை, நீங்கள் ரொம்ப கோபப்படுவதாக மற்றவர்கள் கூறுவதுண்டா? கோபத்தால் உண்டாகும் தீமைகளை இங்கே தெரிந்துகொண்ட பிறகும் கோபப்படுவது தவறு என்பதை புரிந்து கொண்டீர்களா? கோபத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்...

    * பேசுவதில் கவனம் வையுங்கள். இனிமையாக பேசுங் கள். உங்கள் வார்த்தைகள் மற்றவர் மனதை காயப் படுத்தாத வகையில் இருந்தால் அவர்களும் உங்க ளை கோபப்படும் அளவுக்கு காயப்படுத் தமாட்டார்கள்.

    * விளையாட நேரம் ஒதுக்குங்கள். அது மனதை பக்குவப்படுத்தும். சவாலான நேரங்களையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை எட்டும்.

    * சிறிது நேரம் வெளியே சென்று வாருங்கள். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.

    * நான் சரியாகத்தான் நடந்து கொண்டேன், எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போன்ற கர்வ நடத்தைகளை தவிருங்கள்.

    * வேலையில் மூழ்கி மனவருத்தங்களில் இருந்து விடுதலை பெறுங்கள்.

    * மூச்சுப் பயிற்சியும் மனநிலை மாற்றத்திற்கு துணை செய்யும். 
    ×