search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோபம் அடைந்த பெண்ணின் புகைப்படத்தால் வைரலான காய்கறி கடை
    X

    கோபம் அடைந்த பெண்ணின் புகைப்படத்தால் வைரலான காய்கறி கடை

    • இதுதொடர்பாக 3 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
    • அதே நேரம் வைரலான இந்த புகைப்படத்தால் பயனர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

    பெங்களூரில் உள்ள காய்கறி கடை ஒன்றில் கோபம் அடைந்த பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிகாரிகா என்ற பயனர் எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக 3 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், காய்கறி கடையில் கோபம் அடைந்த பெண்ணின் புகைப்படம் உள்ளது. அதன் அருகில் ஒரு மரத்திலும் அந்த கோபக்கார பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    இந்த புகைப்படங்கள் எதற்காக அங்கு இடம்பெற்றுள்ளது என்ற விபரங்கள் வெளியாகவில்லை. அதே நேரம் வைரலான இந்த புகைப்படத்தால் பயனர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படத்தின் பின்னால் ஏதேனும் கதை உள்ளதா? என ஒரு பயனரும், இந்த படம் போட்டோஷாப் செய்யப்பட்டதா? என மற்றொரு பயனரும் கேள்வி எழுப்பி உள்ளனர். சில பயனர்கள் கேலியான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×